search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238978"

    • நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா்.இதில், பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கூறுகையில், நகரில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அகற்ற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் கொண்டு செல்லும் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    இதைத்தொடா்ந்து தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 46 தீா்மானங்கள் நிறைப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் பேசுகையில், நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ஊழியா்களின் வருகை கண்காணிக்கப்படும். சொத்து வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயாராகி வருகிறார்கள்
    • ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயா ராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா டப்படாத நிலையில் இந்த ஆண்டு மிக உற்சாகமாகக் கொண்டாட இந்து அமைப்பினர் தயாராகி வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயாராகி வருகிறார்கள்.

    ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் 1600 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களை தவிர்த்து வீடுகளிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். கோவி ல்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படு கிறது.

    ஒரு சில இடங்களில் இன்று மாலை சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ள னர். பல்வேறு இடங்களில் நாளை அதிகாலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. பிரதிஷ்டை செய் யப்படும் விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    போலீசார் இது தொடர் பாக தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விநாயகர் சிலை ஊர்வ லத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண் டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 2 ஆயிரம் போலீ சார் ஈடுபடுகிறார்கள்.

    • கீழக்கரை கடற்பகுதியில் ரேடார் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும்.

    கீழக்கரை

    தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி மூலமும், மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலும் வரும் படகுகள், ஹெலிகாப்டர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    கீழக்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. கீழக்கரை கடற்கரையோரம் உள்ள கலங்கரை விளக்கத்தில் நவீன கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும். இங்கிருந்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.

    • கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே காங்கரை சந்திப்பில் மணத்திட்டை இசக்கி அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு தினமும் மாலையில் 5 மணி அளவில் நடை திறந்து பூஜை செய்வது வழக்கம். ஆடிச் செவ்வாய் நாளிலும் பூஜை செய்ய கோவிலுக்கு பூசாரி வந்தார்.

    அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் தர்மகர்த்தா கோபால கிருஷ்ணன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    இந்த கோவிலின் அருகில் தான் திருவட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு போனது. அந்த சம்பவத்திலும் இது வரை திருடனை கண்டு பிடிக்கவில்லை. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் கோவில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
    • 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. நாளை 15-ந்தேதி காலை 9 மணிக்கு கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

    பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அண்ணா ஸ்டேடியத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடந்தது.

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள், அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.போலீசார் இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்தியுள்ளனர்.இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாசல்களில் மெட்டல் டிடெக்டர் வாசல் போடப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள லாட்ஜு களில் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். ெரயில் நிலைய வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமை யான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வரு கிறார்கள். பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடி களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங் களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீ சார் சோதனை மேற் கொண்டு உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

    நாகர்கோவில்:

    75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தினவிழாவை விமர்சையாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பரவ லின் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படாத நிலையில் பள்ளி, கல்லூரி களில் கண்கவர் கலை நிகழ்ச்சி களுடன் சுதந்திர தினவிழாவை கொண்டாடு வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோத னைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அஞ்சு கிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமை யாக சோதனை செய்யப் பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிய மிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கடலோர காவல் படை போலீசாரும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷ னுக்குட்பட்ட பகுதியில் இரவு ேராந்து பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். கன்னி யாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். லாட்ஜிகளில் உள்ள வருகை பதிவேட்டை சோதனை செய்தனர். லாட்ஜிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பிளாட்பாரங்கள், ெரயில்வே தண்டவாளங் களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ள பார்சல்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகிறார்கள்.

    கோவில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.
    • கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் 75 - ம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய ஏழு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என 1900 போலீசார்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட ம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருவதோடு அங்குள்ள மக்களிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் எங்கேனும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்பதனை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளின் போலீசார் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தலைமை காவலர் முருகன் போலீஸ் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் பார்சல்களை வெடிகுண்டு பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா

    கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணி யாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மற்றும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடை பெற்றது.

    1200 போலீசார்

    சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத் தில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ெரயில்வே தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ெரயில்வே பாலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள். பார்சல் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ெரயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்

    நாகர்கோவில்:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் கணியாமூரில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து அங்கு கலவரம் வெடி த்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட தலைநகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்ரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு ஸ்டே பஸ்கள் அனைத்தும் டெப்போக்களுக்கு கொண்டுவர டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டது. இதையடுத்து அனைத்து ஸ்டே பஸ்களும் டொப்போகளுக்கு கொண்டுவரப்பட்டது.

    பஸ் போக்குவரத்து இன்று காலையில் தாமதமாக தொடங்கியது.குமரி மாவட்டத்தில் உள்ள 11 டெப்போக்களில் இருந்தும் தினமும் அதிகாலை 4 மணிக்கு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கிராமப்புறங்களுக்கும் வெளியூர்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்று இரண்டு மணி நேரம் தாமதமாக 6 மணிக்கு பிறகு பஸ்கள் டெப்போக்களிலிருந்து பஸ் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி முதலே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இன்று தாமதமாகவே பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனால் அதிகாலையிலேயே வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.மேலும் நெல்லை, மதுரைபோன்ற நகரங்களுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பஸ்கள் புறப்பட்டு சென்றது. தஞ்சாவூர், கோவை, குமிழி போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தி லிருந்து கன்னியாகுமரி களியக்காவிளை தக்கலை குளச்சல் போன்ற ஊர்க ளுக்கு செல்லும் பஸ்களும் இன்று தாமதமாகவே இயக்கப்பட்டது.

    பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் சற்று பாதிப்புக்கு ஆளானார்கள்.

    காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் ெரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, நாங்குநேரி ெரயில் நிலையங்களிலும் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • மதுரை கோட்டத்தில் ‘கிராப் சார்ட்’ மூலம் ரெயில் இயக்கம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
    • தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ெரயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    மதுரை

    காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறை போல, ரெயில்கள் இயக்கத்திற்கும் கட்டுப்பாட்டு அறை உண்டு. இது மதுரை கோட்ட அலுவலகத்தில் செயல்படுகிறது. இங்கு தலைமை அதிகாரி ஒருவர் ரெயில்கள் இயக்குவதற்கான ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்குகிறார்.

    மதுரை கோட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் போராட்டம் காரணமாக ரயில்கள் இயக்கம் தடைபடும் போது, அதற்காக மாற்று நடவடிக்கைகளை இந்த துறை உடனடியாக செயல்படுத்தும். இதற்காக அங்கு "கிராப் சார்ட்" போல ஒரு பக்கம் நேரம், மறுபக்கம் ரெயில் நிலைய பெயர்கள் எழுதி, கோடுகள் வரைந்து ரெயில் இயக்கம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் டயல் செய்ய வசதி இல்லாத கண்ட்ரோல் போன் உண்டு. அதில் அதிகாரி நிலைய பெயரை சொன்னால், மதுரை கட்டுப்பாட்டு அலுவலர் உடனடியாக பேசுவார். இந்த தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ரெயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    தேஜாஸ் போன்ற முக்கிய ரெயில்களுக்கு பிங்க் கலர், பயணிகள் ரெயில்களுக்கு சிவப்பு கலர், சரக்கு ரெயில்களுக்கு பச்சை கலர், தனியாக செல்லும் என்ஜினுக்கு கருப்பு கலர் கோடுகள் வரைந்து, ரெயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. அப்போது ஒற்றை ரெயில் பாதையில் கோடுகள் சந்திக்கும் இடங்களில், ஏதாவது ஒருரெயிலை நிறுத்தி வழி விடுவார்கள். தற்போது இந்த முறை கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த முறையில் பதியப்படும் ரெயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் ஆகியவை பயணிகளுக்கு பல்வேறு செயலிகள் மூலம் உறுதியான தகவலாக வழங்கப்படுகிறது.

    சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரெயில்வே கோட்டங்களிலும் கட்டுப்பாட்டுத்துறை இயங்குகிறது. அவற்றைக் கண்காணிக்க சென்னை ரெயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×