என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவராத்திரி"
- மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
- ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது
முசிறி
முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு அமைக்கப்பட்டிருந்தது.
- பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
திருப்பூர்:
பெண் தெய்வங்களைக் கொண்டாடும் விழாவான நவராத்திரி பண்டிகை திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் கொலுப் படிக்கட்டுகளை அமைத்து அவற்றில் பல்வேறு கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பொம்மைகளை வைத்து, பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொலுப்படிக்கட்டுகளை அமைத்திருந்தனர்.
குறிப்பாக இந்த ஆண்டு இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு, ஷேக்ஸ்பியரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வின் ஏழு படிநிலைகள், இந்தியப் பேரரசர்களின் சாம்ராஜ்யம், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பெருமைகள் தொடர்பான கொலு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்ந்தன.
விழாவில் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியின் தலைவர் மோகன் கே. கார்த்திக், பள்ளியின் இயக்குநர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், செயலாளர் நிவேதிகா மற்றும் பள்ளியின் முதல்வர் தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
- நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே,
அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.
நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி
சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.
இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி கவுமாரி, வராஹி என துர்காதேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,
நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குவது நல்லது.
இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை
பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
- ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
- வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி
அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி
செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி
ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி
காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி
இல்லக விளக்கம் இறைவி போற்றி
நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி
ஈரமார் நெஞ்சினார் இடந்தோய் போற்றி
ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி
உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி
அலகில் உயர்க்கிறி வளிப்போய் போற்றி
ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி
கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி
எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி
பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி
ஏழுல குந்தொழும் இறைவி போற்றி
சூழநல் அன்பரின் துணைத்தாய் போற்றி
ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி
மைதீர் முத்து மாலையாய் போற்றி
ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி
ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
போதுசேர் அருட்கண் பொற்கோடி போற்றி
ஒளவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி
கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி
கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
நல்விற் புருவ நங்காய் போற்றி
செங்கையில் புத்தகம் சேர்த்தோய் போற்றி
அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி
சமை குண்டிகைக்கைத் தாயே போற்றி
அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி
அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி
மடமறு நான்முகன் வாழ்வே போற்றி
திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி
கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி
பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி
தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி
மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி
நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி
பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி
மன்னரும் வணங்க வைப்போய் போற்றி
உன்னரும் பெருமை உடையோய் போற்றி
யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி
பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி
பூரப் பரிவரு பொற்கொடி போற்றி
வார நெஞ்சினர் வழித்துணை போற்றி
சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி
நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி
வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி
பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி
அழகின் உருவ அணங்கே போற்றி
பழகு தமிழின் பண்ணே போற்றி
இளமை குன்றா ஏந்திழாய் போற்றி
வளமை குளிர்மை மன்னினாய் போற்றி
அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி
சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி
மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி
கம்பர்க் கருளிய கருத்தே போற்றி
நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி
காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி
வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி
கிட்டற் கரிய கிளிமோழி போற்றி
வெட்ட வெளியாம் விமலை போற்றி
கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி
ஆர்திதியார் அன்பரின் அகத்தாய் போற்றி
குமர குருபரர்க் குதவினோய் போற்றி
அமரரும் வணங்கும் அம்மே போற்றி
கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி
ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி
கெடலரும் பாவின் கிழத்தி போற்றி
விடலரும் அறிவின் வித்தே போற்றி
கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி
ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி
கையகப் கழுநிர்க் கலைமகள் போற்றி
பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி
கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி
வண்டமிழ் வடமொழி வளனே போற்றி
கோதில் பலமொழிக் குருந்தே போற்றி
போதில் உறையும் பொன்னே போற்றி
சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி
அங்கண் அருள்நிறை அம்மா போற்றி
சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி
போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி
மனமும் கடந்த மறை பொருள் போற்றி
சீரார் சிந்தா தேவியே போற்றி
ஏரார் செழுங்கலை இன்பே போற்றி
சுடரே விளக்கே தூயாய் போற்றி
இடரே களையும் இயல்பினாய் போற்றி
சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி
ஏழுறும் இசையின் இசைவே போற்றி
செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி
ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி
சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி
பாவடிப் பயனே படைத்தருள் போற்றி
சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி
மையெலாம் போக்கும் மருந்தே போற்றி
சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி
அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி
சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி
தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி
தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி
தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி
தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தாயே நின் திருவடி தொழுதனம் போற்றி
திருவுடன் கல்வித் திறனருள் போற்றி
இரு நிலத் தின்பம் எமக்கருள் போற்றி
- ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
- ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீப சோதியே போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப சோதியே போற்றி
ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் தருவழு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் அறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர்குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப் பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈறிலா அன்னை போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சக்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம்பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கச வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்டலக்குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி
ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணேஎம் விதியே போற்றி
ஓம் விவேகம தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக்கண்ணி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாளாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேதமல்லியே போற்றி
ஓம் வேட்கை தணிப்பாய் போற்றி
ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி
ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருண்இலக் குமியே போற்றி
- ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
ஓம் இமய வல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி
ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி
ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி
ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே! போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி
ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி
ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி
ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி
ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே! போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் கொற்றவையே! போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே! போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி
ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
ஓம் சக்தி வடிவே! போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே! போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி
ஓம் சிறுநகை புரிபவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபீட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் செங்கதிர் ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே! போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் தண்கதிர் முகத்தவனே போற்றி
ஓம் தாயே! நீயே! போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்கையே! அம்மையே! போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி
ஓம் நாராயணீயே! போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி
ஓம் பகவதியே! போற்றி
ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா! போற்றி
ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி
ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் மாதங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் மகமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே! போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய்! போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே! போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய்! போற்றி
ஓம் துர்க்கா தேவியே! போற்றி
- ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
- ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி! சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏமஜோதி யோக ஜோதி ஏறுஜோதி வீறு ஜோதி
யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி
ஆதி நீதி வேதனே! ஆடல் நீடு நாதனே!
வாதி ஞான போதனே! வாழ்க! வாழ்க! வாழ்க! நாதனே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவி போற்றி!
ஓம் ஆதி பராசக்தி ஜெய்
ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா!
ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்
ஓம் சக்தி ஆதிபராக்தியே சரணம்.
- வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
- “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.
அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.
அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.
உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:
"நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.
ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.
ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.
கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,
கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே
"நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.
ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.
நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.
வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
அனைத்தும் சிவனின் இரவுகளே!
அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.
பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.
எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.
பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.
இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,
அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.
சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.
- பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
- வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.
சிவபக்தனாக ராவணன், தினமும் கோவிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம்.
பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான்.
இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.
பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள்.
விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.
அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.
அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள்.
ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.
- ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.
- எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.
ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.
இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள்.
மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர்.
சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர்.
எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.
எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.
- ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
- இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.
சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம்.
இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு.
ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது.
அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர்.
பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர்.
இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.
- இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
- திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.
திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடிய தால் கபாலம் நீங்கியது.
இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார்.
இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதைக் கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார்.
ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
ஸ்ரீரங்கம்
திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.
திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில்
கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள்.
அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள் பாலித்தபடி அமர்ந்துள்ளார்.
ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன்
ஒரே சந்தியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்