search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அந்த பகுதியில் உள்ள வளாகத்தில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும், தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான பூச்சிமுருகன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள வளாகத்தில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டார். இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ்சசிகுமார்,பொதுக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பசும்பொன் தனிக்கோடி, மதுரை சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேரு சிலைக்கு காங்கிரசார் மரியாதை செய்தனர்.
    • தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளைம்

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை கெலுத்தினர். இதில் நாகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர், சங்கர் கணேஷ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் ஸ்ரீமான்ராமச்சந்திர ராஜா, நகர துணை தலைவர் சிவசுப்பிரமணியன், சேவாதளம் பச்சையாத்தான், ரவி, தயானந்தராஜா, வெங்கடேஷ், முருகேசன், சேத்தூர் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர துணைத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் குமாரசாமி ராஜா மாலை அணிவித்தார்.இதில் மாநில காங்கிரஸ் மனித உரிமை பிரிவு செயலாளர் ராம அழகு, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

    எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்திரை முழுநிலவு நாளையொட்டி கண்ணகி சிலைக்கு மரியாதை
    • தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    சித்திரை முழுநிலவு நாளையொட்டி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரே திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் தமிழ் வழிகல்வி இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சொல்லாய்வு அறிஞர் மா.சொ.விக்டர் தலைமையில், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அமைப்புச் செயலர் நல்லப்பன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் சௌந்தராஜன், தமிழ்வழி கல்வி இயக்க புலவர் அரங்கநாடன், தமிழ்க் களம் இளவரசன், புகழேந்தி, பாரிவள்ளல், செல்லபாண்டியன், சகானா காமராஜ், சோபனா பன்னீர்செல்வம், வழக்குரைஞர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சங்க புலவர்கள் தூணுக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • தமிழ் கவிஞர்கள் நாளை முன்னிட்டு நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சங்கப் புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் திருக்குறள் பேரவையின் சார்பாக தமிழ் அறிஞர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வெண்பா புனைதல் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் வட்டாட்சியர் (பொ) ரவிகுமார், மேலை பழநியப்பன், தங்கராஜ் , தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத செலுத்தினார்கள்.

    மதுரை

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி மதுரை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத் தலைவருமான எஸ்.கே. மோகன் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.

    இதில் மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைத்தலைவர் பி.செந்தில்குமார், துணை செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், பாரத பெருந் தலைவர் காமராஜ் அறநிலையத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.சோம சுந்தரம், பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசமணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத ெசலுத்தினார்கள்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத ெசலுத்தினார்கள்.

    மதுரை

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை யொட்டி மதுரை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்த்புரம் முருகன், தல்லாகுளம் முருகன், ராஜபிரதாபன், பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு, பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் மலர் பாண்டியன், பறக்கும் படை ப ாலு, பொதுச்செயலாளர் எம்.ஏ.காம ராஜ், வக்கீல் வெங்கட்ராமன், வார்டு தலைவர் பில்லப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள்.

    • சீர்காழியில் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி வரவேற்றார்.

    மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.பாரதி கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் பக்கிரி சாமி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன், நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கார் உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    திருவாரூர்:

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளைமுன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழியி னையும் எடுத்துக் கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும் உளமாற உறுதி ஏற்று கொள்வோம். இவ்வாறு கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,

    தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலை வகித்தார்.கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட பசுமை தாயகம் தலைவர் திருஞானம், கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலா,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் செரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி-தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சட்ட மேதை அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே அவுட் போஸ்டில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், மண்டலத் தலைவர் வாசுகி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கவுன்சிலர் நந்தினி, திருப்பாலை ராம மூர்த்தி, வாடிப்பட்டி கார்த்திக், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட நிர்வாகி கள், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வேலுச்சாமி குழந்தைவேலு, அக்ரி.கணேசன், சின்னம்மா, ஒச்சுபாலு, மூவேந்திரன், சுதன், ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×