search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொருளாளர் லதாகார்த்திகேயன் வரவேற்று பேசினார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை உரை ஆற்றினார்.

    பள்ளியின் முதல்வர் பிரியாராஜா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கானஆண்டுஅறிக்கையை வாசித்தார். 33-ம் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக சுகிசிவம் கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி? என்பதை தன் வாழ்வியல் அனுபவங்கள் வழி நின்று விளக்கி கூறினார்.

    மேலும் 2020 -21 ம்கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனங்கள் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் ஏ.எஸ் மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார் . பள்ளியின் பொருளாளர் சுருதி கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட சிறந்த மருத்துவருக்கான விருதினை பெற்றவரும் ஆதார் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் குறு மையம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களில் அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் . பின்னர் மழலையர் பிரிவு முதல் மேல்நிலை பிரிவு வரை உள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்வின் இடையிலும் திருமாலின் பத்து அவதாரமாக விளங்கும் தசாவதாரம் நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்ச்சியின் மையமாக விளங்கிய நாட்டிய நாடகம் முதலிய பல நிகழ்ச்சிகள் காண்பவரை வியப்பில் ஆழ்த்தியது. முடிவில் பள்ளியின் துணை முதல்வர் நன்றி கூறினார். 

    • ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பாள் வித்யாலயா பள்ளி தலைவர் வீமராஜ், பள்ளிச் செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜ், ரெபக்கா அனிட்டா, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
    • விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள ராஜாஸ் பல்மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், ராஜாஸ் கல்லூரிகளின் நிறுவனர் சர்தார் டாக்டர் எஸ்.ஏ.ராஜாவின் கல்வி சேவையை பாராட்டியும் பேசினார்.

    கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். விழாவில் செல்வம் அறக்கட்டளை தலைவர் சோபியா ராஜா, ராஜாஸ் மருத்துவ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் மற்றும் இயக்குநர் டாக்டர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக கல்லூரி துணை தலைவர் டாக்டர் அந்தோணி செல்வி வர வேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூஸ் முருப்பல் ஆண்டறிக்கையை சமர்பித்தார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    • 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.  

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
    • இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.

    பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.

    மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார். 

    • காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பிரிவிற்கான 20-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது
    • திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

    திருச்சி:

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் பிரிவிற்கான இருபதாவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி, முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை உரையாற்றி வரவேற்புரை நல்கினார்.

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர், சுஜாதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.

    விழாவில் 100 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், மெதுவாக இரு சக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 1500 க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயிலும் மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆங்கிலத் துறையும், மாணவியர் படை அணி வகுப்பில் என்எஸ்எஸ் மாணவிகளும், தனிநபர் சாம்பியன் பட்டத்தை, மாணவி ராஜேஸ்வரியும் பெற்றனர்.

    கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுத்தீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, உதவிச்செயலாளர் அப்துஸ் சமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர; அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் முகமது ஃபாசில், பெண்கள் விடுதி இயக்குநர் ஹாஜிரா ஃபாத்திமா, கூடுதல் துணை முதல்வர் முகமது சிஹாபுதீன், கல்லூரியின் தேர்வு நெறியாளர், நிதி ஆளுநர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

    முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா, உடற்கல்வித் துறையின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். நிறைவாக, துணை முதல்வர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.
    • பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் , பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை நடுவேலம்பாளையம் பொதுமக்கள் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்து மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .இதில் நடுவேலம்பாளையம் ,லட்சுமிநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அமலா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
    • மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

    திருச்சி:

    முசிறி அமலாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அமலா குழுமம் தலைவர் மேரி ஜாய்ஸ் பேபி, புனித வளனார் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோதி ஹில்டா மேரி, தலைமையாசிரியை செபஷ்டினா செல்வி ஆகியோர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

    மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலின் ரோஸி சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பள்ளியை சேர்ந்த மாண,வ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளியில் பயிலும் மாண,வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர். பள்ளியின் ஆங்கில ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.

    ×