search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவேலு"

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

     

    டப்பிங் பணிகளில் வடிவேலு

    டப்பிங் பணிகளில் வடிவேலு


    இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • சில தினங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியாக விருது வழங்கப்பட்டுள்ளது.
    • விருது வழங்கும் போது நடிகர் வடிவேலு இந்த விருது செல்லுமா என்று கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    கவுரவ டாக்டர் பட்டத்துக்கான விருதை காமெடி நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் வழங்கி உள்ளனர். அப்போது அவரிடம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

    இதனை மிகுந்த கவனமுடன் கேட்கும் வடிவேலு அவருக்கே உரித்தான உடல் மொழியுடன் இந்த விருது செல்லுமா! என்று கேட்கிறார். இதற்கும் விழா ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்து வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்து வழங்கி உள்ளனர்.


    'என்டர்டெய்ண்ட் மெண்ட்' பிரிவில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக கூறியதும் வடிவேலு அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். பின்னர் 'ரொம்ப சந்தோசம்' என்று கைகூப்பி வணக்குகிறார். இதன்பின்னர் 'என்றும் அன்புடன் வடிவேலு' என டைரி ஒன்றில் கையெழுத்தும் போட்டு கொடுக்கிறார். ஐயா... நீதியரசர் தலைமையில் நடந்த விருதை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். மிகுந்த பெருமையாக உள்ளது.

    சாதாரண டீ கடையில் இருந்து வந்த எனக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளது என்று கூறும் வடிவேலு 'கற்றவர் சபையில் எனக்கு தனி இடம் வேண்டும்... உன் கண்ணில் நீர் வழிந்தால் உலகே அழ வேண்டும் என்கிற பாடலையும் பாடி மகிழ்ச்சியுடன் பட்டத்தை பெற்றுக்கொள்கிறார்.

    சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வடிவேலுவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சில தினங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியாக வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.

    சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைகழகமே இல்லாத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் என்று மெகா மோசடியை அரங்கேற்றி உள்ளது.

     


    இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல் ராஜ் இப்படி சில பிரபலங்களை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வழங்கி உள்ளார்.

    சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைகழகம் என்பதை பெரிதாக அச்சிட்டிருந்தனர். அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும் சட்ட விரோதமாக அச்சிட்டிருந்தது. இதனால் அண்ணா பல்கலைகழகமே தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பினர்.

     


    இதே நிகழ்ச்சியில் தனியார் கோயில் நிர்வாகிகள், ஜோதிடர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கும் டாக்டர் பட்டங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு வராமல் வீட்டிலேயே இருந்த நடிகர் வடிவேலுவுக்கு வீடுதேடிச் சென்று டாக்டர் பட்டம் வழங்கினர். வடிவேலுவிடம் தங்கள் கவுன்சில் சார்பில் மதிப்புறு முனைவர் என்கிற கவுரவ டாக்டர் பட்டம் தருவதாக கூறி அந்த போலி ஆவணத்தை கொடுக்கும் வீடியோவும் வெளியானது. யூடியூப்பில் பிரபலமான கோபி, சுதாகரை அழைத்து அவர்களுக்கும் ஆளுக்கொரு அவார்டு கொடுத்தனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலை. முடிவு செய்து உள்ளது. இது குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் கூறும் போது ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். கவர்னர் செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க கவர்னர் மாளிகையும், அரசும் அறிவுறுத்தியுள்ளன என்று கூறினார். 

    • நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் வடிவேலு 

    இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடிக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் வடிவேலு வழிபாடு செய்தார்.
    • சமீபத்தில் அவரது தாயார் மறைந்த நிலையில் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று வழிபாடு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டுபரமக்குடியில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.

     

    கோவிலில் வழிபாடு செய்த வடிவேலு

    கோவிலில் வழிபாடு செய்த வடிவேலு

    சமீபத்தில் அவரது தாயார் மறைந்த நிலையில் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று வழிபாடு செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உலகமே சிரித்து மகிழ காரணமான ஒருவரின் கண்களில் உருண்டு வழியும் கண்ணீரில் அவரின் தாயார் மறைவு. திரு வடிவேல் அவர்கள் தன் மீளா துயரிலிருந்து விரைவில் ஆறுதல் பெற விரும்பும் நண்பர்களில் நானும் ஒருவனாக!" என்று பதிவிட்டுள்ளார்.


    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




    இந்நிலையில் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்களின் அன்புத் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.




    இந்நிலையில் மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர் ரிட்டன்ஸ் போஸ்டர்

    'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வருகிற ஜனவரி 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார்.
    • அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

     

    பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது, என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.

     

    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

     

    நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம். இவ்வாறு வடிவேலு கூறினார். 

    • வடிவேலு மற்றும் சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது.
    • இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படங்களில் இணைந்து நடிப்பதை குறைத்துக் கொண்டனர்.

    தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு, சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் காம்பினேஷன் காட்சிகள் என்றால் படம் விற்பனை செய்வதற்கும் உதவியாக இருந்தது. இந்த நிலையில் தான் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 வருடங்கள் ஆன பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவைக் காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.

     

    வடிவேலு - சிங்க முத்து

    வடிவேலு - சிங்க முத்து

    இது குறித்து சிங்க முத்துவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, "நாங்கள் இரண்டு பேரும் நேரில் உட்கார்ந்து பேசினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு என் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை சுமத்தினார். இதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா? இல்லையே. எல்லாமே பொய். இப்போதும் நான் அவரோடு உட்கார்ந்து பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    ×