search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238978"

    • போதைப் பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை.
    • இந்தியா சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பல்கள் பங்கேற்பு

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடகளுடன் இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேஷியா கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி கடந்த 8ம் தேதி தொடங்கியது.

    வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த ரோந்து பணியின்போது, கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாதம், ஊடுருவல், போன்றவற்றைத் தடுத்து நிறுத்தும் பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மேலும், கடற்கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத அகதிகள் குடியேற்றம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த ரோந்து பணி உதவிகரமாக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    சர்வதேச கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்று வரும் இந்த பணியில் இந்தியா சார்பில், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கர்முக், எல்-58 கப்பல் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படுகின்றன. இந்தோனேஷியா சார்பில் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

    • 745 பேர் மீது வழக்கு
    • கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய 745 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் சோதனை செய்தனர். வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டும் தங்கி உள்ளார்களா? வேறு நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கோவை பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலை யத்திலிருந்து வெளியூருக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பிளாட்ஃபாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.கன்னியாகுமரி நாங்குநேரி வள்ளியூர் இரணியல் குழித்துறை ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி களியக்கா விளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    பெருமாநல்லூர் : 

    பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது அய்யம்பாளையம். முக்கிய சந்திப்பு பகுதியான இங்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி , 3 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குற்ற தடுப்பு நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.

    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அள விலான மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு வின் முதல் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-

    மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் - 2016-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசை வாணை மற்றும் அங்கீகாரம் பெறுதல் வேண்டும் .

    மாவட்டத்தில் உருவாகும் அனைத்து மருத்துவக் கழிவுகளையும் முறையாக சேகரித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் இயங்கும் பொது உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

    மருத்துவக் கழிவுகளைக் கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு மருத்துவக் கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

    பொதுக்கழிவுகளுடன் மருத்துவக்கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்வதையும் பிற வாகனங்களில் எடுத்துச் செல்லாமல் இருப்பதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மருத்துவக் கழிவுகள் கையாளுதல் குறித்த புகார்களுக்கு பொது மக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    கேரள மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் வாகனங்களில் வராதவாறு உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் வட்டார போக்கு வரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன், மருத்துவம் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
    • குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

    ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப் படுத்தப்படுகிறது. வழக்குகளில் குற்றவாளியின் பெயர், முகவரியுடன் ஆதார் விவரங்களையும் இணைக்க வலியு றுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில குற்றவாளிகள் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். சிலர் ஆதார் அட்டை விவரங்களை தெரிவிக்க மறுத்து விடுகின்றனர். போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதுடன் அவர்களின் ஆதார் விவரங்களை பெறமுடியாமல் உள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்க, ஜெயிலுக்கு கொண்டு செல்ல என பல்வேறு இடங்களில் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற வழக்குகள் வாரியாக குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள், அடிதடி மோதல் நபர் கள், போதை பொருள் வியாபாரிகள் என பல் வேறு வகையான பட்டியல் தயாரித்து அந்த குற்றவாளிகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆதார் அட்டை இல்லாமல் சில குற்றவாளிகள் சிக்குகிறார்கள். சிலர் வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஆதார் எண் களை தேடி கண்டறிவது சிரமமாக இருக்கிறது. ஆதார் எண் விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டியது உள்ளது.

    போலீசின் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தில் வழக்கு விவரங்களுடன் ஆதார் விவரங்களை சேர்க்க வேண்டி உள்ளது. சில குற்றவாளிகள் நீண்ட காலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதில் ஆதார் எடுக்காதவர் களும் உள்ளனர். வெளியே வந்து பல்வேறு குற்றங்க ளில் ஈடுபடுகிறார்கள்.இவர்களை கைது செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்க செல்லும் போது ஆதார் இல்லாமல் இருப்பதால் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.

    குற்றவாளிகள் தொடர்பான வரலாற்று பதிவேடு இருக்கிறது. புதிய குற்றவாளிகள், வெளியூர் குற்றவா ளிகள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஜாமீனில் வந்தவர்கள். சிறையில் உள்ளவர்கள், தலைமறைவாக இருப்ப வர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும்.

     பெருமாநல்லூர் : 

    திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த நால் ரோடு சாலை மிகவும் முக்கியமான சந்திப்பு இடமாகும். பல பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக சுமார்ரூ .1 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
    • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல்கள் சோதனை
    • மங்களூருவில் குண்டு வெடிப்பு எதிரொலி

    நாகர்கோவில்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் நகர் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் மங்களூரில் நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மங்களூரில் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழு வதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சர்வதேச சுற்று லாத்தலமான கன்னியா குமரியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிளை அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி நாகர்கோ வில் குளச்சல் தக்கலை சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோத னையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். பிளாட்பாரங்களில் சுற்றி வந்த போலீசார் ரெயில்களிலும் கண்காணிப்பணியை மேற்கொண்டனர்.

    ரெயில்வே தண்ட வாளங்களிலும் சோ தனை நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து வெளியூருக்கு அனுப்பு வதற்காக வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர். வெளியூர்களில் இருந்து வந்த பார்சல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக காலை முதலே சோதனை நடந்து வருகிறது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீ சார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். கன்னியாகுமரி, குழித் துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் ரெயில் நிலை யங்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்.

    24 மணி நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ள போலீசார் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரங்காட்டி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபா ட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகர் பகுதியில் போலீஸ் கமிஷன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது. போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும், நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அண்ணா பஸ்நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அங்குள்ள கழிவறையை சென்று பார்வையிட்டார். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதை தொடர்ந்து அதிகாரியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து நாகராஜா திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் மோசமாக காணப்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பஸ் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்தமோகன்,மண்டலத் தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா, திமுக மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    ஊட்டி,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலை மையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியா ளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    • திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர்.
    • கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ராசிபுரம் பூக்கடை வீதி, சின்னக் கடை வீதி, கடைவீதி, பஸ் நிலைய பகுதிகள் உள்பட முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. ஜவுளிகள் எடுக்கவும், நகைகள் வாங்கவும், இதர பொருட்களை வாங்கிச் செல்லவும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் திரளாக வந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் கூட்டத்தை பயன்படுத்தி, அவர்களது கவனத்தை திசை திருப்பி திருடர்கள் தங்கள் கைவரிசியை காட்டி செயின் பறிப்பு, நகை, பணம், வாகனங்கள் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ராசி புரம் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இரு க்கும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், கடைவீதி, சின்னக் கடைவீதி ஆகிய இடங்களின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர். நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 கண்காணிப்பு உயர் கோபுரங்களை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் திறந்து வைத்தனர். கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் குணசிங் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×