search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று நான்காவது நாளுக்குரிய போற்றி பாடல்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று நான்காவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் கருணை வடிவே போற்றி

    ஓம் கற்பகத் தருவே போற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளே போற்றி

    ஓம் கரும்பின் சுவையே போற்றி

    ஓம் கார்முகில் மழையே போற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி

    ஓம் பகைக்குப் பகையே போற்றி

    ஓம் ஆவேசத் திருவே போற்றி

    ஓம் தீமைக்குத் தீயே போற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி

    ஓம் நாரணன் தங்கையே போற்றி

    ஓம் அற்புதக் கோலமே போற்றி

    ஓம் ஆற்றலுள் அருளே போற்றி

    ஓம் புகழின் காரணியே போற்றி

    ஓம் காக்கும் கவசமே போற்றி

    ஓம் ரோகிணி தேவியே போற்றி

    • தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.
    • இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி என்று முண்டாசுக் கவிஞன் பாரதி போற்றி, புகழ்ந்து பாடிய பெருமைக்குரிய கோவிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விளங்குகிறது. வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.

    பாணாசுரனின் அட்டகாசம்

    கடுமையான தவங்கள் மூலமாக அசுரர்கள் கூட கடவுளிடம் இருந்து பல்வேறு வரங்களை பெற்றுள்ளனர் என்று பழங்கால புராணங்கள் கூறுகின்றன. அந்த வரிசையில் பாணாசுரன் என்ற அரக்கனும், பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தையும், ஒரு கன்னிப்பெண்ணைத்தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும் பெற்றதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மென்மையான உடல் வாகுவையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப் பெண்ணால் தனக்கு எப்படி மரணம் நிகழ முடியும்? என்ற எண்ணத்தில்தான் பாணாசுரன் இந்த வரத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

    வரத்தைப் பெற்ற பாணாசுரனின் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு போயிற்று. முனிவர்களையும், தேவர்களையும் அவன் கொடுமைப்படுத்த தொடங்கினான். இதனால் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியது. உலகில் தீமையும், பாவமும் பெருகின. அறியாமையும், அநீதியும் ஆட்சி புரிந்தன. மூவுலகில் உள்ள தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் முனிவர்களும், தேவர்களும் விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். அப்போது விஷ்ணு, பாணாசுரன் பெற்ற வரத்தையும், ஒரு கன்னிப் பெண்ணால் தான் அவனை அழிக்க முடியும் என்ற ரகசியத்தையும் அவர்களுக்கு கூறினார்.

    திருவிளையாடல்

    விஷ்ணுவின் அருகில் அமர்ந்திருந்த சிவபெருமான் இதற்கு தீர்வு வழங்கினார். பாணாசுரனை, பராசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் என்றார். இதனால் தேவர்களும், முனிவர்களும் பராசக்தியை வேண்டி பெரும் வேள்வியை மேற்கொண்டனர். வேள்வி முடிவில் சக்தி தேவி வெளிப்பட்டு பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து நன்மையும், அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி கொடுத்தாள்.

    தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற சக்திதேவி கன்னிப்பெண்ணாக தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். அவள் சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவரை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள். அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் ஊரில் தாணு என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் சிவபெருமான். இதனை அறிந்த தேவர்களுக்கு பயம் வந்து விட்டது. சக்தி தேவிக்கு திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது? என்பதுதான் அவர்களுடைய பயம். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த நாரதருக்கு மட்டும் இது அந்த சிவபெருமானின் திருவிளையாடல்தான் என்பது தெரிந்திருந்தது.

    திருமணம் நின்றது

    சக்தி தேவிக்கும், சிவபெருமானுக்கும் நடத்த வேண்டிய திருமண பேச்சு சபைக்கு வந்தது. ஆனால் இந்த திருமணம் எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமாகவும், நாரதரின் எண்ணமாகவும் இருந்தது. நாரதரும் திருமணத்தை நிறுத்த கலகத்தை தொடங்கினார். நாரதரின் கலகம் நன்மையில் தான் போய்முடியும் என்பார்கள். நாரதர் சிவபெருமானை பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார். சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. தேவியிடமும் இந்த கோரிக்கை குறித்து கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்துக்கு முன்பு வரவில்லை என்றால் இந்த திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

    அவ்வாறே திருமணம் நடைபெறும் நாள் வந்தது. அன்று இரவு சிவபெருமான், குறித்த நல்ல நேரம் தவறிவிடக்கூடாது என எண்ணி சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவில் புறப்பட்டார். போகும் வழியெங்கும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனால் வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது நாரதர் ஒரு சேவல் உருவம் கொண்டு கூவினார். அதிகாலையில் கூவக்கூடிய சேவல் கூவியதால் பொழுது புலர்ந்துவிட்டது என தவறாக புரிந்துகொண்ட சிவபெருமான் சுசீந்திரத்துக்கு வருத்தத்தோடு திரும்பினார்.

    சிவபெருமான் மணம் முடிக்க வருவதாகக் கூறிவிட்டு, வராமல் போனது குமரி முனையில் திருமணத்துக்காக காத்திருந்த தேவிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    வதம்

    இதனால் திருமணத்துக்கு என்று சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவு பதார்த்தங்களையும், அலங்காரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த பூக்களையும் தேவி கடல் மணல் பரப்பில் வீசினாள். எனவே தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ண, வண்ண மணலாக மாறி காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. கடும் வருத்தத்தில் இருந்த தேவி, அதன் பிறகு என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து தனது தவத்தை தொடர்ந்தாள். இவ்வாறு தேவி கடும் தவம் இருக்கும்போது ஒருநாள் பாணாசுரன் தேவியின் அழகைப்பற்றி கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் தன்னை மணந்து கொள்ளும்படி அவளை வேண்டினான். ஆனால் தேவி அவனை மணம் முடிக்க மறுத்தாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி தன்னை மணம் முடிக்க சக்திதேவியை வற்புறுத்தினான். மேலும் தனது உடல் வலிமையால் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி தனது உடைவாளை உருவினான்.

    இத்தகைய தருணத்தை எதிர்நோக்கி இருந்த தேவியும் தனது போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தனது சக்கராயுதத்தால் பாணாசுரனை வதம் செய்தாள் தேவி. தேவர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றியதற்காக தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தி அருளினாள். அதன்பின் கோபம் தணிந்த தேவி, சாந்தி அடைந்து அன்று முதல் இன்றுவரை கன்னியாகுமரியில் கன்னிப்பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து அந்த சிவபெருமானை நினைத்து மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள். தவமிருந்தபடியே தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் போக்கி வருகிறாள் என்கிறது தல புராணம்.

    பரிவேட்டை நிகழ்ச்சி

    தேவி, பாணாசுரனை கொன்றழித்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் நவராத்திரி விழா இந்த கோவிலில் நடைபெறுகிறது. இதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் நட்சத்திர நிகழ்வாக கருதப்படுவது 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டையாகும். பரிவேட்டை நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். காலை 9.15 மணிக்கு பிறகு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன் பிறகு அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். அம்மன் எழுந்தருளி உள்ள வாகனம் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கையில் வாள் ஏந்தியபடியும், வில் அம்பு ஏந்தியபடியும் நடந்து செல்வர். ஊர்வலத்துக்கு முன்பு பஜனைக் குழுவினர் பஜனை பாடிச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்து நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்த படியும், பகவதி அம்மன் உருவப்படத்தை தாங்கிய படியும் அணிவகுத்துச் செல்வார்கள்.

    ஆராட்டு

    அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளிச் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக்கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்து வரவேற்பார்கள். மேலும் திருக்கண் சாற்றியும் வழிபடுவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் பரிவேட்டை ஊர்வலம் மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடையும். அங்கு கோவில் மேல்சாந்தி போற்றிகள் பூஜைகள் நடத்துவார்கள். அதன் பின்னர் அம்பு பாய்ந்த இளநீருடன் பக்தர் ஒருவர் அம்மன் வாகனத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

    பின்னர் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கு வாகனத்தில் கோவில் நோக்கி புறப்படுவார். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும். அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகத் திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் நவராத்திரி திருவிழாவின் கடைசி திருவிழாவான பரிவேட்டை திருவிழா அன்றும் திறக்கப்படும். இந்த முக்கிய நாட்களில் 1 மணி நேரம் மட்டுமே கிழக்கு வாசல் திறக்கப்படுவது வழக்கம். மற்ற நாட்களில் இந்த கிழக்கு வாசல் மூடியே இருக்கும். பரிவேட்டை முடிந்து திரும்பிய அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் எழுந்தருள்வார்.

    முக்கிய திருவிழாக்கள்

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் விசாக திருவிழா மற்றும் தேரோட்டம், தெப்பத் திருவிழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த திருவிழா நாட்களில் காலையிலும், இரவிலும் ஊர் தெருக்கள் வழியாக தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். 9-வது நாள் தேர்த்திருவிழாவும், 10-வது நாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

    கொடிமரக்கயிறு வழங்கும் மீனவர்கள்

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி கொடியேற்றத்துக்கு முந்தையநாள் மத நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் வகையில் கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் சார்பில் கொடிமர கயிறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

    விவேகானந்தர் வழிபட்ட அம்மன்

    1892-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரி முனை வந்து அம்மனை வழிபட்டு விட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் தியானம் செய்த பாறையில் அவர் நினைவாக மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    பரசுராமர் குமரி தெய்வ உருவை இந்த இடத்தில் அமைத்து வழிபட்ட தலம். குமரி கடல் முனையில் இருந்தாலும் கோவிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக்கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம். இந்த தண்ணீரைக் கொண்டுதான் கோவிலில் தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள். விவேகானந்தர் பாறையில் பகவதி அம்மனின் கால்தடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
    • இன்று வழிபாடு செய்யும் முறையையும், என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்றும் அறிந்து கொள்ளலாம்.

    வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)

    பூஜை : 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : சதுர்த்தி

    கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

    பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

    ராகம் : 'பரவி ராகத்தில் பாடலாம்.

    மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

    பலன் : கடன் தொல்லை தீரும்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை பரவசத்துடன் வழிபட்டனர்.
    • நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. 2-ம் நாளான நேற்று முன்தினம் 'சக்தி கொலு'வில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நவராத்திரி திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.

    அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. கோவில் பெண் பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வந்த பெண் பக்தர்கள் 3-ம் நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. இரவு, ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை பரவசத்துடன் வழிபட்டனர். கொலுவையும் பார்த்து ரசித்தனர்.

    சக்தி கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் குறித்து பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொலு பொம்மை குறித்த விளக்கங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஏராளமான ஆன்மிக தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    சில அரிதான பொம்மைகள் எந்த வரிசையில், எந்த படியில் இருக்கிறது? என்ற விவரம் மற்றும் தமிழக முருகன் கோவில்கள் விவரமும் தனித்தகவலாக அளிக்கப்பட்டு உள்ளது.

    நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.

    • நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளிய ம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடை பெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனைகள் நடத்தப் பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்கள் தேவார பாடல் பாடினர்

    கன்னியாகுமரி:

    கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2-ம் நாள்திருவிழா நேற்று வணிகவரித்துறை சார்பில்நடந்தது.

    இதையொட்டி நேற்று மாலை சமயஉரையும் அதைத்தொடர்ந்து பக்தி இன்னிசைக்க ச்சேரியும்நடந்தது. இரவு நெற்றிப்பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைமுன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்ட ப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்ம னின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட வணிக வரி துறை இணை ஆணையர் சுகந்தி, நாகர்கோவில் துணை ஆணையர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி துணை ஆணையர் சந்திரசேகர், வணிகவரித்துறைமாநில வரி அலுவலர்கள் (ஜி.எஸ் டி.) ராஜசேகரன், ராஜகோபால், முருகன், ராமசாமி சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன்,

    ஆடிட்டர் சுரேஷ் கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்பி. ராஜா, கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ்,

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்டபெருமாள், துணைசெயலாளர் ஓம்நம ச்சிவாய,

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.3-ம்திருவிழாவான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்து றைசார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர்காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளும் நடக்கிறது. இரவு8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
    • பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலைப் பகுதி கோவில்கள் மற்றும் வீடுகளில் நவராத்திரி கோலாகலமாக துவங்கி உள்ளது. உடுமலை திருப்பதி கோவிலில் கொலுப்படிகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவமூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதுபோல உடுமலை சத்திரம் வீதி சௌடாம்பிகை கோவில் ,பழனி ஆண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவில், பி.வி கோவில் வீதி ,கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி முதல் நாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது .மேலும் பல வீடுகளில் கொழு அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்து நவராத்திரியைகொண்டாடி வருகின்றனர்.

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
    • இன்று எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    3-வது நாள் 28-9-2022 ( புதன் கிழமை)

    வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)

    பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

    திதி : திருதியை

    கோலம்: மலர் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.

    ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.

    பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
    • அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று மூன்றாம் நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் அறிவினுக்கறிவே போற்றி

    ஓம் ஞானதீபமே போற்றி

    ஓம் அருமறைப் பொருளே போற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி

    ஓம் நற்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய்போற்றி

    ஓம் பரமனின் சக்தியே போற்றி

    ஓம் பாபங்கள் களைவாய் போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளே போற்றி

    ஓம் செபத்தின் விளக்கமே போற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையே போற்றி

    • சிவபெருமான் சூலம் தந்தார்.
    • வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும்இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும்ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர். ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன்.நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார். மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சினை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள்அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வ அலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள். அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று. இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

    • புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள்.
    • கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

    1. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

    2. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

    3. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடை உடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

    4. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

    5. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

    6. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

    7. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    8. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    9. நவராத்திரிஒன்பது நாட்களும் வாசல் படியைத் துடைத்து கோலமிட்டு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ தூவி, பூஜை செய்வது நல்லது. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது மங்களகரமாக இருக்கும்.

    10.கொலுவில் வைத்திருக்கும் பழைய பொம்மைகளின் மாலைகள், வளையல்களின் மீது பளபளப்பான ஸ்டிக்கர் பொட்டுக்களை வைத்தால், அவை விளக்குவெளிச்சத்தில்புதுப்பொலிவுடன் மின்னும்.

    11. கொலு படிகளில் நாம் துணியை மடித்து, அதன் மேல்தான் பொம்மைகளை வைப்போம். அந்தந்த படிகளில் இருக்கும் துணி மீது சிறு ஆணி அடித்தால், சிறு குழந்தைகள் துணியைப் பிடித்து இழுத்தாலும், பொம்மைகள் கீழே விழாது.

    12.கொலு படிகளின் ஓரங்களில், பேப்பர் காபி கப்களை வாய் பாகத்தில் பசை தடவி கவிழ்த்து வரிசையாக அடுக்கி வைத்தால், கோட்டை மதில் போல் அழகாக இருக்கும்.

    13.கொலுப் படிகளில்அகல பார்டர் போட்ட புடவைகளைப் போட்டு அதன்பின் பொம்மைகளை வைத்தால், படிகள் பார்டர் வைத்தது போல் அழகாக இருக்கும்.

    14.கொலுப் படிகளின் இரு பக்கங்களிலும் மாலை நேரங்களில் சிறு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தால், தெய்வீகமாகக் காட்சித் தரும்.

    15.காய்கறி கடைகளில் முளைவிட்ட பயிர்கள் இருக்கும். அவற்றை கொலுப்படிகளில் வளர, வளர நன்றாக இருக்கும்.

    16.பழைய ஷட்டில்காக் பந்துகளின் அழகான தலைகளையும், ஆடைகள் போல அமைந்துள்ள இறகுகளையும் கொண்டு வித விதமாக அலங்கரிக்கப்பட்ட ராஜா- ராணி, ஆண்-பெண், கோமாளிகள் மற்றும் கற்பனைக்கேற்ப வேறு பொம்மைகள் செய்து கொலுவில் வைக்கலாம். வித்தியாசமாக அனைவரின் கவனத்தையும் கவரும்.

    17.கொலு வைக்கும் போது, இயற்கைக் காட்சி உள்ள படத்தையோ அல்லது அழகிய பூக்கள் உள்ள காட்சிகளையோ பின்புறத்தில் வைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.

    18. மரத்தூளில் பச்சைக் கலர் சாயம் கலந்து ஊற வைத்து உலர்த்தி விட்டால், பாசி படிந்த பாறைகள் போல் தெரியும். இதை கொலு பொம்மைகளுக்கு இடையே மலை, காடு போன்ற இடங்களுக்குப் பயன்படுத்தினால் அழகாகவும் இருக்கும். பசுமையாகவும் காட்சி தரும்.

    19. கொலு படிகளில் களிமண்ணில் வளர்ந்த புற்களை மொத்தமாக பெயர்த்து, மலை போன்று செய்தால் பத்து நாட்கள் ஆனாலும் இயற்கை காட்சிகள் பச்சையாகஇருக்கும்.

    20.கடந்த ஆண்டுகளில் கொலு வைத்தபோது பயன்படுத்திய பழைய மர பொம்மைகளின் மீதுபசைகள், தூள்கள் அழுக்கு போல படிந்திருந்தால், சிறு துணியில் மண் எண்ணையை தொட்டுத் தடவி, ஒரு நிமிடம் ஊற விட்டு வேறு துணி கொண்டு துடைக்கவும். அழுக்கு மறைந்து பொம்மைகள் பளிச்சென்று மின்னும்.

    21.கொலுவில் வைக்கும் கலசக் குடத்தைச் சுற்றி பார்டர் ஒட்டவும். ஆங் காங்கே சமிக்கி மற்றும் குந்தன் கற்களால் அலங்க ரித்தால் தங்கக் கலசம் போல் ஜொலி ஜொலிக்கும்.

    22.கொலு படிகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட பொம்மைகளை வைத்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

    23.கொலுவில் பொம்மைகளை அடுக்கி வைக்கும்போது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்னும் வரிசையில் வைப்பது நல்லது.

    24.போன வருடத்து பழைய பொம்மைகள், சிறு சிறு விளையாட்டுப் பொருள்கள், பந்துகள் போன்றவற்றைத் தனியாக வைத்திருங்கள். கொலு பார்க்க வரும் சிறு குழந்தைகள் திடீரென்று கொலுவில் உள்ள பொம்மையைக் கேட்டு அடம் பிடித்து அழுதால், அதிலிருந்து எதையாவது கொடுத்து சமாதானப்படுத்தலாம்.

    25.கொலு அலங்காரம் அருகில் நவராத்திரி கலசத் தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீ சக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் எழுதி வைக்கலாம்.

    26.கொலுவில் வைக்கும் முன்பு சிறிய பொம்மைகளை மிக எளிதாகதூசி துடைக்க, ஒரு வழி உள்ளது. நாம் காது குடையப் பயன்படுத்தும் காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாம். இதனால் பொம்மை களின் இண்டு இடுக்கு களைக்கூட சுத்தமாகத் துடைக்க முடியும்.

    27.வீட்டில் வைத்திருக்கும் கொலு பகுதியில் அம்பாள் அல்லது தெய்வங்களின் திருநாமங்களை உச்சரிக்கும் பாடல்களைநாள் முழுவதும் ஒலிக்க செய்வதுமங்களம் தரும்.அழுகை, அலறல், அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொண்ட தொலைக்காட்சி தொடர்களை இந்த நாட்களில் பார்க்காமல்டி.வி.யை அணைத்து விடுவது நல்லது.

    29.நவராத்திரி நாட்களில் பரிசுப் பொருள்களை, கொலுவில் வைத்து, சரஸ்வதிப் பூஜையன்று நன்றாகப் பாடும் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு சிறிய பரிசாவது கொடுத்தால் குழந்தைகள் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

    30.கொலுவில் வைக்க பொம்மைகள்வாங்க செல்பவர்கள் ஒருநடை புத்தக கடைக்குச் சென்று பாருங்கள்.பல பல குட்டிப் புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஐம்பது ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் அதே திருப்தி, இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். எனவே பரிசாக புத்தகங்களும் கொடுக்கலாம்.

    31.நவராத்திரி பூஜை நாட்களில் சுண்டல் மீந்து விட்டதா? அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, பெருங்காயம் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான பக்கோடாகிடைத்து விடும். அந்த பக்கோடாவை கொலுவுக்கு வருபவர்களுக்குகொடுக்கலாம்.

    32.கொலுவின் போது வெறும் பக்திப் பாடல்கள், கர்நாடகக் கீர்த்தனைகளை மட்டுமே பாடாமல் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தால், இல்லத்தில் துர்சக்திகள் விலகும். தாம்பத்யம் சிறக்கும். பகைமை, வறுமை விலகும்.

    33.கொலுவுக்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பொருட்களைப் போட்டு கொடுக்க 'ஜிப் லாக்' பைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.

    34.அவல், பொட்டுக்கடலை, நிலக்கடலை, முந்திரி இவற்றை ஒன்றிரண்டாகப் பொடித்து சர்க்கரை, வெல்லத்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் திடீரென்று சுண்டல் தீர்ந்து விட்டால், இந்தப் பொடியைப் பாக்கெட்டில் போட்டுக் கொடுத்து விடலாம்.

    35.நவராத்திரியில் பிளவுஸ் பிட் கொடுத்தால் விசேஷம். ஆனால் அது அதிகம்பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்குடலை இது போல் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். பயன் உள்ளதாக இருக்கும்.

    36.சுண்டலுக்குச் சுவையைக் கூட்டுவது மாங்காய்தான். கைவசம் மாங்காய் இல்லாவிட்டால் ரெடி புளியோதரைப் பொடியை சிறிதளவு தூவி விடவும். புளிப்புச் சுவையோடு வித்தியாசமான ருசியாக இருக்கும்.

    37.நம்மை கொலுவுக்கு அழைத்தவர்கள் வீட்டுக்குப் போகும்போது, நம்மால் முடிந்த அளவில் சிறிய பொம்மைகளை வாங்கி அவர்களுக்குப் பரிசாக கொடுக்கலாம். இதனால் நமக்கும் அம்பிகையின் அருள் கிடைத்தாற்போல் ஓர் உணர்வு உண்டாகும்.

    38.கொலுவுக்கு தாம்பூலத்தில் பிளாஸ்டிக் தட்டு, எவர்சில்வர் கிண்ணி என வைத்துக் கொடுப்பதை விட நல்ல மஞ்சளில் செய்யப்பட்ட அரக்கு நிற குங்குமப் பாக்கெட்டை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். அனைவரும் பயன்படுத்துவார்கள்.

    39. வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம். பழைய சிலைகளை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

    40.ஒரு நாளும், எந்தக் கொலுவையும், மற்றவர் வீட்டுக் கொலுவோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள். மகிழ்ச்சி அடைவார்கள்.

    • ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று இரண்டாவது நாள் போற்றி போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியேபோற்றி

    ஓம் அறத்தின் வடிவோய்போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவிபோற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளேபோற்றி

    ஓம் எங்களின் தெய்வமேபோற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனேபோற்றி

    ஓம் ஈரேழுலகில் இருப்பாய்போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியேபோற்றி!

    ×