search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர்"

    • மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
    • திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுக்கட்சியினர் 10,000பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிமன்ற 4வது கவுன்சிலர் மைதிலி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, சாமளாபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

    • கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பண்ணைக்கி ணற்றை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 15 துறைகள் கால்நடை உடற்கூறியல்,உடற்செயலியல்,கால்நடை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மருத்துவ பண்ணை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்கும் விடுதி, உணவகம் ஆகிய வசதிகள் மற்றும் கால்நடைகள். கோழிவளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அ குமரவேல், பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் பா.குமரவேல் பேராசிரியர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்,உதவி செயற்பொறியாளர்கள் முத்துப்பாண்டியன்,முருகன்,பொறியாளர்கள் ரஜினிகாந்த்,கண்ணன்,ஆர். கே ஆர் .கல்வி நிறுவனத் தலைவர் ஆர். கே. ராமசாமி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை தியாகராஜன்,கால்நடை உற்பத்தி மேலாண்மை துறை மருத்துவக் கல்லூரி,ஆராய்ச்சி நிலையம்,பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை அலுவலர் சங்கத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் இன்று நாகர்கோவில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாம் நெல்சன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணபிள்ளை மாணிக்க ராவ், செல்வின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் கிருஷ்ண ரேகா போலீஸ் துறை சார்பாக வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றதை பாராட்டி அவருக்கு சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒய்வுபெற்ற போலீசார் பல ஆட்சியை, அரசை, பல அதிகாரிகளை பார்த்தி ருப்பீர்கள். நீங்கள் பல அனுபவங்களை பெற்றி ருப்பீர்கள். 1981-ம் ஆண்டு தான் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே ஓய்வு பெற்றவர்களுக்கு என சங்கம் உருவாக்கப்பட்டது.தி.மு.க. ஆட்சியில் தான் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    ஊதிய முரண்பாடுகளை கலைந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்தி ருக்க முடியாது. பெண் போலீசாரை பணியில் அமர்த்தியதும் அவர் தான்.போலீசாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார்.

    தற்பொழுது முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறை ஊழி யர்களின் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக செயல் பட்டு வருகிறார். கேட்ட திட்டங்களை மட்டும் இன்றி கேட்காமல் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருவது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க ஆணை பிறப்பித்தவர் அவர் தான் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் தமிழகத்தில் டி.ஜி.பி. யாக இருப்பது மாவட்டத்திற்கு பெருமை ஆகும்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, போலீசார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் உழைத்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீசாரின் கோரிக்கைகள் முதல மைச்சரின் கவன த்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மற்றும் செயலாளருமான ராஜாசிங் ஆண்டறிக்கை வாசித்தார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேரா சிரியர் ஸ்ரீ லதா மருத்துவ விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் கிறிஸ் டோபர், மாவட்ட செயலா ளர் ஐவின், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதை விரைந்து செயல்படு த்திட தமிழக அரசும், காவல் துறையும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் உள்ள தேர்வுகளில் போலீசா ரின் வாரிசுகளுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

    காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

    • காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    லக்னோ:

    காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

    காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செஞ்சியை சேர்ந்தவர்களுக்கு மனு கொடுத்த சிலமணி நேரத்தில் பட்டியல் இன சான்றினை முதலமைச்சர் வழங்கினார்.
    • தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.

    விழுப்புரம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார். அவர் செல்லும் வழியில், செஞ்சியை சேர்ந்த முருகன் மகன்வாசன், மகள் பூஜா ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாம ல்இருக்கிறது, எனவே, தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர். அம்மனுவினை பரிசீலித்த முதல்-அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் முதல்-அமைச்சர் செஞ்சியில் மாணவன் வாசன். மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் மாணவரின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    ×