search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    • சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    • பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.

    இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    • 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

    அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
    • ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • வரும் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் தொ.மு.ச. தவிர்த்து மற்ற பிற தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பொங்கலுக்கு முன்பு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் 9-ந்தேதி ஸ்டிரைக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நாங்கள் முறையான ஸ்டிரைக் நோட்டீசு வழங்கி விட்டோம். 4-ந்தேதியே அந்த கெடு முடிந்துவிட்டது. இருந்தாலும் 5 நாள் 'டயம்' கொடுத்து 9-ந்தேதி தான் வேலைநிறுத்தம் நடத்த இருக்கிறோம்.

    எனவே பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது பாதிக்கப்படக்கூடாது என கருதும் தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வருகிற 9-ந்தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
    • பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும்.

    சென்னை:

    போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற 9-ந்தேதி முதல் நடைபெறும் என்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    ஆனால் அரசு தரப்பில் பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் இப்போதைக்கு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறும் போது, "தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என்று இப்போது 'டிமாண்ட்' வைக்கின்றனர். இது அரசியல் நோக்கமாகவே தெரிகிறது. பொங்கலுக்கு பிறகு பார்த்து செய்கிறோம் என்று சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கான பஸ்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் நலன் கருதி அனைத்து பஸ்களையும் இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பஸ்களை தடையின்றி இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் அனைத்து பொது மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    நமது நிறுவனம் அத்தியாவசியப் பணி தொடர்புடைய நிறுவனமாகும். எனவே இப்போதைய சூழலில் எந்தவொரு நாளிலோ வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

    இந்த நிலையில் பஸ்களின் செம்மையான மற்றும் சீரான இயக்கத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்தவிதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பஸ் இயக்கம் நடைபெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் பணிபுரிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு பணிமனையிலும் தொழிலாளர்களின் வருகை பதிவு குறித்த விவரங்களை பொது மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வருகை பதிவு விவரங்களை அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் மூலம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை வரை விடுமுறை எடுக்க முடியாது. விடுமுறை எடுப்பதற்கு பொது மேலாளரிடம் அனுமதி கேட்க வேண்டும்.

    இதையும் மீறி விடுப்பு எடுத்தாலோ அல்லது ஸ்டிரைக்கில் கலந்து கொண்டாலோ அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

    9-ந்தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பணிமனை முன்பும் பஸ்களை இயக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு போக்குவரத்து கழகம் சார்பில் அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாடு செய்து வருகிறார்.

    பஸ் நிலையங்களிலும் 9-ந்தேதியன்று தேவையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிவசங்கர் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

    பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-

    அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.

    ஆனால் மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.

    போக்குவரத்து துறை முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சீரழிந்து வந்த துறையை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

    பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
    • நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.

    இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.

    ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

    கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?

    பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.

    கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?

    பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.

    ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.

    நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.

    கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?

    பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.

    போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.

    இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.

    சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.

    எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.

    எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.

    இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. தன்னார்வ நிறுவனங்களும், மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரண பொருட்கள் கட்டணமின்றி இலவசமாக அனுப்பப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

    தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பணியாளர்களின் உழைப்பை சுரண்டும் குத்தகை நியமன முறையை கடந்த காலங்களில் தி.மு.க.வே எதிர்த்துள்ளது.
    • வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 234 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் மூலம் குத்தகை முறையில் அமர்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டும் குத்தகை நியமன முறையை கடந்த காலங்களில் தி.மு.க.வே எதிர்த்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்காக பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளைத் தான் மக்கள் நம்பியிருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது.

    எனவே, மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர் பகுதி முதல் கிராமங்கள் வரை மட்டுமின்றி மலைப்பகுதியிலும் அரசு பஸ்கள் செல்வதால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக 19 ஆயிரம் பஸ்கள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

    அரசின் நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு ஆண்டு தேய்ந்து தற்போது மிகவும் மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.

    அரசு பஸ்களில் தினமும் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள்.

    பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் சராசரியாக தினமும் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொது க்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் மீண்டும் பழையபடி கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பஸ்களை இயக்குவதற்கான டீசல் செலவு, சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த சேவையாக போக்குவரத்து இருப்பதால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. டீசல் கொள்முதல், சுங்கச்சாவடி கட்டணம், ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு, அகவிலைப்படி என பல்வேறு செலவினங்கள் அதிகரித்து செல்வதால் வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது என்று துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் 7, 8 ஆண்டுகள் பயன்படுத்திய பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. புதிய பஸ்கள் வாங்க அரசுதான் நிதியுதவி அளித்து வருகிறது.

    மோசமான நிலையில் உள்ள பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் வாங்குவதற்கு போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லை.

    சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் மாதத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.30 கோடி செலுத்துவதாக கூறப்படுகிறது. வருவாயில் ஒரு பகுதி சுங்கச்சாவடிக்கு போய் விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒரு சுங்கச்சாவடிக்கு ரூ.450 வசூலிக்கப்படுகிறது. ஒரு பஸ்சிற்கு சுங்க கட்டணமாக ரூ.5000 வரை செலுத்த வேண்டியுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளித்தால் ஓரளவிற்கு நஷ்டத்தை குறைக்கலாம். தனியார் பஸ்களை போல அரசு பஸ்களை இயக்க முடியாது.

    லாப நஷ்டத்தை பார்க்காமல் மக்கள் சேவையாக கருதியே ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு லாபம் கிடைப்பது இல்லை. நஷ்டம் தான் ஏற்படுகிறது. மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் டீசல் செலவு அதிகரிக்கிறது.

    அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு வழங்கி ஈடு செய்தால் மட்டுமே புதுப்பொலிவு பெறும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி நெருக்கடி, செலவினம் அதிகரிப்பால் போக்குவரத்துக் கழகங்கள் தடுமாறுகின்றன. இதுபற்றி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது,

    மக்கள் நலனுக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்திக்கிறோம்.

    ஓய்வூதிய பலன்கள், ஊதிய உயர்வு ஒரு பக்கம் செலவினத்தை அதிகரித்து வரும் நிலையில் டீசல் விலை கடும் இழப்பை ஏற்படுத்துகிறது.

    பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வழியில்லை. ஆனால் அது அரசின் கொள்கை முடிவு. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையில் இருந்து அரசுதான் உதவ வேண்டும்.

    புதிய பஸ்கள் வந்தால் தான் மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள். அதிகரித்து வரும் வருவாய் இழப்பை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் புத்துணர்ச்சி பெறும் என்றனர்.

    • பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
    • மலைப் பகுதியில் இயக்குவதற்கு வசதியாக 16 சிறப்பு பஸ்கள் வாங்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. நகர மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் இந்த பஸ்களை ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முந்தைய பழைய பஸ்களை மறுசீரமைத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் தவிர மற்ற 6 போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களில் ஓடுகின்ற பஸ்கள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாகவே உள்ளது.

    அதனால் 1666 புதிய பஸ்கள் வாங்குவதற்கு சாலை போக்குவரத்து நிறுவனம் டெண்டர் இறுதி செய்துள்ளது.

    நகரம் மற்றும் புறநகர் பகுதியில் பஸ் சேவையை மேம்படுத்தும் வகையில் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களுக்கு 367 பஸ்கள், மதுரை 350, விழுப்புரம் 344, கோவை 263, திருநெல்வேலி 242, சேலம் 84 பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்படுகிறது.

    மலைப் பகுதியில் இயக்குவதற்கு வசதியாக 16 சிறப்பு பஸ்கள் வாங்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பஸ்கள் வாங்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இதற்கான டெண்டர் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகிறது. பி.எஸ்.Vi என்ஜின் வகை புதிய பஸ்களில் பொருத்தப்படுகிறது. இதில் பயணிகளுக்கு கூடுதலாக பல்வேறு வசதிகள் இடம்பெறுகிறது.

    • தமிழில் பேசவும் படிக்கவும், எழுத தெரிந்திருப்பது அவசியம்.
    • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தம் 685 காலியிடம் இருப்பதாகவும், இந்த வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி மதியம் 1 மணி வரை கால அவகாசம் இருப்பதாகவும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விண்ணப்பிப்பவர்களுக்கு 1.1.23 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் பேசவும், படிக்கவும், எழுத தெரிந்திருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ., எடை 50 கிலோ இருக்க வேண்டும்.

    கனரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் குறைந்த பட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் ஓட்டுனர் உரிமம் 1.1.2023-க்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    கண் பார்வை திறன் குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு, இரவு குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு, வளைந்த கால்கள், முழங்கால் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ×