search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238496"

    • இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
    • கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    புதுச்சேரி:

    பசிப்பிக் கடல் பகுதியில் வாழும் ஆலிவ்ரெட்லி மற்றும் சில வகை ஆமைகள், முட்டையிடுவதற்கு இந்திய பெருங்கடல் கரை பகுதியில் வரும். அவ்வாறு காரைக்கால் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு மணல் பரப்பில் முட்டையிட வந்தபோது, படகில் மோதியோ, வலையில் சிக்கியோ இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி மற்றும் பிற வகை ஆமைகள், காரைக்கால் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அமைப்பினர், உடனடியாக கடற்கரைக்கு சென்று, இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளை கண்டறிந்து, கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    • பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
    • துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

    குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது.
    • அந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இந்த பொதுக்குளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகர் மண் சிலைகள் வாங்கி பொதுமக்கள் பூஜை செய்வார். பின்னர் அந்த விநாயகர் மண் சிலைகளை செப்டம்பர் 1,2-ம் நாட்களில் குளங்களில் கரைப்பர். இதனால் இந்த விநாயகர் மண் சிலைகளை கரைப்பதற்காக பொதுக்குளத்தை பொதுமக்கள் பார்வை யிட்டனர். அப்போது அக்குளத்தில் பெரிய மூட்டை ஒன்று மிதந்து வந்தது.

    மேலும் அந்த மூட்டியிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ரோசனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர்குளத்தில் இருந்தமூட்டையை வெளியே கொண்டு வந்து பார்த்த போது அதில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. பொதுக்குழுத்தில் கோழிக்கழிவுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பைக்காரா பகுதியில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது.
    • துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    பைக்காரா பகுதிகளில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 72-வது வார்டு பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் ஆறு போல ஓடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வீதிகளின் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    72-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பைக்காரா கருப்புசாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் கவுன்சிலர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கவுன்சிலர் கருப்புசாமி கூறியதாவது:-

    இந்த வார்டில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடைகளில் மலம் உள்ளிட்ட கழிவுகளும் வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதிகளில் விரைந்து செய்து தர வேண்டும். பல்வேறு இடங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பரவலாக மழையும் பெய்து வருவதால் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.
    • அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சேலம்- சென்னை நெடுஞ்சாலையின் இடது புறமாக மணி விழுந்தான் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் இந்த ஏரியின் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு காரணமாக சுற்றுவட்டார 30 கிராமங்களுக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் ஏரியில் அதிகப்படியாக நீர்வரத்து இருந்ததால் கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.

    இந்த நிலையில் ஏரியில் கடந்த 2 நாட்களாகவே 2½ லட்சம் மீன் குஞ்சுகள் திடீரென செத்து மிதக்கின்றன. அந்த ஏரிக்கு வரும் வசிஷ்ட நதி தண்ணீரில் கழிவு நீர் கலப்பதாலும், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலப்பதாலும், இந்த ஏரியில் உள்ள மீன் குஞ்சுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படுத்த முடியாமலும், விவசாய நிலங்களுக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் கூறும் போது, மீன் குஞ்சுகள் இறந்து கிடப்பதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    மேலும் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும், ஆடு மாடுகளுக்கு குடிக்கவும் பயன்படுத்தாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதனால் இந்த நீரை அகற்றிவிட்டு, கழிவு நீரை வசிஷ்ட நதி ஆற்றில் கலக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    • சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம் வீசிவருகிறது.
    • குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி மெயின் ரோட்டில் இருந்து காவிரி ஆற்று கரைக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாக்கடை கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை சரிவர செய்து முடிக்காததால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசிவருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் சாக்கடை நீர் இறங்குவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    ×