search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தன.
    • கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு பேச்சு போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்க வளாக கூட்டரங்கில் நடந்த போட்டிகளில் 26 பள்ளி மாணவர்களும், 14 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

    இதில் பள்ளிகள் பிரிவில் பொன் முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி குருவம்மாள், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ, தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தீப்தி ஆகியோர் பரிசு முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஷர்மிகா, டி.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி அளவில் செந்தமிழ்க் கல்லூரி மாணவி ராஜமாலதி, மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகக் கல்லூரி மாணவர் வெங்கடேஷ், மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டரிடம் பெற உள்ளனர்.

    • பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்ற னர்.

    கடத்தூர்,  

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.இதில் பாப்பி ரெட்டிப் பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனி யார் பள்ளி களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.

    இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவிற்கான வாலிபால் போட்டிகளும், கோகோ போட்டிகளும் நடைபெற்றது.இந்த விளையாட்டு போட்டிகளை கடத்தூர் அரசு பள்ளி ஆசிரியர், சங்க தலைவர் கிருஷ்ணன், கண்ட கவுண்டனூர் தலைமை ஆசிரியர் அருள் வளவன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் மணி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல், மாது, செல்வம், முரளி, சிங்காரம், உள்ளிட்ட இருபால் உடற்கல்வி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். 

    • முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
    • செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சூலாமலை யில் செயிண்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அனைத்து துறை மாண வர்களுக்கு இடையேயான போட்டிகள் விங்க்ஸ் 2023 என்ற பெயரில் நடந்தது.

    இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள், பேச்சு போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம், கவிதை போட்டிகள் நடைபெற்றது.

    இதில் முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    இதில் அதிக போட்டி களில் வென்று முதலிடம் பிடித்த கணினி, இ.சி.இ. மற்றும் சிவி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் சுழற்கோப்பையை தட்டி சென்றனர்.

    இந்த விழாவிற்கு செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பாலி டெக்னிக் கல்லூரி இயக்குனர் குமரேசன், முதல்வர் சையத் ஆசிப் அகமது, துணை முதல்வர் ராகவேந்திர பிரசாத் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி னார்கள்.

    • ஜெயங்கொண்டத்தில் குறுவட்ட அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றது
    • குறுவட்ட அளவில் 250 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    ஜெயங்கொண்டம்

    ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான த. கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 14 ,17 ,19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோகோ போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்புமணி வரவேற்றார். போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். த.கீழவெளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் அமைப்பு, கிராம நிர்வாக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர், தன்னார்வலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக நல்லமுத்து, மயில்சாமி, இளவரசன், குமார், மோகன், விஜய்ஆனந்த், ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் பணியாற்றினர். போட்டியில் சுமார் 250 மாணவர்கள் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து கலந்து கொண்டனர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் குறுவட்ட இணை செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

    • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வண்ண புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்தஅண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் போன் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவு தினம்,தேசிய வண்ண புத்தகங்கள் தினம், இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா பிறந்தநாள் ,தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள் தினவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன்,சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி,ஆனந்தன் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவ -மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 

    • 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி, பாரத் வித்யா மந்திர் பள்ளிகள் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் பெகாசஸ்-2023 கலைத் திருவிழா போட்டிகள் நடை பெற்றது. பாரத் கல்விக் குழும தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரஜ் வரவேற்று பேசினார்.

    கனிஷ்கா மற்றும் உஷாஷீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பாரத் கல்வி குழும தலைவர், செயலாளர், முதல்வர்கள், கல்வி ஆலோசகர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து குத்து விளக்கேற்றி கலை விழா போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    காலையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மழலையர் பிரிவினருக்கு வர்ணம் தீட்டுதல், பாடல் ஒப்புவித்தல், புராண கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் சித்தரிப்பு ஆகிய போட்டிகளும், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடனம், ஆங்கில பொருளறிதல், திறன் தேர்வு, படங்களை தேர்வு செய்து ஒட்டுதல் ஆகிய போட்டிகளும், 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல், தேவையற்ற ஆடைகளில் இருந்து உடை அலங்காரம் செய்தல், நடனம் ஆகிய போட்டிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வடிவமைப்பு, புதிர் ஆகிய போட்டிகளும், 9 முதல் பிளஸ்-2 வரை மிஸ், மாஸ்டர் பெகாசஸ், வினாடி -வினா, குழு பாடல் ஆகிய போட்டிகளும் நடை பெற்றது. மேலும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு குழு பாடல், கணிதம் மற்றும் அறிவியல் திறனறி தேர்வு ஆகிய போட்டிகளும் நடை பெற்றன.

    இதில் 30-க்கும் மேற் பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இலஞ்சி ஆக்ஸிஸ் வங்கி முதன்மை மேலாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடம் பெற்ற பள்ளிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். அவரைத் தொடர்ந்து பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி னர்.

    முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பெகாசஸ் சுழற்சின்ன பரிசும், 2-ம் இடம் பெற்ற எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயமும், 3-ம் இடம் பெற்ற கிங்ஸ் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் விழாவின்போது திறன்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருது கள் வழங்கப்பட்டன. பாரத் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக செயல்பட்டனர். ஆக்ஸிஸ் வங்கி, டிரிஸில் உணவகம், பிரசாந்தி மருத்துவமனை, பி.கே.போட்நிக், வேலவன் புத்தக மையம், செக்யூர் ஐ.டி டெக், இன்பைனைட் லேர்னிங், ரூத் சிப்பிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பெகாசஸ் -2023 கலைத் திருவிழா போட்டிக்கு நன்கொடை அளித்திருந்தனர்.

    ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செய லாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பள்ளி முதல்வர் வனிதா, ஆலோச கர் உஷா ரமேஷ் மற்றும் இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கையெழுத்துப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான போட்டிகளானது புத்தகத்தை மையமாக கொண்டு பல்வேறு போட்டிகளானது நடைபெற்றது.

    எல்.கே.ஜி மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்து கருத்தினை கூறுதல், யு.கே.ஜி மாணவர்களுக்கு எழுத்துக்களின் வரிசை என்ற தலைப்பிலும், முதலாம் வகுப்பு மணாவர்களுக்கு ஒரே ஓசையுடைய சொற்கள் என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்திதாளில் உள்ள செய்திகளை சேகரித்தல் என்ற தலைப்பிலும், 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு என்ற தலைப்பிலும், 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டியும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் ஆங்கில பேச்சு போட்டியும் நடைபெற்றது. 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர் என்ற தலைப்பில் தமிழ் பேச்சு போட்டியும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நூல் ஆசிரியரின் பெயர்கள் என்ற தலைப்பில் வினாடி-வினாவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் நமது நண்பர்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
    • நாளை காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் பள்ளியில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.

    அந்த வகையில், மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    போட்டிகளுக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு 74024 38667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்( செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கு பெறலாம்.

    போட்டிக்கான தலைப்புகள்.

    கட்டுரை போட்டி - தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.

    பேச்சுப் போட்டி - தமிழ்த் திரை உலகத்தை புரட்டி ப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம்,3-வது பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுதொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொள்ளலாம்.இந்த போட்டிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் சிவராமன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் தேன் அமுத சொல்வேந்தர் சாகுல் ஹமீது இலக்கிய மன்ற விழாவினை தொடக்கி வைத்து பேசும்போது:-

    இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.

    இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

    தமிழ் இலக்கியம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது.

    இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்கள்.

    தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    இதையடுத்து நிகழ்ச்சியில் ஜூன் மாதம் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், பிரபாகரன், அன்புமணி, அலுவலர்கள் குமார், சுகந்தி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், செல்வம், ஆடின் மெடோனா, சுந்தர், அறிவழகன், அஜிதா கனி, மில்லர் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • நகராட்சி பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிபிள்ளை,

    நகர மன்ற உறுப்பினர் ஶ்ரீதர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற,

    பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு

    நூல்கள் நினைவுப்பரிசாக வழங்கபட்டன.

    பிற துறை ஆசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.

    பள்ளியின் முதுகலை த்தமிழாசிரியர் ராசகணேசன் வரவேற்பு ரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முனைவர் ராசகணேசன் கவுரவி க்கப்பட்டார்.

    முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • மாணவகளுக்கு பரிசளிப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ். நிஷா தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியபோட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடந்த இரண்டு வருடத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 386 லிட்டர் சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சாரயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    50 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வெளி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நண்டலாறு, நல்லாடை, ஆயப்பாடி ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தால் அதனை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிதாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண் 9626169492 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முடிவில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணைக் கண்கா ணிப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

    ×