search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்
    • மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்

    பகைவனை வெல்ல - காளியை வழிபடவும்.

    செல்வம் விரும்பினால் -சண்டியைப் பூசிக்கவும்

    அரசர்களை மயக்க -சாம்பவி பூசை செய்யவும்

    இன்னல், எளிமை அகல -துர்க்கையை வழிபடவும்

    போரில் வெற்றிபெற -துர்க்கையை வழிபடவும்

    கொடும் பகைவனை அழிக்க -துர்க்கையை வழிபடவும்

    மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்

    மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்

    நோய் விலக -ரோகிணியை வணங்கவும்

    • பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
    • அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

    அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    • நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
    • அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.

    அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,

    அடுத்த 3 நாட்கள் மஞ்சள்

    நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

    வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:

    முதல் நாள் பச்சை,

    இரண்டாம் நாள் மஞ்சள்,

    மூன்றாம் நாள் நீலம்,

    நான்காம் நாள் கருநீலம்,

    ஐந்தாம் நாள் சிவப்பு,

    ஆறாம் நாள் கிளிப்பச்சை,

    ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,

    எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,

    ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.

    • இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
    • இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

    ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.

    இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.

    அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.

    மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    • மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
    • வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர்.

    அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.

    இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுவார்கள்.

    பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்

    அந்த இலைகளை கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்" என சொல்லி ஆசீர்வதிப்பர்.

    மகாராஷ்டிரா மாநில கோவில்களில் வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    • மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.

    ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.

    10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.

    இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.

    இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    "தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.

     முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

    • அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
    • பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக

    மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,

    அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.

    தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,

    பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

    • பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சர்வாலய அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரைராயப்பன், ஆலோசகர் எடையூர் மணிமாறன், தமிழ் பால் சிவக்குமார், ராகவா ஜுவல்லர்ஸ் பாலாஜி,பாபு (எ) குமரவேல், கோவில் ஊழியர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் ஓம் சிவாலய நாட்டிய வித்யாலயம் குரு ஸ்ரீ நடன கலையரசன் காரக் கோட்டை மதியழகன் நட்டுவனர் குழுவினர் 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு க்களித்தனர். அக்டோபர் 24 வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழு மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

    • கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
    • கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.

    • விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்து ள்ள புகழ்பெற்ற அம்பாள் திருத்தலமாக விளங்கி வரும் கர்ப்பரட்சா ம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில் 20ந்தேதி ஏகதின இலட்சார்ச்ச னையும், 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்ப ரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னையும், 24ந்தேதி விஜயதசமி அன்று மாலை சுவாமி சந்திர சேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பா ர்வையில் கோயில் செயல் அலுவலர் சு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவே நவராத்திரி
    • ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, நவராத்திரி" என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது.. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     இசை

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மிருதங்கம்

    இரண்டாம் நாள் - புல்லாங்குழல்

    மூன்றாம் நாள் - வீணை

    நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்

    ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்

    ஆறாம் நாள் - பேரி

    ஏழாம் நாள் - படகம்

    எட்டாம் நாள் - கும்மி

    ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

     மங்கலப்பொருள்

    நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-

    முதல் நாள் -புனுகு

    இரண்டாம் நாள் - ஜவ்வாது

    மூன்றாம் நாள் - கஸ்தூரி

    நான்காம் நாள் - அரகஜா

    ஐந்தாம் நாள் - சந்தனம்

    ஆறாம் நாள்- குங்குமம்

    ஏழாம் நாள்-சாந்து

    எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்

    ஒன்பதாம் நாள் மை

     தியானம்

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-

    முதல் நாள் - நீலாயதாட்சி

    இரண்டாம் நாள் - காமாட்சி

    மூன்றாம் நாள் - மீனாட்சி

    நான்காம் நாள் - விசாலாட்சி

    ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி

    ஆறாம் நாள் - ராட்சி

    ஏழாம் நாள் - பத்மாட்சி

    எட்டாம் நாள் - வனஜாட்சி

    ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

     கோலம்

    நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-

    முதல் நாள் - அரிசி மாவு கோலம்

    இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்

    மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்

    நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்

    ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்

    ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்

    ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்

    எட்டாவது நாள் - காசுகளை கொண்டு தாமரைப் பூ கோலம்

    ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளை கொண்டு ஆயுதங்களை கோலமாக அமைக்க வேண்டும்.

     விளையாட்டுப் பொருட்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - சோழி

    இரண்டாம் நாள் - குன்றிமணி

    மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்

    நான்காம் நாள் - கிளிஞ்சல்

    ஐந்தாம் நாள் - மரச்சொப்பு

    ஆறாம் நாள் பொம்மை

    ஏழாம் நாள் - அம்மானைக் காய்

    எட்டாம் நாள் - பந்து

    ஒன்பதாம் நாள் - கழற்சிக் காய்

     பூக்கள்

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மல்லிகைப் பூ மாலை

    இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை

    மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை

    நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை

    ஐந்தாம் நாள் - பாரிஜாதப் பூ மாலை

    ஆறாம் நாள் - செம்பருத்திப் பூ மாலை

    ஏழாம் நாள் - தாழம்பூ மாலை

    எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை

    ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

     பெண் வழிபாடு

    நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - பாலா

    இரண்டாம் நாள் - குமாரி

    மூன்றாம் நாள்- கன்னிகை

    நான்காம் நாள் - தேவதை

    ஐந்தாம் நாள் - பிரவுடா

    ஆறாம் நாள் - முத்து

    ஏழாம் நாள் - சுமங்கலி

    எட்டாம் நாள் - தருணீ

    ஒன்பதாம் நாள் - மாதா

    நைவேத்தியம்

    முதல் நாள் - சுண்டல்

    இரண்டாம் நாள் - வறுவல்

    மூன்றாம் நாள் - துவையல்

    நான்காம் நாள் - பொரியல்

    ஐந்தாம் நாள் - அப்பளம்

    ஆறாம் நாள் - வடகம்,

    ஏழாம் நாள் - சூரணம்

    எட்டாம் நாள் - முறுக்கு

    ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

     பழங்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வாழைப்பழம்

    இரண்டாம் நாள் - மாம்பழம்

    மூன்றாம் நாள் - பலாப்பழம்

    நான்காம் நாள் - கொய்யாப்பழம்

    ஐந்தாம் நாள்- மாதுளம் பழம்

    ஆறாம் நாள் - நாரத்தைப் பழம்

    ஏழாம் நாள் - பேரீச்சம் பழம்

    எட்டாம் நாள் - திராட்சைப் பழம்

    ஒன்பதாம் நாள் - நாவல் பழம்

     ராகங்கள்-9

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழி பட வேண்டும். அதன் விவரம்:-

    முதல்நாள்- தோடிராகம்

    இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்

    மூன்றாம் நாள் - காம்போதி ராகம்

    நான்காம் நாள் - பைரவி ராகம்

    ஐந்தாம் நாள் - வராளி ராகம்

    ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்

    ஏழாவது நாள் - பிலஹரி ராகம்

    எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்

    ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

     9 வகை சுண்டல்

    நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஒரு நைவேத்தியம் படைப்பது போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலை அம்பாளுக்கு படைத்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வெள்ளைக் கடலை சுண்டல்

    இரண்டாம் நாள் - காராமணி சுண்டல்

    மூன்றாம் நாள் - மொச்சை சுண்டல்

    நான்காம் நாள் - பச்சைப் பட்டாணி சுண்டல்

    ஐந்தாம் நாள் - வேர்க்கடலை கண்டல்

    ஆறாம் நாள் - பச்சைப்பயறு சுண்டல்

    ஏழாம் நாள் - கொண்டைக் கடலை சுண்டல்

    எட்டாம் நாள் - மொச்சைப் பயறு சுண்டல்

    ஒன்பதாம் நாள் வேர்க்கடலை கண்டல்

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இது போன்ற நவதானிய கண்டல்களை செய்து சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற நவதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

     சித்ரான்னம்

    விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்...

    முதல் நாள் - வெண் பொங்கல்

    இரண்டாம் நாள் - புளியோதரை

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

    எட்டாம் நாள் - பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

    சிறு பெண் வழிபாடு

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு:-

    முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்

    இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) - மன மகிழ்ச்சி உண்டாகும் ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்

    மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை,

    நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்

    ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்

    ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

    ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்.

    எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்

    ஒன்பதாம் நாள்- 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    ×