search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர் தினம்"

    • குறிப்பிடத்தக்க திறமையுடன் மிகவும் சவாலான சிக்கல்களை வழிநடத்த முடியும்.
    • பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்கின்றன.

    நாடு முழுவதும் இன்று மருத்துவர் தினம் மற்றும் பட்டய கணக்காளர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    "மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள். நமது சுகாதாரப் பாதுகாப்பு ஹீரோக்களின் நம்பமுடியாத அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்தை போற்றும் நாள் இது. அவர்கள் குறிப்பிடத்தக்க திறமையுடன் மிகவும் சவாலான சிக்கல்களை வழிநடத்த முடியும். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவர்கள் அவர்களுக்குத் தகுதியான பரவலான மரியாதையைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது." என்று கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில், "பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants) தின வாழ்த்துக்கள்! நமது பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் CA-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் நிபுணத்துவம் மற்றும் மூலோபாய நுண்ணறிவு வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரே மாதிரியாக பயனுள்ளதாக இருக்கும். அவை பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்கின்றன. அவர்கள் நமது நிதி நல்வாழ்வுக்கு இன்றியமையாதவர்கள் என்று கூறியுள்ளார்.

    • இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    மருத்துவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் மருத்துவர்கள் சேவை குறித்து மாணவரிடம் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் உரையாற்றினர்.

    பின்னர் மாணவர்கள் இன்ஷியா, பொன் ராஜ்குமார், பெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செம்பா மற்றும் மருத்துவர் இப்ராஹிம் நேர்காணல் நடத்தினர்.

    இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    முன்னதாக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.
    • நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

    தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையை போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×