என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு மருத்துவ முகாம்"

    • வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசிரஅள்ளி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.மொரப்பூர் அரசு மருத்துவ அலுவலர் வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.வி.ரவிச்சந்திரன்,ஜி.ரவிச்சந்திரன், தாசிர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தமிழ் செல்வி ரங்கநாதன்,துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுகாதார ஆய்வாளர் சங்கர் வரவேற்று பேசினார்.மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன்இம் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து முகாமின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். முகாமில் ரத்த அழுத்தம்,சக்கரை நோய் அளவு,உப்பு அளவு மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்தும் விளக்கப்பட்டது.

    இம்முகாமில் தாசிர அள்ளி,அண்ணா நகர்,தாசிர அள்ளி புதூர்,காந்திநகர், போடிநா யக்கன்பட்டி,ரெட்டிபட்டி, ஆவலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் பெற்று பயனடைந்தனர்.இம் முகாமில் முல்லை கோபால்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், முன்னாள் துணை தலைவர் ஜெமினி, டி.ஆர்.எஸ். செந்தில் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.

    • மருத்துவ முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
    • பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். துளீர் அமைப்பு சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி டாக்டர் தர்மராஜ் செல்லையா தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கண்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன், முனைப்பு அலுவலர் புலவர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டபட்டியில் தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர். விக்னேஷ், டாக்டர் ராஜரவிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் பரமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    • கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமினை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமிற்கு வந்த பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய், டெங்கு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமில் சிகிச்சைகளுக்கு தேவையான மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் மாநகர நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தி, இந்துஜா, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

    • ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • சித்த மருத்துவ முகாமை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார்.

    செய்துங்கநல்லூர்:

    கிள்ளிகுளம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கடந்த 3-ந்தேதி முதல் நாளை வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, சித்த மருத்துவ பிரிவு ஆரம்ப சுகாதார நிலையம், வல்லநாடு இணைந்து ஆழ்வார்கற்குளத்தில் பொதுமக்களுக்கு நடத்தும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது.

    இதனை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார். இதில் சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், சித்த மருத்துவத்தின் தொன்மை மற்றும் சிறப்பினைப் பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும், மருந்தாளுனர் வெங்கடேசன் பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கினார். முடிவில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சிவசங்கரன், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநகர பகுதிகளில் பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் பயன்படுத்து வதற்காக பல பூங்காக்களை செப்பனிட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதன் ஓரு பகுதியாக டூவிபுரத்தில் உள்ள சங்கர நாராயணன் பூங்கா மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் கரிசல் இலக்கிய பூங்காவையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களிடம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்க ளையோ, பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வைத்திருக்கவோ, விற்கவோ வேண்டாம் என்று மேயர் கேட்டுக் கொண்டார்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 2956 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். இந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயலாக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் ஏற்ப டும் சிரமங்களை தவிர்ப்ப திலிருந்து அவர்கள் கற்கும் திறன் அதிகரிக்க பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    குறைவான பாதிப் பினை உடைய 2492 மாற்றுத்திறன் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கபட்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிகமான பாதிப்பினை உடைய மாற்றுதிறன் குழந்தைகளைப் பராம ரிப்பதற்கு போதிய வசதி யில்லாததாலும், குடும்ப சூழ்நிலையாலும் பெற் றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் உள்ளடக்கிய கல்வி மையங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறன் கொண்ட குழந் தைகளுக்கு பயிற்சியும், சிகிச்சையும் தருவதற்கு அவர்களின் வீடுகளுக்கே சிறப்பாசியர்கள் முற்றும் இயன்முறை மருத்துவர்கள் சென்று வருகின்றனர். வீட்டு மட்டத்தில் பயிற்சி பெறும் 262 குழந்தைகளின் உடல் நலம், மனநலம், அறிவு வளர்ச்சி போன் றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு முறையான மதிப்பீடு செய்து அவர்க ளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தல், தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை வழங்குதல், பேருந்து, ரெயில் பயண அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்புத் தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளி களை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.

    வட்டார வள மையம் வாரியாக ராஜாக்கமங்க லத்தில் 31-ந்தேதி ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, தக்கலைக்கு பிப்ரவரி 1-ந்தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்புறத்திற்கு 3-ம் மேல்புறம் அரசு உயர்நிலைப் பள்ளி,அகஸ்தீஸ்வரத்திற்கு 7-ந்தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, திருவட்டாருக்கு 10-ந்தேதி திருவட்டார் அரசு உயர் நிலைப் பள்ளி, தோவாளைக்கு 14-ந்தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, கிள்ளியூருக்கு 15-ந்தேதி கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறைக்கு, 17-ந்தேதி முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, குருந் தன்கோடுக்கு பிப்ரவரி 21-ந்தேதி கடியப்பட்டணம் இருப்பு மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.

    இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • 35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டார கல்வி வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு தலைமையேற்று நடத்தினார் . வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ், வேதா மற்றும் கோவிந்தப்பா முன்னிலை வகித்தனர்.

    மருத்துவ முகாமில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், முட நீக்கியல் மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர் உள்ளிட்ட சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பரிசோதனை செய்து அரசு நல திட்டங்களை பெறவும், மருத்துவ சிகிச்சை பெறவும் பரிந்துரை செய்தனர்.

    இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி குழந்தைகள் 62 பேர் கலந்து கொண்டனர். 28 மாணவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர். 33 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பெற பரிந்துரைக்கப்பட்டது. 

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
    • 31 பேர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப், தூத்துக்குடி ராயல் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப் சங்கம், புதியம்புத்தூர்இளங்கோவன் அறக்கட்டளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 256 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 31 பேர்கள் கண் ஆபரேஷன் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது. முகாமில் சிறப்பு மருத்துவர் சிப்ரா, ராயல் பியர்ல் சிட்டி வேதமாணிக்கம், ஜெயம் மண்டலத் தலைவர் ஜெயக்குமார், ஜே.கே.ஆர் முருகன், முத்தமிழ் செல்வன், லயன்ஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாளை எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளனர். இதில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
    • மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்ட பள்ளியில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    மூக்கண்டபள்ளியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.

    முகாமில், ஊட்டச்சத்து பொருட்கள், மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கி, முகாமில் பேசினார். மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பேசினர். முகாமில், , மாநகராட்சி மண்டல தலைவர்கள்,பொது சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களும், அரசு மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    ×