search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242250"

    • சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.
    • பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:-

    சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது.

    துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
    • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

    நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

    இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

    இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

    • தற்போது பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது.
    • நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர்.

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது.

    பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

    நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது. ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.

    மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

    2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.

    • கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

    2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

    3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

    5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

    7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

    8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

    • இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
    • உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

    சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே அரிசி உணவுகள் மோசமானவை என்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லா வகை அரிசியும் மோசமானவை அல்ல. கருப்பு அரிசி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. இது நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து மிகுந்துள்ள இது ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. கருப்பு அரிசி மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

    இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களுடன் அரிசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

    சர்க்கரை நோயாளிகள் கருப்பு அரிசியை எடுத்துவருவதன் மூலம் எடை இழப்பை சாத்தியமாக்கலாம். இது அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது என்பதால் எடை இழப்பை உறுதி செய்கிறது. கருப்பு அரிசி முழு தானியங்கள் மற்றும் அவற்றின் தவிடு மற்றும் எண்டோஸ்பெர்ம் அப்படியே இருப்பதால் உடலால் மெதுவாக கிரகிக்கப்படுகிறது. இது உடல் பருமனை எதிர்த்துபோராட உதவுகிறது. கருப்பு அரிசி இதயத்துக்கு இதம் அளிக்கும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் கருப்பு அரிசியை உட்கொள்வது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதயத்தை சரியாக இயங்க வைக்க செய்கிறது. சர்க்கரை நோயாளி கருப்பு அரிசியை சேர்ப்பது பாதுகாப்பானது என்றாலும் சரியான அளவை அறிய ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டாக்டர்கள் ஆலோசனைகளை பின்பற்றித்தான் சாப்பிட வேண்டும். அதோடு சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டால் மட்டுமே சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • ஒருவருக்கு நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதை, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்து கொள்ள முடியும்.
    • இந்த பரிசோதனையை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    சிலருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாவிட்டாலும், அவர்களுடைய ரத்தசர்க்கரை அளவுகள் நீரிழிவு நோயின் எல்லைக்குள் இருக்கும். இப்படிச் சந்தேகத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு, 'ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை' பரிந்துரை செய்யப்படுகிறது.

    இது எப்படிச் செய்யப்படுகிறது? இவர்கள், முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு முந்தைய நாள் இரவில் உணவு சாப்பிட்ட பின்பு, பரிசோதனைக்குச் செல்லும்வரை எதையும் சாப்பிடக் கூடாது. 8-லிருந்து 12 மணி நேரம் கழித்து, மறுநாள் காலையில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். முதலில் வெறும் வயிற்றில், ரத்தச் சர்க்கரை பரிசோதிக்கப்படும். இதைத் தொடர்ந்து, அவருக்கு 300 மி.லி. தண்ணீரில் 75 கிராம் சுத்தமான குளுக்கோஸ் மாவைக் கலந்து தருவார்கள். அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் அதைக் குடித்துவிட வேண்டும். இதிலிருந்து சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுத்து, சர்க்கரையைக் கணக்கிட வேண்டும்.

    அப்போது, ரத்தச் சர்க்கரை அளவுகள் முறையே வெறும் வயிற்றில் 80 முதல் 110 மி.கி./டெ.லி. வரை இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 111 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இல்லை. வெறும் வயிற்றில் 111 முதல் 125 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அது 'இம்பயர்டு பாஸ்டிங் குளுக்கோஸ்'. அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்பு உள்ளது. அதாவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை- பிரீ டயாபடிஸ். குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 141 முதல் 199 மி.கி./டெ.லி. வரை இருந்தால், 'இம்பயர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ்'. இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைதான். வெறும் வயிற்றில் 126 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு இருக்கிறது.

    ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதையும், இனிமேல் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு முக்கியமான பரிசோதனை இது. நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இது யாருக்குத் தேவை? நீரிழிவுக்கான அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் இதை செய்துகொள்ள வேண்டும். அறிகுறி எதுவும் தெரியாதவர்கள், 40 வயதில் ஒருமுறை செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொண்டால் போதும்.

    • நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.
    • காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.

    காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலுக்கு ஊட்டமளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடும். இன்சுலின் வெளியீட்டையும் கட்டுப்படுத்தும். எனவே அன்றைய நாளின் முதல் உணவாக வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படும் காலை உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும்.

    குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த காலை உணவில் முட்டைகளை சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் முட்டைகளில் கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். புரத சத்து மிகுந்திருக்கும். ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.

    இது நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவும். எனினும் இரண்டு முட்டை சாப்பிடும் விஷயத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு முட்டை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நார்ச்சத்து இதில் உள்ளது.

    இதனை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக கொண்டிருக்கும் ஸ்மூத்திகளையும் தயார் செய்து காலை உணவுடன் பருகலாம். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். சியா விதைகளின் உதவியுடனும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

    சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்துகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க துணை புரியும். காலை உணவில் பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக பராமரிக்கப்படும்.

    • எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று.
    • நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

    சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. அதுபோல் நிறைய பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். அப்படி சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

    அல்லது ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். ரத்தத்தை வடிகட்டவும், கழிவுப்பொருட்களை அகற்றவும் உதவும் சிறுநீரகங்கள் அந்த வகை உணவுகளை உட்கொள்வதற்கு கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்கள் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்காவிட்டால் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உலர்த்துதல், உப்பிடுதல், வெப்பத்தில் சூடுபடுத்துதல் போன்ற செயல்முறைகள் மூலம் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் வெளியேறிவிடும்.

    பன்றி இறைச்சியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயார் செய்யப்படும் இறைச்சி, வகையான சாசேஜ் போன்றவற்றை சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட அந்த உணவுகளில் அதிக சோடியம் உள்ளன. இது தினசரி அனுமதிக்கப்பட்ட அளவுகளில் 60 முதல் 70 சதவீதம் அதிகமாகும். எனவே அத்தகைய உணவுகளை தினமும் உட்கொண்டால் சிறுநீரக செயல்பாடுகளை சிதைத்துவிடும்.

    அடர் நிற சோடாக்கள்: இப்போது சோடாக்கள் பல்வேறு வண்ணங்களிலும், சுவைகளிலும் வெளிவருகின்றன. பெரும்பாலும் குளிர்பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் கொண்ட அடர் நிற சோடாக்கள் கலக்கப்படுகின்றன. 350 மி.லி. கொண்ட பானங்களில் 90 முதல் 180 மி.கி வரை சோடாக்கள் சேர்க்கப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிக்கு அனுமதிக்கப்படும் பாஸ்பரஸ் அளவை விட பல மடங்கு அதிகம். அடர் நிற சோடாக்கள் உணவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கு வித்திடக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

    பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்கள்: சிறுநீரக நோய், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சர்க்கரை அல்லது பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. அவற்றுள் அவகேடோ, ஆப்ரிகாட், கிவி, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் இந்த பழங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வேறு சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். திராட்சை, அன்னாசி, மாம்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் சீரான அளவில் பொட்டாசியம் உள்ளடங்கி இருக்கும். அவற்றை உட்கொள்ளலாம்.

    உலர் பழங்கள்: சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை தவித்துவிடுவதும் நல்லது. ஏனெனில் இந்த பழங்களை உலர வைக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவற்றினுள் சர்க்கரை, பொட்டாசியம் போன்ற தாதுக்கள்தான் அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளி கள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை வேகமாக ஜீரணிக்கப்படுவது அவர் களின் உடல்நிலையை பாதிக்கலாம்.

    பழச்சாறுகள்: நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறு பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்கின்றன. எனவே வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது. எனினும் அடிக்கடி பருகக்கூடாது. எப்போதாவது ருசிக்கலாம்.

    பச்சை இலை காய்கறிகள்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பச்சை இலை காய்கறிகளில் பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை முக்கியமானவை. அவற்றுள் பொட்டாசியத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், அது பிரச்சினையை ஏற்படுத்தும்.மேலும் இந்த காய்கறிகளில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். எனவே இந்த பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    ×