search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"

    • மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.
    • அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும்.

    ஆடி அமாவாசையை இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். நம்மில் பலருடைய முன்னோர்கள் (இறந்துபோன நமது தாத்தா, பாட்டி= சிலருக்கு அம்மா, அப்பா) இந்த நாளில் நம்முடைய கடமையைச் செய்கிறோமா? என்பதை விண்ணில் இருந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். கலியுகமான நாம் வாழும் யுகத்தில் மட்டுமே அவர்கள் அவ்வாறு கவனிப்பதை நம்மால் நேரடியாகப்பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.

    நமது அம்மாவின் அப்பா, அம்மா மற்றும் அப்பாவின் அம்மா, அப்பாக்களின் அல்லது தாத்தாக்கள், பாட்டிகளின் நினைவு நாட்களை திதியின் அடிப்படையில் நினைவிற்கொண்டு, அந்த தமிழ் மாதத்தில் அந்த திதி வளர்பிறைதிதியா? அல்லது தேய்பிறைத் திதியா? என்பதை ஆஸ்தான ஜோதிடர் மூலம் அறிந்து பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அன்னதானம் செய்ய வேண்டும்.

    இது நான்கு யுகங்களாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. காலப்போக்கில், நமது முன்னோர்கள் இறந்த நாட்களை மறந்து விடுவதால் மொத்தமாக முன்னோர்களுக்கு அன்னதானம் செய்ய மூன்று முக்கிய நாட்களை நமது முன்னோர்கள் சிவபெருமானின் ஆசியோடு தேர்ந்தெடுத்துள்ளனர். அவைகள்:- ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவசை.

    ஒவ்வொரு ஆடி அமாவாசையன்றும் வடபாரதத்தில் காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் நதிக்கரையோர சிவாலயங்கள் முழுவதும் அதிகாலையில் நீராடி அன்னதானம் செய்வது வழக்கம். தென்பாரதத்தில் ராமேஸ்வரம், காவிரிக்கரையோரம், சதுரகிரி, அண்ணாமலை மற்றும் ஏராளமான சிவாலயங்களில் கடலில் அல்லது நதியில் அல்லது வீட்டில் நீராடி சிவனை வழிபட்டு அன்னதானம் செய்வது வழக்கம் ஆகும்.

    ஆன்மீகக்கடல் வாசக, வாசகிகளான நாம் செய்ய வேண்டியது என்ன?

    வீட்டில் அல்லது பழைமையான சிவாலயத்தில் இருக்கும் கடல் அல்லது நதி அல்லது சுனையில் நீராட வேண்டும். சிவாலயம் அல்லது நமது வீட்டில் தனியறையில் பின்வரும் மந்திரத்தை குறைந்தது 1 மணி நேரம் அதிகபட்சமாக 12 மணி நேரம் ஜபிக்க வேண்டும். (ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடம் இடைவெளிவிட்டுக் கொள்வது நல்லது).

    சிவாலயம் எனில், அங்கே இருக்கும் கால பைரவர் அல்லது சொர்ண பைரவர் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். பின்வரும் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும். முதலில் ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் (உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று குறைந்தது ஒரு மணிநேரம் வரையிலும், அதிகபட்சம் 5 அல்லது 12 மணி நேரம் வரையிலும் ஜபிக்கவும்.

    ஒரு மணி நேரம் வரை ஜபித்ததும், அருகில் இருக்கும் உணவகத்துக்குச் சென்று குறைந்தது 3 அதிகபட்சம் 27 காலை உணவுப்பொட்டலங்களை வாங்கி கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யவும். காலை அன்னதானத்தை காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்யவும்.

    இந்த அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும். மீதி நேரங்களில் கால பைரவர் அல்லது ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அமர்ந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்துக்கொண்டே இருக்கவும். ஜபித்து முடித்ததும் ஒரு இளநீர் அருந்தவும். இந்த வழிமுறையை தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    வீடு எனில், வீட்டில் தெற்குபக்கச் சுவரில் மஞ்சளில் ஒரு சூலாயுதம் வரையவும். அந்த சூலாயுதத்தின் மீது குங்குமத்தால் மீண்டும் ஒரு சூலாயுதம் வரையவும். இது பைரவரின் சின்னம் ஆகும். மேலே கூறியது போல மந்திரங்களை அந்த சூலாயுதத்தைப் பார்த்தவாறு ஜபிக்கவும். அருகில் இருக்கும் அனாதை இல்லம் அல்லது சிவாலயம் அல்லது ஆதரவின்றி வாழ்ந்து வரும் முதியவர்கள் இவர்களில் யாருக்காவது அன்னதானம் (வீட்டில் சமைத்தது) செய்ய வேண்டும். இந்த முறையை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    இந்த நாள் முழுக்க யாரையும் திட்டக் கூடாது; காம ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது; பொறாமைப்படக்கூடாது.

    • அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
    • அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு...

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன்

    வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்?

    அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

    மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

    இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

    இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை

    வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

    சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில்

    அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    உலக உயிர்களெல்லாம் இறைவனின் பிரதிநிதிகளான தேவர்களால் பாதுகாக்கப் படுகின்றனர். தேவர்களுக்கு ஆறுமாதம் இரவுக்காலம். ஆறுமாதம் பகல்காலம். பகல்காலம் என்பது தை முதல் ஆனி வரையிலும், இரவுக்காலம் என்பது ஆடி முதல் மார்கழி வரையிலும் இருக்கும். இந்த இரவுக்காலத்தில் தேவர்கள் உறங்கும் வேளையில் மக்களைக் காக்க ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியே நம்

    முன்னோர்கள்.

    எனவே தான் தேவர்கள் உறங்கும் வேளையில் இறந்த நம் முன்னோர்கள் விழித்திருந்து நம்மை காக்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அந்த அடிப்படையில், ஆடி மாதம் வரும் பூரண அமாவாசையில் அவர்களை வரவேற்க நாம் தயாராகிறோம். மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும்

    உண்டு. எனவே இறந்து போன நம்மைச் சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும். முடிந்தால் காசிக்கு சென்று வருவது மிக மிக சிறப்பானது.

    ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது. அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார். அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது.

    விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார். அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு. நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி,

    தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.

    கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை

    சேர்க்க வேண்டும். 

    • விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது.
    • பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா?

    கீழ்கண்ட கதையை படியுங்கள்

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை

    பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.

    அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். வாசலில் சத்தம். "ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்கஞ் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி." உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.

    இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.

    பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ "இல்லை போய்வா" என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.

    யோவ் அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே, போ முதல்ல இங்கேயிருந்து, தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை"

    "ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு"

    அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.

    அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா...?

    பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது. தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.

    பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டு போய்விட்டான். அவன் சற்று பின்வாங்க, இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.

    பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல... இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.

    ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.

    எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.

    இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம் "வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்" என்று கூற.

    "என்ன சொல்கிறாய் சித்திரகுப்தா. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?"

    "ஆம் பிரபோ!" என்கிறான் சித்திர குப்தன்.

    "இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்"

    மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் "இல்லை. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை" என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.

    இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.

    "இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்" என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

    (நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)

    "தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?" என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.

    "இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்ஞ் இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?"

    அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.

    ஆனால் வாயுதேவன் மட்டும் "நீதிதேவா. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான்தான்!" என்றான்.

    அதை கேட்ட எமன், "நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்" என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.

    அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.

    இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)

    பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது.

    எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.

    • இந்த 15 நாட்கள் மட்டுமே பித்ருக்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும்.
    • சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம்.

    தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனில் இருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலம், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலம், ரிஷிகடனில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மகாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மகாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    • இன்று ஆடி அமாவாசை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, ஆறுகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். தர்ப்பணம்

    கடலூர்:

    இறந்த மூதாதையர் களுக்கு தர்ப்பணம் செய்வ–தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய –அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டுமொத்த–மாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும்‌. தர்ப்ப–ணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

    இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்ப–ணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை–யையொட்டி கடலூர் தேவ–னாம்பட்டினம், கிள்ளை கடற்கரையிலும், தென்பெண்ணை ஆறு, மணி–முத்தாறு உள்ளிட்ட ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளில் ஏராள–மான பொதுமக்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்த–னர். இந்த நிலையில் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட–னர். 

    • ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் 1,140 பேர் பயணம் செய்தனர்.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு இன்று (28-ந்தேதி) முன்பதிவு இல்லாத சிறப்பு ெரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட இந்த ெரயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்ற டைந்தது.

    இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்றது.

    மதுரை-ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் மொத்தம் 1,140 பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.72 ஆயிரத்து 700 கட்டணம் வசூலானது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ஆடி அமாவாசை தினமான இன்று வைகை ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனார்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    மதுரை

    தமிழ் மாதத்தின்படி இன்று ஆடி அமாவாசை தினமாகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் தினம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகுந்த புண்ணியம் தரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    பொதுவாக அமாவா சைக்குப் பின் பெளர்ணமி வரை வளர்பிறை சுக்ல பட்சம். அப்போது சுப காரியங்களையும் செய்யலாம்.

    ஆடி அமாவா சையை முன்னிட்டு இன்று வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டனர். அங்கு அவர்கள் புரோகிதர்கள் முன்னிலையில் எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மதுரை மாநகரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரகாளி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில்களுக்கு முன்பு நின்ற பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து வீடுகளில் சாமி படங்களுக்கு முன்பாக புத்தாடைகள் வைத்து அறுசுவை படையல் இட்டு, இறைவழிபாடு நடத்தப்பட்டது. அதன் பிறகு காகங்களுக்கு உணவுகள் படைத்து பொதுமக்கள் குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாநகர்- மாவட்டத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
    • இதைத்தொடர்ந்து அங்குள்ள ஏடகநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று என்பதால் திருப்புவனம், திருவேடகம் போன்ற சிவஸ்தலங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்கொடுத்தனர்.

    சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் வைகை ஆற்றில் நீராடி வைகை கரையில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து அங்குள்ள ஏடகநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

    • மூலவர் வீரராகவரை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சீபுரம், மற்றும் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவர்கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் கோவில் குளக்கரை அருகேயும், காக்களூர் பாதாளவிநாயகர் கோவில் அருகேயும் புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் நிரம்பி வழிந்ததால் மூலவர் வீரராகவரை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ரூ.250 கட்டணத்தில் சிறப்பு தரிசனமும் அனுமதிக்கப்பட்டது.

    கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது.
    • தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது.

    இந்த அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி. பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் இங்குள்ள பூதநாராயணன் கோயிலில் நவதானியம் வைத்தும் வேலப்பர் கோயில் கைலாயநாதர் கோயில் சிவன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இது போன்ற தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நோய் தொற்று குறைந்ததன் காரணமாக தற்போது சுருளி அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே சுருளி அருவி பகுதிக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.

    தற்போது தேனி மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் நீர் வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்த அருவியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடிவிட்டு சுருளி அருவி ஆற்றங்கரை ஓரம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    பின்னர் இங்கு உள்ள கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அருவிக்கு வந்து செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    • தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது.
    • பக்தர்களுக்கு சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது. ஆனால் ஆடிஅமாவாசை தினத்தன்று தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கியுள்ளனர்.

    உப்புத்துறை பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ.தூரம் கரடு முரடான மலைப்பாதையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். இந்த வனப்பகுதி புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    இந்த மலைப்பகுதியில் 3 இடங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பக்தர்கள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, பத்தி, சூடம், நெய்விளக்கு போன்றவற்றை பறிமுதல் செய்துவிட்டு நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்தால் போதும் என்ற மனநிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழியாக செல்லும் பக்தர்களின் நலனுக்காக சில சமூக ஆர்வலர்கள் 4 நாட்களுக்கு தொடர்ந்து அன்னதானமும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    ×