என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி பாபு"

    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ACE படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

    இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வரும் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.

     

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், இத்திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. 

    • கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

    இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், இத்திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபுவின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதல் ஒரு புகைப்படம் யோகி பாபு பெண் வேடம் அணிந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டியிருந்தார்.
    • மே 16-ந்தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரிக்கிறார். எஸ்.என். அருணகிரி இசையமைக்கிறார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    • யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், சாந்தினி தமிழரசன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'.
    • இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

    யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், சாந்தினி தமிழரசன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. மேலும் இப்படத்தில்வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார்.

    இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

    700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட நாக ரத்தினம் அடங்கிய பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும் அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

    திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது அதில் தயாரிப்பாளர் யோகி பாபுவை சாடி பேசியுள்ளார் அதில் அவர் " கஜானா திரைப்படத்தின் இயக்குநர் சாம்ஸ் கண்டிப்பாக  ரிலீசுக்கு பிறகு பெரிய இயக்குநராக வருவது நிச்சயம். இன்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பஞ்சமாக இருக்கிறார்கள். பட ப்ரோமோஷன்களுக்கு நடிகர்கள் கண்டிப்பாக வர வேண்டும், யோகி பாபு இன்று வரவில்லை, 7 லட்ச ரூபாய் கொடுத்து இருந்தால் இன்று வந்திருப்பார். இது கேவலமான விஷயம். ஒரு நடிகனுக்கு அவர் நடிக்கும் திரைப்படம் ஒரு குழந்தைப் போல். அதை வளர்க்க முடியவில்லை என்றால் அவர் நடிப்பதற்கு தகுதியில்லாதவன்" என கடுமையாக பேசியுள்ளார்.

    • ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தை வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    கடந்த ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் தீரா காதல் மற்றும் பார்ட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன . இந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பேபி& பேபி திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில், ஜெய் நடிக்கும் புதிய படத்திற்கு ஒர்க்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தை வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.

    யோகி பாபு, நாகிநீடு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் படத்தில் சம்பிகா, ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஸ்ரீனிவாசன், ரவி மரியா, சாம்ஸ் ,நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை கே கோகுல் மேற்கொள்ள. பைஜு ஜேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கரம் மசாலா படத்தை அப்துல் மஜித் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

    விமல் சமீபத்தில் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்
    • இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

    மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது.

    நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார்.

    சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடைவடிவமைப்பு செய்கிறார்.

    படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படம் இயக்கும் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன். சமீபத்தில் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ரவி மோகன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் நடிப்பை தொடர்ந்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ரவி மோகன் மற்றும் யோகி பாபு இணையும் புதிய திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. விரைவில், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

    நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் நடிகர் யோகி பாபு பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்குள்ள காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

     

    யோகி பாபு

    யோகி பாபு

     

    இதற்கிடையில் நடிகர் யோகி பாபு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட வந்த தகவல் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு ஏராளமான பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக திரண்டு வந்தனர். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த நடிகர் யோகி பாபுவுடன் ரசிகர்கள் செல்போனில் செல்பி எடுப்பதற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் முற்றுகையிட்டனர்.

     

    சாமி தரிசனம் செய்ய வந்த யோகி பாபு

    சாமி தரிசனம் செய்ய வந்த யோகி பாபு

    இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் யோகி பாபு தவித்தார். உடனே அவருடன் வந்தவர்கள் பத்திரமாக மீட்டு கோவிலுக்கு வெளியே நின்ற காருக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் அந்த கார் மூலம் புறப்பட்டு சென்றார். 

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் நடிகர் யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    யோகி பாபு பகிர்ந்த மீம்

    யோகி பாபு பகிர்ந்த மீம்

    இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் யோகி பாபு.
    • இவர் நடித்த 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    யோகி பாபு

    சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபல நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    யோகிபாபு விரைவில் கதை எழுதி திரைப்படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் யோகி பாபு ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசேஷ பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

    மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

    மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

     

    இந்த நிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் 146 அடி உயர சாமிக்கு மலர் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×