search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை"

    • பக்ரீத் அன்று ஆடுகள் விற்பனை களைகட்டும்.
    • பக்ரீத் அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்தனர்.

    டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மட்டுமில்லாமல் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் ஆட்டை வெட்டி பிரியாணி செய்து அனைவருக்கும் பகிர்ந்து அழிப்பார். அதனால் ஆடுகள் விற்பனை அப்போது களைகட்டும்.

    டெல்லியில் நடைபெற்ற ஆடுகள் விற்பனையில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

    டெல்லியில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகை அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற முடிவு செய்தனர். அவர்களால் எல்லா ஆடுகளையும் காப்பாற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் முடிந்த அளவு ஆடுகளை காப்பாற்றலாம் என்று முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

    கிட்டத்தட்ட 15 லட்சம் நிதி திரட்டியவர்கள், முஸ்லிம் போல வேடமிட்டு 124 ஆடுகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் மூலம் 124 ஆடுகளின் உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்று ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    தற்போது வாங்கிய 124 ஆடுகளை என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் முழித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தினரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும், பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.
    • 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

    போச்சம்பள்ளி:

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.

    இந்நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 8 ஆயிரம் ஆடுகள் விற்பனைகாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்தனர்.

    அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆடுகளை வாங்கவும், விற்கவும் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.12 ஆயிரத்திற்கு விலை போகும் நிலையில் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையில் விலை போனது.

    இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஆடு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆனாது. இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பண புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் போச்சம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.
    • ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர்.

    திருச்சி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆடுகள் குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பண்டிகைக்கு அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை இன்று களை கட்டியது. இங்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.

    அதேபோன்று திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி வழக்கத்துக்கு மாறாக வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

    100-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வழக்கமாக இந்த சந்தையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் 1½ கோடி வரை வியாபாரம் நடைபெறும். நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இன்று ரூ.1 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர். பொதுவாக ஒரு ஆடு ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும்.

    இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 22 ஆயிரம் வரை அதிகபட்சமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று நடைபெற்ற சந்தையில் 5 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    • நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
    • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.

    பொள்ளாச்சி:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தை நேற்று கூடியது. இதில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்ததுடன், கூடுதல் விலையும் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள.

    இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.

    நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பல மாதத்துக்கு பிறகு மீண்டும் சந்தை களை கட்டியது.

    பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகம் உள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.

    கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. ஆனால் நேற்று 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
    • வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும்

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

    பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 சதவீத ஆடுகள் வருகை தந்துள்ளன.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.

    பக்ரீத் பண்டிகையை யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    அரூர்:

    கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

    இந்தநிலையில் இன்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் வளர்க்கும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடைமுறைகள் இருந்ததால் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்தே இருந்தது. இந்த நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

    ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதனால் அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். அதிலும் கருப்பாக உள்ள வெள்ளாடுகளையே அதிகமாக வாங்கினர்.

    மேலும், கொம்பு கிடாக்களையும் மக்கள் வாங்கினர். இன்றைய சந்தையில் இறைச்சிக்காக 10 கிலோ எடையில் இருந்து 35 கிலோ எடை வரை ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வெள்ளாடுகள் 10 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 30 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் 9 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

    ஆனால் இன்றைய சந்தையில் ஆடுகள் விலை 500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையாகியது. ஆடுகள் விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேர்தலுக்கு பிறகு, பண்டிகை காலம் என்பதால் இன்று நடந்த சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாகவும், அடுத்து வரும் வைகாசி மாதத்திலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
    • கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

    • ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
    • சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் 7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

    இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
    • ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

    இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    • ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

    திருமங்கலம்:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிக பணத்தை கொண்டு வர முடியாததால் பகிர்ந்து கொண்டு செல்வதாகவும், ஏற்கனவே எங்களை நம்பி ஆடுகளை கொடுத்து விடும் மக்களுக்கு நாங்கள் உரிய முறையில் பணத்தைக் கொண்டு செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் நிலவுவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.

    • இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
    • தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும்.

    செஞ்சி:

    செஞ்சி வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. செஞ்சி பகுதி மலைகள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இதனால் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும்.

    வழக்கம்போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. ஆனால் கடந்த காலங்களைப்போல் ஆடுகள் அமோகமாக விற்பனையாகவில்லை மந்தமாகவே இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும். இதனால் இப்போது இந்த வார சந்தையில் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×