என் மலர்
நீங்கள் தேடியது "பதவியேற்பு"
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு
- புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்
கன்னியாகுமரி:
பத்மநாபபுரம் நகர வணிகர் சங்க புதிய நிர் வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா தக்கலையில் உள்ள லலிதா மகால் திரு மண மண்டபத்தில் நடந் தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், இணை செயலாளர் விஜயன். மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயகோபால் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து புதிய நிர்வா கிகள் பதவியேற்றனர். தலைவராக ஜெகபர் சாதிக் பொதுச்செயலாளராக விஜயகோபால், பொரு ளாளராக தாணுமூர்த்தி, துணைத்தலைவர்களாக சண்முகம், சுரேஷ்குமார், செயலாளர்களாக மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவ தலைவராக ஆனந்தம் சி.குமார் செயற்குழு உறுப் பினர்களாக ஜெயகுமார், பத்மதாஸ், ஹமாம், ஸ்ரீராம், ஹரி பாலாஜி, வர்க்கீஸ், இளங்கோ, ஜலால், சங்கர மூர்த்தி ஜூட்ஸ் பெர்லின், சேத்திரபாலன், ராஜூ, செய்தி தொடர்பாளராக ஜோஸ்வா ஆகியோர்பதவி யேற்றனர்.
விழாவின் சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். வியா பாரிகள் பல கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து வியா பாரம் செய்கிறார்கள் வணி கவரித்துறை, உணவு பாது காப்பு துறை போன்றவற் றால் ஏற்படும் பிரச்சினை களை சட்டரீதியாக நாம் சந்திக்க வேண்டும்.
இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை முடக் கும் விதமாக முதலில் வியா பாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்தார்கள். அதை விபாபாரிகள் ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றிற்கு வியாபாரம் செய்தனர்.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விற்கிறார்கள். இதனால் நம் வியாபாரிகள் பாதிக்கப்படு கிறார்கள் இதற்கு முடிவுகட் டுவதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நம் குறைகளை அரசிடம் முறை யிடுவோம் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராடுவோம். நமக்குள் ஒருவருக்கு பிரச்சினை என் றால் அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.
விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சின்ன துரை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், மண்டல தலைவர் வைகுண்டராஜன், பத்ம நாபபுரம் நகராட்சி தலை வர் அருள் சோபன், ஆணை யர் லெனின், தேர்தல் அதி காரி முருகேசன், சமூகசேவ கர் தக்கலை சந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் சங்க தலைவர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரி:
இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் அங்கம்
- தலைவருக்கு சுத்தியல் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் புதியஅங்கமாக, புதுக்கோட்டை ஆனந்தம் புதிய சங்க துவக்க விழா நேற்று மாலை புதுக்கோட்டையில் எழில் நகரில் உள்ள தாஜ் மினி ஹாலில் நடைப்பெற்றது. ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். புதிய தலைவரிடம், கூட்டங்களை நடத்த பாரம்பரிய சுத்தியல் வழங்கப்பட்டது.புதிய சங்கத்தின் பேனரும் வழங்கப்பட்டது.மாவட்ட அவை செயலர் செல்வராஜ், மாவட்ட அவை பொருளாளர காமராஜ், கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சசிகுமார், கூடுதல் மாவட்ட அவை பொருளாளர் சிபக்குமார், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டாக்டர் மகேந்திரன், சங்கம் விரிவாக்கம் நெல்சன் ஆரோக்கியம், மண்டல தலைவர்சிவக்குமார், வட்டார தலைவர் டாக்டர் அம்முட்டி பாபா வாழ்த்துரை வழங்குகினார். புதுக்கோட்டை ஆனந்தம் சங்க நிர்வாகிகள் தலைவராக சோலை சுப்பிரமணியன், செய லாளராக இளவரசு சோம சுந்தரம், பொருளாளராக எஸ்.என்.பழனியப்பன், முதல் துணைத் தலைவராக இளஞ்சேரன், இரண்டாம் துணை தலைவராக விஜயலெட்சுமி, துணைச் செயலாளராக ஆண்டோ கலைச்செல்வன், இயக்கு நர்களாக அமுதன், அமல சவரிராஜ், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக சுவாமிநாதன், தலைமை பண்பு பயிற்சி தலைவராக ச.மனோகர், முடுக்குனராக தங்கராஜ், அடுக்குனராக ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலராக சோலைச்சி, உறுப்பினர்களாக பத்பநாபன், அரவிந்த்ராஜா, கீதா, சூரஜ் ஜம்பாஜி ஜாதவ், இளங்கோவன், ருத்ர சங்கர் மாலி, சேகர், செல்வராஜ், பெரியசாமி, பிரேம் ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், அருள்செல்வம், நல்லதம்பி ஆகியோர்ப தவியேற்றனர். விழாவில் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மருத்துவர் ராம்பிரகாஷ், லயன்ஸ் மேனா.குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்றார்.
- 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். அவர் முதல் முறையாக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வந்துள்ளார்.
- முஸ்லிம் நிர்வாக சபையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
- முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.
பனைக்குளம்
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிழக்கு பகுதி முஸ்லிம் நிர்வாக சபையின் நிர்வாகி கள் பதவிக்காலம் முடிவ டைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டு பதவி ஏற்பு விழா நேற்று மாலை மதரஸா கட்டிடத்தில் நடந்தது.
முன்னதாக பனைக்குளம் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.இதில் முஸ் லிம் நிர்வாக சபை முன்னாள் நிர்வாகிகள், வாலிப முஸ்லீம் சங்க
தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிசாஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான ஜெய்னுல் அஸ்ஸலாம், செயலாளர் ரோஸ்சுல்தான், பனைக் குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் முகைதீன், செயலாளர் தாகிர் உசேன், ஜமாத்-சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பனைக்குளம் முஸ்லிம் நிர்வாகசபையின் தலைவராக பாரமபரியமிக்க சீ.கு.என்ற குடும்பத்தை சேர்ந்த ஹம்சத் அலி 7-வது முறையாக ஜமாத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். உதவி தலைவராக ஏ.முகைதீன் அலி, செயலாளராக ஏ.கரீம் கனி, உதவி செயலாளராக நூருல் மன்னான், பொரு ளாளராக எம்.பி.எம்.சாகுல் ஹமீது உள்பட உறுப்பி னர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் முன்னிலையில் பதவி ஏற்ற னர். பின்னர் முஸ்லிம் பரிபாலன சபை தலை வர் ஜெய்னுல் அஸ்லலாம் பேசுகையில், புதிய நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்க ளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கிராமத்தின் வளர்ச்சிக்கும், ஒற் றுமைக்கும் உறுதுணையாக இருந்து நமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக வாலிப முஸ்லிம் சங்கதலை வர் சீனி அன்வர்அலி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.
- தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.
- மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு துணை தலைவரும், கலெக்டருமான சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு அலுவலர் சாந்தா வரவேற்றார்.
இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, பூதட்டியப்பா, வெங்கடாசலம் என்கிற பாபு, சசிகலா, பழனி, வித்யா, சீனிவாசலு, சுனில்குமார், மணிவண்ணன் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பிரச்சன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, கிருஷ்ணகிரி நகராட்சி பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், ஒன்றிய குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, உஷா குமரேசன், சசி வெங்கடசாமி, கேசவமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.
- கீதா ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊட்டி,
கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக இருந்த கீதா, தற்போது நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட கீதாவை நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் செயலர் மூர்த்தி, முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
- பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
- பதவி பெற்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
பள்ளியின் மாணவர் மன்ற தலைவர்களாக கியோன் அபிஷேக், தர்ஷினி , துணைத்தலைவர்களாக ஹியக் நரசிம், கீர்த்தனா, விளையாட்டுத்துறையின் செயலாளராக யதுகிருஷ்ணா ஆகியோர் பதவியேற்று கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துறையின் செயலர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பொறுப்பேற்று க்கொண்டனர்.
பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு ரோட்டரி அமைப்பின் முன்னாள் ஆளுநர் இளங்குமரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்து மாணவர்களிடையே தலைமைப்பண்பினால் கிடைக்கும் பெருமை பற்றியும், ஒற்றுமையின் பலன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் பள்ளியின் மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோருடன் இணைந்து பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
- விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேப் பொதுப்பள்ளியில் மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் மாணவத் தலைவர்களை தேர்ந்தெடுக்க டிஜிட்டல் முறையில் வாக்குப்பதிவு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ பிரதிநிதிகளுக்கு கூடுதல் ஆட்சியர் பதவி பிரமாணம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார்.
- போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.
போகலூர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.
மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- பதவியேற்பு விழா நடந்தது.
- வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரி பரமேசுவரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிக்குமார், மண்டல தலைவர் ஜெயச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.
விழாவில் தலைவராக ராமசந்திரன், செயலா ளராக பாலசுந்தரம், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு ஆடை கள், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தை களுக்கு விளையாட்டு உப கரணங்கள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி, காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபுசரவணன், சோழவந்தான் நகர்தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
கோவை,
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.