search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சனை"

    • திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜை.
    • கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாகபூஜை நடத்தி வழிபாடு.

    சீர்காழி:

    ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆர்வலர் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த குருஜி பாலகும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாடி ஜோதிடர் அடையார் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், திருஞானசம்பந்தர் சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    • நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்க சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நேற்று புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் 'பக்தர்களின் குடும்ப நலன்கள், தேச நலன், நல்ல மழைபொழிந்து விவசாயம் செழிக்கவும், உலகநாடுகளிடையே ஒற்றுமை, அமைதி நிலவவும் வேண்டி சங்கல்பம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    இவ் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வணங்கினர். ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    • கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
    • இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்பலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் ஆலயத்தில்மத நல்லிணக்க விநாயக ஊர்வலம் நடைபெற்றது

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது பின்பு இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் தலைமை வகித்தார் குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார் விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ்தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான், அப்சல் உசேன், மெய்யாரபிக், தாணிக் கோட்டகம் ஆரோபால்ராஜ் மற்றும் வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம் கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    விநாயகர் ஊர்வலம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது இதேபோல்வி நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் மூன்று அடிமுதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கபட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பூஜை செய்துவந்தனர் இந்த நிலையில் இன்று புஷ்பவனம், செம்போடை,தோப்புத்துறை வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    • முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.
    • கிராமமக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் கோவில் காளி திருநடன திருவிழா நடைபெற்றது. காலையில் செல்வமகா காளியம்மன் படுகளம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.

    கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • தினமும் இரவு வேதநாயகி அம்மன் பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
    • வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் இரவு வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம், இந்திரா விமானம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். அதன்படி, நேற்று இரவு அம்மன் மகாரதோற்சவக்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெ ற்றது. இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சார்பாக புஷ்ப பல்லக்கில்அம்மன் வீதியுலா காட்சி நடைபெ ற்றது. விழாவில் யா ழ்ப்பாணம் பவரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள் ஓதுவார் மூர்த்திகள்கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவி னரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், அன்னதானமும் நடைபெற்றது.

    • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த கோவிலில் சுப்பிரமணியருக்கு தமிழில் லட்சார்ச்சனையும் தமிழில் அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வர் கோவிலுக்கு கடந்த 1998-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே சிலைகள் அகற்றப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்ததால் பக்தர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதால் சிலைகள் துணி சுத்தி வைக்கப்பட்டது. மேலும் கோவிலில் முறைகேடு நடந்ததாக பக்தர்கள் கூறியது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த கோவிலில் சுப்பிரமணியருக்கு தமிழில் லட்சார்ச்சனையும் தமிழில் அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ×