search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகம்"

    • கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி சித்தர் கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.
    • முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகநன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.

    இதில் மருத்துவ குணமிக்க மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்திரம் போன்ற பொருட்களை யாகத்தில் இட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகத்தை புதுக்கோட்டை பனைய பட்டி ஞானிபுல்லான் சாதுவழிபாட்டு குழு செழியன் சுவாமி வேதமந்திரங்களை கூறி நடத்தினார்.

    சிவகங்கை, மது ரை, புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் நடந்தது. இன்று காலை அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் சூட்டுகோல் மாயாண்டிசுவாமிக்கு அபிஷேக ஆராதனை- சிறப்பு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம்சூட்டுகோல் மாயாண்டி சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் குறிச்சிகாசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    • முதுகுளத்தூரில் யாகம் வளர்த்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அமைந்துள்ள பிரித்தியங்கரா தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் யாகம் வளர்த்து வழிபாடு செய்தனர்.

    இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மிளகாய் வத்தல், வெண்கடுகு, நெய், நல்லெண்ணெய் வழங்கி யாகத்தில் பங்கேற்று தோஷங்கள் நீங்க பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர். 

    • “ஆடி அமாவாசை”யை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

    ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி அமாவாசை"யை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன் தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும்,

    உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.

    கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கி மதியம் வரை நடந்தது.

    இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    யாக வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நோய் தொற்று குறைய வேண்டி நவ சண்டி மகா யாகம் தொடங்கியது.
    • இந்த யாகபெரு விழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பிரசித்தி பெற்ற 24 மணிநேரமும் அன்னதானம் நடைபெறும் மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் யாகபெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு20-வது நவசண்டியாக பெருவிழாநேற்று மாலை கணபதி ஹோமம் கடம் ஸ்தாபன நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இந்தயாகபெருவிழா, மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 6 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நோய் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையிலும், இயற்கையின் பேரழிவுகளிலிருந்து காத்து உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டி நேற்று (23-ந் தேதி) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை வேத முறைப்படி 6 நாட்கள் லட்சுமி நாராயண மகா யாகம், நவ சண்டி யாகம் நடைபெறுகிறது.

    நோய் தொற்றுகளாலும் பஞ்சம், பினிகள், கொள்ளை, நோய்கள் போன்றவற்றால் மக்கள் மனநலம், உடல் நலம் குன்றிய காலத்தில் அதிருத்ரம்,சத சண்டி யாகம் கொற்றவை வழிபாடு, அக்னி வழிபாடு செய்து முன்னோர்களும், நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் மஹா யாகங்களை செய்து மக்களை காத்து தெய்வ அருளால் வெற்றியும் பெற்றுள்ளனர்.

    இந்த யாகங்கள் வேத சான்றோர்களை வைத்து தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது. நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற இன்று (24-ந் தேதி) ஏகாசர கணபதி யாகமும், மஹா சுதர்சன யாகமும், குழந்தை இல்லாத தம்பதியர்களுக்காக குழந்தை செல்வம் வேண்டி நாளை (25-ந் தேதி) புத்ர காமேஷ்டி யாகமும், கடன் கஷ்டங்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும், துன்பங்கள் வராமல் இருக்கவும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ருணமோசன கணபதி யாகமும், மிருத்ஞ்ஜய யாகமும், வன துர்கா யாகமும், ஆயுஸ்ஹோமமும் நடைபெறுகிறது.

    சகல கஷ்டங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வரியமும் பெற தசமஹா வித்தியா யாகமும் மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா யாகமும் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. மிக முக்கிய யாகமான மகா நவசண்டி ஹோமம் 28-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிர ஸாக்த மடாலய நிர்வாகி ஞானசேகர சுவாமிஜி, மாதாஜி ராஜ குமாரி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் செய்து வருகின்றனர். இது குறித்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா கோவிலில் உள்ள ஞானசேகர சுவாமிஜி கூறுகையில், இங்கு அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதற்காக கடந்த 19 ஆண்டுகளாக சத சண்டி, சகஸ்சர சண்டி,அயுத்த சண்டி, அதிருத்ர மகா யாகங்களும் நடத்தப்பட்டு உள்ளது.

    இப்போது உலக மக்கள் எதிர் நோக்கும் பஞ்சம், கொரோனா, குரங்கம்மை போன்ற தீய தொற்று நோய்கள் அழிய வேண்டியும் மக்கள் அனைவரும் எல்லா ஜீவ ராசிகளும் பேரானந்தத்துடன் வாழ வேண்டியும் 18 சித்தர்களும் மற்றும் காஞ்சி மஹா சுவாமிகள் அருளால் இங்கு யாகங்கள் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் எந்த கோவிலிலும் இல்லாத இந்திய மருத்துவ பொரு ளான மிளகு ஆஹுதி செய்யப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றார்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய யாக மண்டபமும், யாக சாலைகளும் உள்ளன. லட்சுமி கணபதி, கொடிமர கணபதி, சொர்ண ஹாசர பைரவர், குண்டு முத்து மாரியம்மன், காசி அன்னபூரணி ஆகிய சன்னதிகளும் உள்ளது.

    இங்கு நடைபெறும் யாக விபரங்களை 9842858236 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து எளிதாக மானாமதுரை வந்து மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலை சென்று அடையலாம். பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    • மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுஜா ம்பிகை சமேத அட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில்ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண மணகோலத்தில் காட்சிய ளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் மணப்பெண் கோலத்தில் சுந்தரகுஜாம்பிகை, அட்சயலிங்க எழுந்தருளினர். யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாதியுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    ×