search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து துறை"

    • மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
    • எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை பயணிக்க அனுமதித்து, எந்தவித புகாரும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது.

    மேலும், அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாகவும் புகார் பெறப்படுவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதுடன் பொது மக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்கும் பொருட்டு, விரைவு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
    • வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.

    பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

    • அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும்
    • பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    சட்டசபையில் இன்று அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயண சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால், அவர்கள் ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.

    அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்லுதல் வேண்டும்.
    • மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதன் அடிப்படையில் மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இப்போது பஸ் டிரைவர்-கண்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    மாநகர் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் பேருந்துகளை இயக்க கூடாது.

    அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்ல வேண்டும்.

    பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

    சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப் படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும். குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டணங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

    ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். மாறாக பணியின் போது வீண் வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

    பேருந்துகளின் சிறிய, பெரிய பழுதுகளை ஒவ்வொரு நாளும் இரவில் சரிசெய்து மறுநாள் காலையில் அதனதன் வழித்தடத்தில் கால அட்டவணைப்படி முறையாக இயக்கிடல் வேண்டும்.

    ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தினை எத்தகைய விபத்திலும் குறிப்பாக உயிரிழப்பு விபத்து ஏற்படா வண்ணம் தானியங்கி மூடு கதவினை ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியாக திறந்து / மூடி பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்குதல் வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை துணை மேலாளர் மற்றும் முதல்வர் பயிற்சி பள்ளி ஆகியோர் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கி கூறி கடைப்பிடிக்க செய்ய வேண்டும்.

    மேலும் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் (போ) மற்றும் மண்டல மேலாளர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர்/நடத்துநர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் நன்கு விளக்கி கூற வேண்டும்.

    இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயணச்சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாயினை பெருக்கிட முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
    • அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என அமைச்சர் பேட்டி

    சென்னை:

    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    • புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012 முதல் அதிகபட்சமாக ரூ.7,981 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
    • கண்டக்டர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

    சென்னை:

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    அரசு பஸ் ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012 முதல் அதிகபட்சமாக ரூ.7,981 வரையிலும், கண்டக்டர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பிரிவு தொழிலாளர்களுக்கு ரூ.2,096 முதல் ரூ.9,329 வரையிலும் சம்பள உயர்வு கிடைக்கும்.

    இதேபோல அலுவலக பணியாளர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,585 முதல் ரூ.8,476 வரையிலும், போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 வரையிலும் சம்பள உயர்வு கிடைக்கும்.

    இந்த சம்பள உயர்வு 2022 ஜூலை மாதத்தில் வாங்கிய சம்பளத்துக்கும், 2022 ஆகஸ்டு மாத சம்பளத்துக்கும் இடைப்பட்ட உத்தேச உயர்வு ஆகும்.

    சிறப்பான ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

    சென்னை:

    ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சென்னை குரோம் பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள். அந்த ஊதிய இழப்பை சரிகட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்த அநீதி நீக்கப்பட்டு நியாயம் கிடைத்துள்ளது. 1.9.2019 முதல் அதனை சரிசெய்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அதற்கு அடுத்தபடியாக 5 சதவீத ஊதிய உயர்வு 1.9.19 முதல் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் சரிசெய்து, அவர்களுக்கு சீனியாரிட்டி கொடுத்து பதவி உயர்வு வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். மகளிர் பஸ்களில் பணிபுரியும் டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பிக்சட் பேட்டாவை நாள் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். பல்வேறு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளுக்கு சீரான முடிவை காண பொதுவான நிலை ஆணை கேட்டிருந்தோம். அதனை நிறைவேற்றி தர ஒரு குழு அமைத்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்கள்.

    தொழிலாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு குழு அமைத்து விரைவில் செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் 1.4.13-க்கு பிறகு வேலைக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடையாது, புதிய ஓய்வூதியம் தான் என்று சொன்னதை மாற்றி அமைக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவை விரைந்து முடித்து, அதற்குரிய பரிகாரங்களை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற நடைமுறையை மாற்றக்கூடாது என்று கேட்டிருக்கிறோம். ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் பஞ்சப்படி வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏறக்குறைய 99 சதவீதம் முன்னேற்றத்தை கண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்கு தவறாமல் வர வேண்டும்.
    • பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அமல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 325 பணிமனைகளிலும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    தொழிலாளர்களின் ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்து விட்டனர். 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு தரவில்லை என்ற மனக்குறையும் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது. 6 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்படாவிட்டால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமானது (சி.ஐ.டி.யு.) 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரி 22 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்றிட வேண்டி இன்றோ (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நம்முடைய மாநகர் போக்குவரத்துக் கழகமானது, சென்னை பெருநகரம் மற்றும் புறநகர் மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பெருமளவில் ஈடு செய்கின்ற முதன்மையான சேவை நிறுவனமாகும்.

    எந்தவித லாப நோக்கமின்றி, அனைத்து நாட்களிலும் தனது சேவையினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒரு பொறுப்புள்ள நிறுவனம். இதனை தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

    எனவே, தொழிலாளர்கள் அனைவரும் எதிர்வரும் 3.8.2022 (இன்றோ) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்குத் தவறாமல் வர வேண்டுமென இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது.

    இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளில் வேலைநிறுத்தம் செய்கிறார்களோ, அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

    இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையாணை விதிகளின்படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தாம்பரம்:

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 -வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தொழிலாலர் நலத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம் நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சூரியமூர்த்தி பழனி, சி.ஐ.டி.யு. சார்பில் ஆறுமுக நைனார் சவுந்தரராஜன் எம்.எல்.எப். சார்பில் வெங்கடேசன் ஏ.எல்.எல்.எப். சார்பில் அர்ஜூனன் உட்பட பல்வேறு சங்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
    • குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம்.

    13-வது ஊதிய ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 14-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது.

    இந்த நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் 3-வது கட்ட ஊதிய பேச்சுவார்த்தை அப்போதைய அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 4-வது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    அப்போது தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சம்பள உயர்வு மட்டும் இறுதி செய்யப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 5 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அதனை முறையாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது.

    இதில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால் மற்றும் அனைத்து மேலாண்மை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள். 65 தொழிற்சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

    இதில் ஊதிய உயர்வு குறித்து இறுதியாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதனை முறைப்படுத்தி வழங்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

    அதனால் 1.25 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை
    • 131 வாகனங்கள் ேசாதனை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறையின் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம்.எஸ்.இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன், குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குடியாத்தம் கே.கருணாநிதி, வேலூர் எஸ்.சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 131 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    ×