search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
    • இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். டோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து ஜடேஜா (16 முறை) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக ரெய்னா 12 முறையும் ருதுராஜ் 11 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

    • சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
    • இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.

    இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

    சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

    இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

    • விராட் கோலி 110 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    • சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார்

    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    ஜடேஜா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். 100 கேட்ச்கள் பிடித்து 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    விராட் கோலி 110 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார். பொல்லார்டு 103 கேட்ச்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 98 கேட்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

    • ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • தேஷ்பாண்டே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்திலேயே சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் இறங்கினார். முதல் ஓவரில் கொல்கத்தா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது. 4-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரில் 13 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 50 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். ரகுவன்ஷி 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் சுனில் நரைனை வீழ்த்தினார். அவர் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் கொல்கத்தா நைட் ரைடஸ் ரன்கள் அடிக்க திணறியது. ஜடேஜா மேலும் வெங்களடேஷ் அய்வரை 3 ரன்னில் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர் 15.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    இதனால் 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 150 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. ரிங்கு பாண்டு கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.5-வது ஓவரில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 18-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா அணியால் இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. நோ-பால் பந்துடன் சேர்த்து ரஸல் 6 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    19-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த ஓவரில் 13 ரன் கிடைத்தது.

    135 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை கொல்கத்தா எதிர்கொண்டது. முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • அஸ்வினை ஜடேஜா தமிழில் பேசி வாழ்த்தியிருந்தார்.
    • அவரை ரவி இந்திரன் என்றும், அஸ்வினை ரவி சந்திரன் என்றும் புகழ்ந்திருந்தார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நாணயத்தின இரு பக்கங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இவர்களது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

    சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை பாராட்டும் வகையில் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 500 தங்க காசுகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கியது.

    இந்த விழாவில் அஸ்வினை பலரும் பாராட்டி பேசினார். ஜடேஜா தமிழில் பேசி நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன் என தமிழில் பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில்தான் அஸ்வினிடமே, எனது தமிழ் எப்படி இருக்கிறது என்று கேட்டார் ஜடேஜா. அதற்கு அஸ்வின், ஜட்டு! உங்களுடைய செய்திகள் மூலம் என்னுடைய ஆச்சரியம் மற்றும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
    • ராஞ்சியில் உள்ள டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    • இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
    • இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    • இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.
    • இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

    இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின்.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அஷ்வின் 4 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    இதுவரை இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகளும் கபில் தேவ் -219 விக்கெட்டுகளும் ஜடேஜா - 211* விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 

    அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை அஷ்வின் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×