search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்ற"

    • மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
    • பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்

    பவானி,

    பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • ரகுநாத், செல்லமுத்து அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளை யம் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடத்தூர் போலீசார் சிங்கிரிபாளை யம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது கடை அருகே சோதனை செய்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் அனுமதி யின்றி மது விற்று கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் மது விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த னர்.

    இதில் அவர்கள் கோபி செட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாத் (32), புதுகோட்டை மாவட்ட த்தை சேர்ந்த செல்லமுத்து என்றும் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.2,340 மதிப்புள்ள 18 மது பாட்டில்கள் மது விற்று வைத்து இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரை கண்டதும் செல்லமுத்து அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வரு கிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். 

    • வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    பவானி:

    பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பவானி திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி குட்ட முனிய ப்பன் கோவில், கூத்தம்பட்டி பகுதியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்தின் அருகில் உள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் பவானி, திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு (45) என்பதும் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சிங்காரவேலுவை போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பவானி அருகில் உள்ள எலமலை கிராமம், குள்ளம்பாறை பகுதியில் சித்தோடு போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குள்ளம் பாறை பகுதியில் மறைவான இடத்தில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி‌ (73) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து 7 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மது பாட்டில்கள் விற்பனை செய்த பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது செல்லியாண்டி அம்மன் பூக்கடை அருகில்‌ 12 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.

    அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×