search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    தீயணைப்பு துறையில் பணியின் போது எதிர்பாராத விதமாக இறந்து வீரமரணமடையும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மரியாதை செலுத்தப்பட்டு வருவதோடு ஒரு வாரகாலத்திற்கு தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கமாகும்.

    இந்நிலையில் இன்று ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கி உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதில் நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல பவானி, சென்னிமலை, மொட க்குறிச்சி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலும் மரியாதை செலுத்தப்பட்டது. 

    • கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வீர தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
    • ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் ஆங்கி லேயரின் ஏகாதி பத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதில் 17பேர் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தனர்.

    அந்த வீரதியாகிகளின் 103-வது நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், நத்தம், விசுவ நாதன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத் தில் ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 17பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த நிகழ்வு தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்பட்டு வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3-ந் தேதி, வீர தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அ.தி.மு.க.சார்பில் அந்த தியாகி களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப் பட்டது. ஏற்கனவே அம்மாவின் ஆட்சி காலத்தில் இங்கு நினைவு தூண் அமைக்கப்பட்டது.

    2019-ம் ஆண்டு, 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, இதற்காக ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நினைவு தினத்தை அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அப்போது தமிழக அரசின் சார்பில் இந்த நினைவு நாளை அரசின் சார்பில், அரசு விழாவாக நடத்துவதற்கு உரிய அரசாணையை பிறப்பிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    மதுரை

    தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆனையூரில் உள்ள மன்னர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

    இந்த விழாவில் தமிழர் தேசம் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துனை செயலாளர் ஆதிமுருகன், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, ஒன்றிய செயலாளர் பொய்கை தங்கம், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி சங்கிலி, நத்தம் ஒன்றியம் பூமி, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
    • திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வந்தார்.

    அவரை கோவில் செயல் அலுவலர் அறிவழகன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கோவிலுக்குள் சென்ற குரு மகா சன்னிதானம் மணவாளர், உள்பட பஞ்ச மூர்த்திகளையும், திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரனின் திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர், ஊர் பிரமுகர்களான மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், பிராமண சங்க தலைவர் ராமசாமி, கத்தரிப்புலம் தொழில் உரிமையாளர் சொக்கலிங்கம், தேவி பாலு உள்ளிட்ட பிரமுகர்–களுக்கும், பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்கினார்.

    • மலேசிய தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
    • கடந்த 2004-ம் ஆண்டு முதல் கலாச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

    சீர்காழி:

    மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.

    அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.

    அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.

    மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

    ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம்.

    இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.

    அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது சீர்காழி தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவி.நடராஜன, சுப்பு. சொர்ணபால் உடனிருந்தனர்.

    • சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
    • திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை.

    வேதாரண்யம்:

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில்உப்பு சத்தியா கிரக போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வடக்கில் தண்டியிலும், தெற்கில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.

    சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரக போ ராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அகஸ்தியன் பள்ளியில் நினைவு ஸ்தூபியும், ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடமும் இன்றும் நினைவிடமாகவும் மேலும் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகநினைவு கட்டிடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவரின் அளப்பரிய பங்கை பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.

    இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த 1998-ம் ஆண்டு இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது

    சுதந்திர போராட்டத்திற்காக அயராது பாடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு வேதாரண்யத்தில் அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை அரசே நடத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிவகாசியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    சிவகாசி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி சிவகாசி சிவன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்குமாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான ராஜேந்தி ரபாலாஜி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவகாசி சிவன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் சாமி என்ற ராஜா அபினேஷ்வரன், முன்னாள் நகர செயலாளர் அசன்ப தூரூதீன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செ யலாளர் வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் ரிசர்வ்லை யன் தேவர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    • காரைக்குடியில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் கலந்துகொண்ட கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் பேசும்ேபாது, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றியோ, பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றியோ சிவில் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தீர்ப்பு வழஙகியுள்ளது. இவ்வளவு நாள் மலர்பாதையில் நடந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் இனி சிங்கப்பாதையில் செல்வார் என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி துணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாலர் மாத்தூர் பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், அம்மா பேரவை ரவி, நகர துணை செயலாளர் கணேசன், நகர பொருளாளர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு சகுபர் ஜாவித், சேக், மாவட்ட ஐ.டி. விங்க் இணை செயலாளர் கார்த்தீஸ்வரன், மகளிரணி காளீஸ்வரி, ரேவதி, ராமாமிர்தம், மாலதி, பத்மா, தேவி உமையாள், இளைஞரணி பாலமுருகன், பாசறை கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பின்னர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள், எஸ்.எம்.பி, மாநகர இணைசெயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், முன்னாள் தலைவர் தங்கராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், முன்னாள், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி செயலாளர்கள் உத்தமேஸ்வரன், ராக்கியன்னன், செல்வராஜ், குமாரசாமி, தங்கராஜ், முருகேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி தஞ்சை மேம்பாலம் அரசினர் காது கேளாதோர் பள்ளியில் அ.ம.மு.க சார்பில் துணை பொது செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, கல்லுக்குளம் ஓசோனம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்ட அவை தலைவர் விருதாச்சலம், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி முரளி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு (எ) வேலாயுதம், செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், வக்கீல் செந்தில், பூக்கடை பகுதி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க.வினர் செய்திருந்தினர்.

    • காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

     காரைக்குடி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    ×