search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு"

    • மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது.
    • 2 ஆறுகளை இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளததில் மிதக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்துவிடப்பட்டது.

    மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது. அதன் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு பெய்த கனமழையாலும் சென்னை வெள்ளக் காடானது.

    வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஆனாலும் தனித் தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது. எனவே சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வடசென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறுகளில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

    காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துைரக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும்.

    பஞ்செட்டி வரை கடல்நீர் கிட்டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

    ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட்புகுவதை குறைக்க முடியும்.

    ஆறுகள் இணையும் இடங்களில் இணைப்பு காய்வாயுடன் அணைகள் கட்டப்பட்டு வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் தேங்கியது
    • குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தொகுதி நயம்பாடி அண்ணாமலைநகரில் நேற்று பெய்த மழையில் வடிகால் சரியாக தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் வெள்ளம் தேங்கியது.

    இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் முறையிட்டபோது:-

    2 நாட்களில் வற்றி விடும் அதை பொறுட்படுத்தார்கள் என்று கூறியுள்ளனர். குழைந்தைகள் மற்றும் வயது முதியோர்கள் நடமாடும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை குறுகிய காலத்தில் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.
    • குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண குழு அமைக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் பள்ளம் என 10 கி.மீ., தூரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன.மழைக்காலங்களில் எளிதாக வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவுநீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாறியுள்ளன.

    இதனால் நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.தற்போது நாராயணன் காலனி, கழுத்தறுத்தான் பள்ளம் பகுதிகளில் கான்கிரீட் கரைகள் அமைக்கும் பணி ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.இப்பணி நடந்தாலும், நகரின் இயற்கை நீர் வழித்தடங்களில் புதர் மண்டியும், முட்செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. இதனால் மழை வெள்ள நீர் எளிதில் வடிய வழியில்லை. மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதோடு நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன.குடியிருப்பு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை நீர் வடிகால் தூர்வாரப்பட்டாலும், பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தூர்வாரப்படாமல் உள்ளது.மழை பெய்தால், வெள்ள நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஓடியும், தேங்கியும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், ஓடைகள், மழை நீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.

    கிராமங்களிலும் ஓடைகள், குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். தாழ்வான பகுதிகளில்ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    குளம், குட்டைகள் மற்றும் அவற்றின் நீர் வழித்தடங்களை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும். பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.கிராமப்பகுதிகளில்தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மின் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பகுதி வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்.

    வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளுக்கு தேவையான, ரப்பர் படகு, கயிறு, மரங்கள் விழுந்தால் அகற்ற எந்திரம், மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில், மின் வாரியத்தில் சிறப்பு அதிகாரிகள் குழு அமைக்கப்பட வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள், பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.தற்போது பருவ மழை துவங்க உள்ள நிலையில்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு துறைகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பு குழு அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 24 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சில மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்று ஆற்றுக்குள் மூழ்கியது குறித்த வீடீயோ வெளியாகி உள்ளது.

    நல்பாரி மாவட்டத்தில் இரண்டு அடுக்குமாடி கொண்ட காவல்நிலையத்தை சுற்றி வெள்ளநீர் அதிகரித்து வந்த நிலையில், அரிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதை அங்கிருந்த கிராம மக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அந்த காவல்நிலைய கட்டிடம் நீண்ட நாட்களாக காலியாக இருப்பதால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.

    பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்க ளில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    28 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    ×