search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிஇன்று முதல் வழங்கப்படுகிறது.
    • இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 75-வது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் நிகழ்வுக்காக நிதி சேகரிக்கப்பட்டது.

    நகரில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக ரூ.1 லட்சம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ 75 ஆயிரத்தை வழங்கினார்்கள். மேலும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

    இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

    இன்று முதல் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு அலுவலர் சேகரன், உதவி பொறியாளர்கள் கோமதி, ராஜேஷ், மேலாளர் ஜோதி–மணி ஆகியோர் மேற்பார்வை–யில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.

    • 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.

    அவினாசி :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    • சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் கதர், காகிதம், பிளாஸ்டிக், காகித அட்டை, ஸ்டிக்கர் என 30 வகையான வடிவத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • 75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.

    திருப்பூர்:

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    வீடுகள்தோறும் தேசிய கொடிகள் ஏற்றப்பட உள்ளதால் அதிக அளவு தேசிய கொடிகள் தேவைப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் கொடிமணி கூறியதாவது:-

    தற்போது 75வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் அரசு சார்பில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகம் பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் கொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளில் ஏற்றக்கூடிய தேசிய கொடி 20x30 என்ற அளவில் தயாரித்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைத்து வருகிறோம். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் ஏற்றுவதற்கு 30x40 அளவிலான கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

    மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதால் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் ஆகியோரிடமிருந்து அதிக அளவிலான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் போதிய நேரம் இல்லாததால் ஆர்டர்கள் எடுக்கமுடியவில்லை. தற்போது எடுத்துள்ள ஆர்டர்களையே குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு பகலாக கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

    20x30 பாலியஸ்டர் வகையிலான தேசிய கொடிகள் ரூ.30க்கும், காட்டன் துணியால் ஆன தேசிய கொடிகள் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 30x40 அளவு பாலியஸ்டர் துணியால் ஆன கொடிகள் ரூ.50க்கும், காட்டன் துணியால் ஆன கொடிகள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் இதுவரை 20 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் மேலும் பல லட்சம் கொடிகள் தயாரித்து அனுப்ப உள்ளோம்.

    வட மாநிலங்களில் இருந்து காகிதம் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூரில் மட்டுமே தயாராகிறது. தற்போதைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 15 சதவீதம் வரை தேசிய கொடியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தேசிய கொடிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆர்டர்களும் குறைவாகவே வந்தது. இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் வந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேசிய கொடிகளை பொறுத்தவரை கிழிந்திருக்க கூடாது, நிறம் மங்கியிருக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. மேலும் மத்திய அரசின் வேண்டுகோளால் இந்த ஆண்டு பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதிய கொடிகளை பயன்படுத்த உள்ளனர். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆர்டர்கள் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், வீடுகளில் ஏற்றப்பட உள்ளதால் திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்ற ஆகஸ்டு 9-ந்தேதி முதல் கொண்டாட்டங்கள் தொடங்கும். 13, 14, 15 ஆகிய 3 நாட்களும் 'வந்தே மாதரம்' ரகுபதி ராகவ ராஜாராம்' ஆகிய தேச பக்தி பாடல்களுடன் தேசிய கொடிகளுடன் எல்லா பகுதியிலும் சிறு சிறு பேரணிகள் நடத்தப்படும். எல்லோரும் தேசிய கொடிகளை கவுரவிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் கதர், காகிதம், பிளாஸ்டிக், காகித அட்டை, ஸ்டிக்கர் என 30 வகையான வடிவத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.

    அவற்றை தயாரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கொடிகள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் கொடிகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.

    கொடிக்கம்பங்களில் ஏற்றப்படும் காதி கொடிகள் விற்பனை ஒரு புறம் உள்ள நிலையிலும், தனிநபர்கள் தங்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிலும், சட்டையிலும் அணிந்து பயன்படுத்தும் வகையிலான சிறிய அளவிலான தேசிய கொடிகள் விற்பனையும் தற்போது துவங்கியுள்ளது. திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கடைகளில் தற்போது இவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

    மோட்டார் சைக்கிளில் முன்புறம் முகப்பு விளக்குக்கு மேற்பகுதியில் ஒட்டும் வகையிலான ஸ்டிக்கர் கொடி, கார்களின் முன்புறம் பேனட் மீது கட்டும் சிறிய அளவிலான துணி மற்றும் காகித கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. வட்ட, செவ்வக வடிவிலான சட்டையில் குத்தும் வகையிலான தேசிய கொடிகளும் விற்பனையாகின்றன. பலர் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கோவை டவுன்ஹால்பகுதியில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதேப்போல் தமிழகம் முழுவதும் தேசிய கொடிகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாராகும் பணி நடந்து வருகிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.

    இதற்கு தேவையான தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சக்கந்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இய–க்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில், இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை முன்னிட்டு, சுதந்திர தினவிழா, "சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக'' கொண்டாடப்படுகிறது.

    அதையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடியினை ஏற்றி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாட அரசு அறிவுறுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் தேசியக்கொடி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    36 மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 359 மின் மோட்டார் தையல் எந்திரங்கள் மூலம் ஊரகப்பகுதிகளுக்கு 4 லட்சம் தேசியக்கொடிகளும், நகராட்சிப் பகுதிகளுக்கு 1 லட்சம் தேசியக்கொடிகளும் என மொத்தம் 5 லட்சம் தேசியக்கொடிகள் தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாகவும், நகராட்சி, பேரூராட்சி பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலக மூலமாகவும் தேசியக்கொடிகள் விநியோகிக்கப்பட உள்ளது.

    தேசியக்கொடியின் மீது எந்த வாசகமும் இடம்பெறாமல் தூய்மையான முழு அளவில் உள்ள கொடிகளை ஏற்ற வேண்டும். 15-ந் தேதிக்கு பிறகு தேசியக்கொடியினை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். கீழே எறியவோ, வேறு எந்தப்பயன்பாட்டிற்கோ பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

    அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசியக்கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

    • இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்க ஏற்பாடு
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் எம்.பி. விஜயகுமார் வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியா குமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு எம்.பி. விஜயகுமார் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்துரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகு மார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிமோட் மூலம் ஏற்றினார். இந்தநிலையில் கன்னியாகுமரி பகுதியில் நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றினால் ஒரே நாளில் இந்த கொடி சேதம் அடைந்தது. சூறைக்காற்றில் இந்த தேசியக்கொடி சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடியின் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற பகுதியில் பச்சை நிற பகுதிசேதமடைந்து கொடிய கிழிய தொடங்கி உள்ளது. அதேபோல் மேல் புறமும் லேசாக சேதம் அடைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடியை நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர். அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் தற்போது 150 அடி உயரது கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு கன்னியாகுமரிக்கு வருகைதரஉள்ளது.

    இந்த குழு வந்து ஆய்வு செய்த பின்னரே அடுத்த தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கு சிலநாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறப்பதை பார்க்க கன்னியாகுமரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ×