search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகம்"

    • குரு பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகினார்.

    இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்கு டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ( வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமே தா தக்ஷிணாமூர்த்தியான குரு பகவானுக்கு மூலிகை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தானம், பலவகை பழங்கல் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் தங்கம் அங்கி செலுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்து முகம் கொன்ட பத்து பூஜை தீபங்கள் காட்டப்பட்டது.

    இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோயில் கண்காணிப்பாளர் அகோரம், முக்கிய பொருப்பாளர்கள் பக்தர்கள் திரளாக கலந்துக்கொன்டு வழிப்பட்டனர்.

    • 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள் கொண்டு மகா யாகம்.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் செல்லூர் சாலையில் அமைந்துள்ள செல்லகுட்டி அய்யனார் கோவிலில் சம்வஸ்ரா யாகம் நடைபெற்றது.

    21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அய்யனாருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு பொருட்களை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
    • பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி சோமகலாம்பாள் சமேத வன்மீகநாத சுவாமி கோயிலில் உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம் நடைபெற்றது.

    அம்பாள் மற்றும் மூலவர் சன்னதி எதிரில் யாக சாலை அமைக்கப்பட்டு பல்வேறு பொருட்களை கொண்டு மந்திரம் சொல்லி யாகம்வளர்க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் அம்பாளுக்கும் பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    உலக மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்ட இந்த யாகத்திலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும்.
    • சிவாலயங்கள் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது.

    மிகவும்பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 20 பேர் வந்தனர்.

    இதில் 8 பெண்கள், 12 ஆண்கள் அடங்குவர். இவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவரது தலைமையில் வந்தனர்.

    அவர்கள் குருசன்னதிக்கு எதிரே ருத்ர யாகம் நடத்தினர்.

    இதில் கோவில் சிவாச்சாரியார் சுவாமிநாதன், நாகை ராமநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.

    தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகத்தை நடத்தினர்.

    யாகம் தொடங்கி முடியும் வரை ஜப்பான்நாட்டினர் அதன் அருகே அமர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியம் முழங்க கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

    இதே போல் அவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், நான் ஜப்பான் நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.

    அங்கு ஒத்தஹோமா பல்கலைக்கழகத்திலும், ஆசியன் நூலகத்திலும், ஆசியன் வாலைண்டர்ஸ் சென்டர் என்ற பெயரிலும் தமிழ் மொழியை கற்று தருகிறேன்.

    என்னிடம் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்.

    நான் தமிழ்மொழியை கற்றவர்களை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளேன்.

    உலகில் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழியில் இருந்து தான், ஜப்பான் மொழி தோன்றியதாக ஜப்பானிய நாட்டவர்கள் கருதுகின்றனர்.

    அதற்கான ஒற்றுமை தமிழ் மொழியின் ஓசைகளிலிருந்து ஜப்பான் மொழியின் ஓசையும் ஒற்றுமையாக உள்ளது.

    ஜப்பான் நாட்டில் சித்தர்களையும், முருகன், சிவன் பெயர்களை அந்நாட்டுக்கே உரிய மொழியில் பெயர்களை வைத்து அழைக்கின்றனர்.

    தற்போது சிலர் தங்களது பெயரையே தமிழ் சித்தர்களின் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

    தமிழ் மொழியையும், பண்பாடு, கலாச்சாரத்தை கற்க ஜப்பான் நாட்டினர் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

    அதே போல் அவர்களது ஆன்மிகத்தே டலும் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவாலயங்களில் வழிபடுவதோடு இல்லாமல், சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தற்போது திட்டை கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடத்தியுள்ளோம்.

    குரு பார்த்தால் கோடி நன்மை எண்பார்கள், அதே போல் தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும், தமிழ் மொழியை ஜப்பான் நாட்டில் அதிகமானோர் கற்க வேண்டும், உலக அமைதிக்காகவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய வடுக பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிப்பு.
    • 96 வகையான ஹோமம், 9 வகையான நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு மகா யாகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த பனங்காடி ஊராட்சி வடுவகுடியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய ஶ்ரீ வடுக பைரவர் தனி சன்னதியில் அமைத்து அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

    பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரூத்ர யாகம் மற்றும் அஷ்டமி மகா யாகம் நடையைபெற்றது.

    முன்னதாக பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோமம் திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    • திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.
    • தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் தைப்பூச பவுர்ணமி யாகமானது நடைபெற்றது.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்கு கிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கி றோம்.

    ஆகவே இந்ததைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.மாத ம்தோறும் வரும் பௌர்ணமிதனையாகத்தை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரும் ஸ்ரீ காங்கேய சித்தர் வழிபாட்டு குழுவை சேர்ந்த தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் இந்த மாத யாகத்தினையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    காரைக்கால் மற்றும் நாகூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றார்கள்.

    • வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவலஞ்சுழி அடுத்த தகரவெளியில் உள்ள முஸ்தகலா செல்லப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, விழாவை முன்னிட்டு நடந்த மூன்று கால யாகசாலை பூஜையில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

    பின்னர், 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கோவில் நிர்வாகிகள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    • அரியலூர் அருகே தை அமாவாசையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிரா–மத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் தை அமாவா–சையை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிரா–மத்தில் உள்ள சாமுண் டீஸ்வரி கோவில் சன்ன–தியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தி–யங்கார தேவிக்கு மாதந்ேதாறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அம்மாவாசை அன்று நடைபெற்ற சண்டி–யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை.
    • பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மகா அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ணகால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.

    ஒன்பது யாக குன்டங்கள் அமைத்து சிவாச்சார்யர்கள் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சந்திரசேகர சிவம் தலைமையில் வேதகோஷங்கள் முழங்க யாகபூஜைகள் நடைபெற்று. மகா பூர்ணா ஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ பைரவர் சன்னதியை வந்தடைந்து 18 வகை திரவியங்கள், பன்னீர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. ஹம்ஸத்வணி இசைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர் பரணீதரன் தலைமையில் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துக்கொண்ட பக்தகோடிகளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஆலய அறங்காவலர் ராஜராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் செந்தில்குமார், சதானந்தன், பா.ஜ.க. நிர்வாகிகள் அழகிரிசாமி, இளங்கோவன், சேவாபாரதி நிர்வாகிகள் ரங்கதுரை, மும்மூர்த்தி. சமூக ஆர்வலர் ராஜதுரை, கருப்பசாமி, ஆலய நிர்வாகி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
    • சிறப்பு யாகங்களில் பக்தர்கள் கலந்து ெகாண்டு தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார்.

    அதேபோல ராமபிராமம் கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்புடைய கோவிலின் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.

    அதற்கான பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா, இன்று காலை சிறப்பு யாகங்களுடன் தொடங்கியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.
    • இதில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.

    இதையொட்டி தினம் தோறும் சத்ரு சம்கார சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு யாகம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோயிலின்நிர்வாகி ஸ்ரீதர் செய்தி ருந்தார். அர்ச்சகர் ஹரி தலைமை யிலான குழு வினர் சிறப்பு பூஜை, அலங்காரம், யாகத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். இரவு கந்த புராண சொற்பொழிவு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×