search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 241425"

    • பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.
    • பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் , பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை நடுவேலம்பாளையம் பொதுமக்கள் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்து மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .இதில் நடுவேலம்பாளையம் ,லட்சுமிநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாரியம்மன் கோவில் முத்து பல்லாக்கு நடைபெற்றது
    • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் முத்து பல்லாக்கு விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, உடம்பில் அழகு குத்தியும் கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முத்து பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மன் கருவறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை மண்டக படித்தார்கள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
    • புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சேர்வராயன் பாளையம் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் சிற்பங்கள் அனைத்தும் வர்ணங்கள் தீட்டி புது பொலிவு பெற்றது.

    இதன் பின்னர் கோவில் வளாகத்தின் முன்பாக யாகசாலை பூஜை பந்தல் அமைத்து அதில் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை யிலான சிவாச்சாரியார் குழுவினர் மூலம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    விழாவில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், தொட்டி பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கேபிள் சேகர், விழா குழுவினர் மற்றும் பவானி, காடையம்பட்டி, புது காடையம்பட்டி

    சேர்வராயன் பாளையம், தொட்டிபாளையம், பெரிய மோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய் பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது.
    • மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

     சிதம்பரம்:

    சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீ மாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோவிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

    இன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவமும், 3-ந் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர். தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பஸ்கள்இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடுமலை:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி பெருவிழா நடைபெறுவது வழக்கம் இதன்படி நாளை 22 ந்தேதி ஆடிப்பெரு விழா தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் ஆடி வெள்ளிக்கிழமையான வரும் 22ந்தேதி காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.23ந்தேதி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை ,28 ந்தேதி சர்வ ஆடி அமாவாசையை ஒட்டி அதிகாலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 29 ந்தேதி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஆகஸ்ட் 1ந்தேதி திருஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நாகசதுர்த்தி விழா நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மங்கள இசை ,4 -45 மணிக்கு அபிஷேகம் ,அலங்காரம் ,மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஆகஸ்ட் 3 -ந்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    5 ந்தேதி மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருஞானம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11 ந்தேதி ஆடி மாத பௌர்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12 ந்தேதி ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்யு.எஸ்.எஸ். ஸ்ரீதர் செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து மாரியம்மன் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தார்.
    • அப்போது சிறுமி ஒருவர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது மாரியம்மனின் வலது கண் திறந்திருப்பதாக பூசாரியிடம் தெரிவித்தார்.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செலக்கரச்சல் அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    30 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து மாரியம்மன் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமி ஒருவர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது மாரியம்மனின் வலது கண் திறந்திருப்பதாக பூசாரியிடம் தெரிவித்தார்.

    அதனைப் பார்த்த பூசாரி பக்தி பரவசத்துடன் அம்மனை அலங்கரித்து பூஜைகளை செய்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்துவற்றை தனது தந்தையிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தெரிவித்தார்.

    அம்மன் கண் திறந்திருப்பதை கேள்விப்பட்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த தகவலானது அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    இதையடுத்து திம்மநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். கோவிலில் மாரியம்மன் வலது கண் திறந்து இருப்பதாகவும், கண்ணில் இருந்து கண்ணீர் வடித்ததாகவும் பக்தர்கள் பரவசத்துடன் கூறினர்.

    இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக வந்து மாரியம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக மாரியம்மனின் கண் திறந்து இருப்பதாகவும் வலது கண்ணில் நீர் வடிவதாகவும் இது எங்களுக்கு ஆச்சரியமாகவும் உள்ளது என பக்தி பரவசத்துடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • சங்கராபுரம் அருகே மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஊரணி பொங்கல், காத்தவராயன் திருக்கல் யாணம், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப் பட்ட பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×