search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்வீர் சிங்"

    • ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன்  திரைப்படம் 'கல்நாயக்' .  முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் .

    இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் 'சோலி கே பீச்சாய் க்யா ஹை' என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 'கல்நாயக் 2' படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.


    இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்
    • "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம்

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங்.
    • இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங் தம்பதியிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.


    ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

    இதையடுத்து இருவரும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அதில், இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால் தீபிகா, ரன்வீரின் கையை பிடிக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் முகத்தையும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.


    ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

    இதனால் கோபமான ரன்வீர் சிங் முன்னால் வேகமாக நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினையா..? இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்களா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
    • இவர் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரலாற்று நாவல்களை தேடிப்பிடித்து படிக்க தொடங்கி உள்ளனர்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    இந்நிலையில் வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
    • இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விரைவில் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.


    ஆலியாபட்

    தற்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


    ரன்வீர் சிங் கமெண்ட்

    அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரன்வீர் சிங், ''உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கமெண்ட்டுக்கு ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.


    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
    • காரின் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

    பிரபல இந்தி நடிகரான ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர். இதற்கிடையே ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகியும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இந்நிலையில் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டியதாக ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனது ஆடம்பர ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு காரை ஓட்டி வருகிறார். காரின் விலை ரூ.3 கோடியே 90 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    அதற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீசார் ''இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளனர். புகார் கூறியவரை ரன்வீர் சிங் ரசிகர்கள் வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

    • ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • தற்போது தான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


    ரன்வீர் சிங்

    இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில் தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


    ரன்வீர் சிங்

    அதில், நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • இந்த நிர்வாண புகைப்பட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டும் என இந்தி நடிகர் ரன்வீர் சிங் போலீசாரிடம் கேட்டுள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக செம்பூர் போலீசார் கடந்த 12-ந் தேதி ரன்வீர் சிங் வீட்டுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீசில் 22-ந் தேதி (இன்று) நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    இந்தநிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் சிங் கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

    • பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர் மீது புகார்.
    • ரன்வீர் மும்பை திரும்பியவுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன்.

    பாலிவுட் பட உலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில், ரன்வீர் சிங் பேப்பர் பததிரிக்கைக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.

    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 509, 292 மற்றும் 294 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

    தற்போது ரன்வீர்சிங் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அதனால் அவருக்கு இன்னுன் சம்மன் அனுப்பப்பட வில்லை. அவர் மும்பை திரும்பியவுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.


    ரன்வீர் சிங்

    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் நடத்தியது. மேலும், இவரது நிர்வாணப் புகைப்படத்திற்கு பலர் ஆதரவும்  தெரிவித்தனர்.


    இந்நிலையில், ரன்வீர் சிங்கிடம் பிரபல நிறுவனம் மீண்டும் நிர்வாணமாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, பீட்டா அமைப்பு தங்கள் பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.


    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது. அங்குள்ள சாலை ஓரத்தில் மேசை மீது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்தை ஒட்டிய பெட்டி வைத்துள்ளனர். அந்த பெட்டிக்குள் பலர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் நன்கொடை வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணிமணிகளை கொண்டு வந்து போடுகிறார்கள். ஆடை நன்கொடை வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    ×