search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண நிதி"

    • நிவாரணம் தொடர்பாக நிதி மந்திரியிடம் 72 பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
    • வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியுள்ளார்.

    இந்த மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் பாலங்கள், சாலைகள், பள்ளிகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எதிர்பார்த்ததை விட பெரிய பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது. எனவே இந்த நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசிடம் குறைந்த அளவே மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு விரைவாக நிவாரணம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

    சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
    • மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.

    அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.


    தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.

    மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
    • 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய் அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

    அதன்படி, இன்று நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 வருடத்திற்கு பிறகு இதுபோன்ற மழை பெய்துள்ளது. மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை குறித்த கேள்விக்கு, முதலில் பேரிடர் இல்லை என்றார். இப்போ பாதிப்பை பார்க்க வருகிறார்கள். பாதிப்பை பார்த்த பிறகு தகுந்த நிதி தருவார்கள் என நம்புகிறோம் என்றார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிச்சாங் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
    • ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.

    * உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது.

    * வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

    * காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

    * மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.

    * நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது.

    * மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.

    * ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார்.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார்.

    தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
    • தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகார பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா்.

    அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
    • ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வீசிய மிச்சாங் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


    அதன்படி அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதில் இதுவரை 21 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் உள்ள பட்டியலில் பெயர் இல்லாத வசதி படைத்தவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், ஏ கிரேடு, பி கிரேடு அதிகாரிகளின் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். அதில் பாதிப்பு விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனுக்களை ஆய்வு செய்து அவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.6 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் இப்போது எழுதி கொடுத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.1,500 கோடியை அரசு ஒதுக்கி உள்ள நிலையில் இதுவரை ரூ.1260 கோடி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பணம் கிடைக்காதவர்களுக்கு சனிக்கிழமைக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    23-ந்தேதி வரை ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்று வந்துகூட பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக ரேஷன் கடைகளுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எந்த தேதி டோக்கனாக இருந்தாலும் பணம் வழங்கி விடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    • 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
    • விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்கள் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்குள், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று கோவையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

    கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடனும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

    அப்போது, மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை திரும்பியதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பயணத் திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

    ×