search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி பாபு"

    • திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை சமீபத்தில் பார்த்த பார்த்திபன் பட இயக்குனரான சீனு ராமசாமி மற்றும் அப்படத்தில் நடித்த ஏகனை பாராட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது " இவ்வளவு மனித நேயமிக்க படத்த நான் சமீபத்துல பாக்கல. ஏகனின் நடிப்பு மிக நன்றாக உள்ளது. ஆல் தி பெஸ்ட் ஏகன் . இதுக்கு மேல பேசுனனா எமோஷனல் ஆகிடுவேன்" என கூறிவிட்டு சென்றுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான காத்திருந்தேன் பாடல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார்.

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    படத்திற்கு `தி கில்லர் மேன்' என பெயரைட்டுள்ளனர். படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைபடம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்ராந்த் அடுத்து ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார்.

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்போகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்
    • திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    தங்கையை வளர்க்க அண்ணன் கஷ்டப்படுகிறார், கிடைக்கும் எல்லா வேலைகளை செய்கிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது . திரைப்படம் மிகவும் எமோஷனலாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.

    தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்ல துரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரிகிடா சகா இதற்கு முன் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ரியோராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ படத்தில் ஏகன் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படம் 22 ஆம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் செப்டம்பர் 18 ஆம் தேதி திரையிடவுள்ளனர். ஆக்லெண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என பெருமையை பெறுகிறது கோழிப்பண்ணை செல்லதுரை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
    • வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர்.

    இத்திரைப்படம் தெலுங்கில் கூட சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுக்கும் போட்டோ தான் அது. இந்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜெயிலர் 2 திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.
    • படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டது. இவருடன் இந்திய சினிமா பிரபலங்களான ஜாக்கி செராஃப், மோகன் லால், சிவராஜ் குமார் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.

    ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.

    இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.

    தற்பொழுது ஜெயிலர்-2 படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார். இந்த பாகத்திலும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் ரசிக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . போட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் `போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மற்றொரு படப்பிடிப்பில் இருந்து வருவதால் தாமதம் ஆனது என்றார்.

    படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, இயக்குனர் சிம்புதேவனுக்கு நன்றி, படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் செய்தியாளர் விடாமல் கேட்ட கேள்வியால் சற்று கடுப்பான யோகிபாபு அனைவருக்கும் நன்றி மேடையில் இருந்து கீழே இறங்கினார் அப்பொழுதும் விடாமல் ஒரு செய்தியாளர் கேள்விகளை கேட்டார். அப்பொழுது அதற்கு அவரைப் பார்த்து யோகி பாபு , மைக் ஆஃப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன் என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிழம்பி சென்றார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்னி சாம்பார் தொடர் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
    • யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

    அந்நிகழ்வில்

    நடிகை வாணி போஜன் பேசியதாவது…

    ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.

    இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...

    திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்தஎன்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சட்னி சாம்பார் வெப் தொடரை ராதாமோகன் இயக்கியுள்ளார்.
    • ரோஷன் மாத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாரடைஸ்.

    1. சட்னி சாம்பார் {தமிழ்}

    யோகி பாபு தற்பொழுது உள்ள நகைச்சுவை நடிகர்களுள் முன்னணி இடத்தில் இருப்பவர். பல தமிழ் திரைப்படங்களில் நடித்த யோகி பாபு தற்பொழுது முழு நீள வெப் தொடரில் களம் இறங்கியுள்ளார். அவர் நடிக்கும் வெப் தொடரை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

    வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு, வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    2.பாரடைஸ் {மலையாளம்}

    ரோஷன் மாத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாரடைஸ். இப்படத்தை பிரபல இயக்குனரான பிரசன்னா இயக்கியுள்ளார். இப்படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    ஒரு தம்பது அவர்களது 5 - வது திருமண நாளை கொண்டாடுவதற்கு இலங்கை சுற்று பயணம் செல்கின்றனர். அங்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் நிலவி வருவதால் அங்கு அவர்கள் மாட்டிக் கொள்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களம்.

    இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    3 Mr.& Mrs. மஹி {இந்தி}

    இப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட தம்பதி, தன் மனைவிக்கு கிரிக்கெட் விளையாடவும் மிகப் பெரிய ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு தன் மனைவிக்கு கதாநாயகனானும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராக இருந்த ராஜ்குமார் ராவ் அவருக்கு பயிற்சி அளிக்கிறார். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    4 பையா ஜி {இந்தி}

    பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பயி நடிப்பில் பையா ஜி எனும் திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    5 பிளடி இஷ்க் {இந்தி}

    விக்ரம் பட் இயக்கத்தில் வர்தன் புரி, அவிகா, கோர், ஜெனிஃபர் மற்றும் ஷியாம் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பிளடி இஷ்க். இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்,
    • இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.

    நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கிடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார்.

    'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படுத்தும் விதத்தில் படக்குழுவினர் காமிக் வடிவில் இதன் களத்தை விவரிக்கும் ஒரு சிறுகதையையும் வெளியிட்டுள்ளனர். இந்த காமிக் வடிவ கதையில் இயக்குநர் ராதாமோகனுக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான கற்பனை உரையாடல் இடம்பெற்றுள்ளது. ராப் மியூசிக்கும் மற்றும் காமிக் வடிவ தொடரும் இந்த சீரிஸ் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு கதை நாயகனாக ஒரு சீரிஸில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.

    இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.

    இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×