search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
    • ஞாயிற்றுக்கிழமை மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த மாதம் 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தது. அங்கிருந்து 23-ந்தேதி முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றன.

    திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சாமி சிலைகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் ஆரியசாலை கோவிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிகுதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தது.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரகோவில் வேளிமலை முருகன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பள்ளி வேட்டையை தரிசிக்க பூஜைபுரை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பள்ளிவேட்டை முடிந்த பின்னர், ஆரியசாலை கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.

    நவராத்திரி சாமி சிலைகளுக்கு நேற்று முன்தினம் நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி தேவி சாமி சிலைகள் நேற்று கிள்ளிப்பாலம் சந்திப்புக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரத்துக்கு புறப்பட்டன. வழிநெடுக சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது.
    • பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது.

    பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது. இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், சந்தைபேட்டை பகுதியில் உள்ள பகவதியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பகவதியம்மன் கோவில் முன்பு அம்புசேர்வையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
    • ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், விசேஷ பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் பரிவேட்டை மண்டபத்தை அடைந்து பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.

    அதைதொடர்ந்து வருடத்தில் முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார்.
    • பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விழாவின் 9-நாளான நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முத்துக்குமாரசுவாமி கோதமங்கலம் சென்றார்.

    கோதமங்கலம் கோதீஸ்வரர் கோவில் திடலுக்கு வந்த முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வாழை மரத்தால் அமைக்கப்பட்ட வன்னிகாசூரனை, முத்துக்குமாரசுவாமி அம்பு வில் கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கலந்துகொண்டு வதம் செய்தார்.

    பின்னர் வதம் நிகழ்ச்சி முடிந்ததும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தார். அதையடுத்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
    • நெல் மணிகளை அ.ஆ.இ எழுத்துகளை எழுதி வித்யாரம்பம் செய்வார்கள்.

    தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கூத்தனூரில் மட்டும் தான் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு திருப்பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நோட்டு, புத்தகம், பேனா, சிலேட் ஆகியவற்றை எடுத்து வந்து சரஸ்வதியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சரஸ்வதியை தரிசனம் செய்து நெல் மணிகளை அ.ஆ.இ எழுத்துகளை எழுதி வித்யாரம்பம் செய்வார்கள். அதன்படி நேற்று விஜயதசமி விழாவையொட்டி ஏராளமான குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து நெல்மணிகளில் அ, ஆ, இ எழுத்துக்களை சிறப்பு பூஜைகள் செய்து எழுதி (வித்யாரம்பம்) பழகினர்.

    • நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
    • ஆயுதபூஜை என பெயர் வந்ததற்கான கதை அறிந்து கொள்ளலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 10-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    10-வது நாள் 5-10-2022 (புதன் கிழமை)

    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)

    திதி: தசமி

    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

    நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.

    பூக்கள் : வாசனைப் பூக்கள்.

    • மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் ‘விஜயதசமி.’
    • விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    5.10.2022 விஜயதசமி திருநாள்

    அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழா, கடந்த 26-ந்தேதி தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடர்ந்து, 10-ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னையானவள், மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே 'விஜயதசமி' (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் 'ராம்லீலா' என்றும் கொண்டாடுகின்றனர்.

    புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் 'விஜயதசமி.' இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல் புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

    விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு 'வித்யாரம்பம்' என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங் களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

    • சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
    • இன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும்.

    விஜயதசமி என்றாலே வெற்றி திருநாள் ஆகும். அசுரனை அழித்த அன்னையின் வெற்றியே அது. அந்த திருநாளில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    சிவனை வழிபடத்தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோவிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் போற்றப்படுகிறது.

    இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு வைத்து நிவேதனம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் அம்மன் கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், கொலு பூஜைகளும் நடைபெறும்.

    தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருட்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற 3 சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாக தோன்றி மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை, சண்ட முன்டனை வதம் செய்த நன்னாள்தான் விஜயதசமி. அன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

    நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

    • குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விஜயதசமி சிறந்த நாளாகும்.
    • அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு விஜயதசமி தினம் 5.10.2022 புதன்கிழமை வருகிறது. குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கவும், புதிய பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவதற்கும் விஜயதசமி சிறந்த நாளாகும்.

    அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சந்திர ஓரையில் சேர்க்கலாம். அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குரு ஓரையில் பள்ளியில் சேர்க்கலாம்.

    இந்த இரு ஓரைகளில் சேர்த்தால், பாட்டு, நடனம் போன்ற கலைகளில் சிறப்பு ஏற்படும்.

    அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவதரித்த தினமும் ஆகும்.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளேபோற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியேபோற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய்போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமேபோற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளேபோற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியேபோற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய்போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமேபோற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய்போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மாபோற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியேபோற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையேபோற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவேபோற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    ×