search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் தற்கொலை"

    • சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.
    • அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    பவானி:

    பவானி கோனவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி மகன் தாமோதரன் இடம் கூறிவந்துள்ளார்.

    தாமோதரன் தந்தைக்கு ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 4 மணிக்கு சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.

    இதையடுத்து அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
    • கேமிராவில் பதிவான கண்காணிப்பு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பகுதியான கிரிம்ஸ்க் நகரில் நேற்று 66 வயது முதியவர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டார்.

    அவர் ரோட்டோரம் நடந்து கொண்டே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார். அவரது இந்த வெறிச்செயலை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

    முதியவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 61 வயது முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 பேரை சுட்டுக்கொன்ற பிறகு கொலையாளியும் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர் யார்? என்று தெரியவில்லை. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் முதியவர் நடந்து கொண்டே துப்பாக்கியால் சுடுவதும் சிலரை பக்கத்தில் இருந்து சுட்டுக்கொன்ற காட்சிகளும் உள்ளன. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரிய புலியூர், செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (80). இவர் தனது மகன் கிரண்குமார் என்பவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோழிகளை கவனித்துக் கொள்ள வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சாலையில் பெருமாளை விட்டு விட்டு கிரண்குமார் சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை தந்தை அழைத்து செல்ல அங்கு வந்தபோது தந்தையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்க வில்லை. இந்நிலையில் காஞ்சிகோவில் அடுத்துள்ள முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் மனமுடைந்து வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). இவருக்கு கடந்த சில வருடங்களாக பிரசர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று மயங்கினார்.

    கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர் வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். கடந்த 2 வருடமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமுகம் சரிவர வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ஆறுமுகம் மகன் கார்த்திகேயன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

    இந்நிலையில் கணபதிபாளையம்-மன்னதம்பாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று முதியவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் தனது தந்தை என உறுதி செய்தார்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமு கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தனபால்.
    • இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முதியவர் தனபால் (வயது 85). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனபால் வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார்.
    • முதியவர் தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    சேலையூர்:

    சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோகரன்(வயது64). உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார். மேலும் அவர், தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள ஜன்னலில் மனோகரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • முதியவர் தற்கொலை குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடம்பத்துார் ஒன்றி யம் தொடுகாடு ஊராட்சியில் உள்ள பஞ்சமி தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் ஏலம் எடுத்து மீன்பிடித்து வந்தார்.

    இந்தநிலையில் கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிரமணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள கொளத்தான்வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியம் (70). இவர் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    அப்போது பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிர மணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணை ப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தலை துண்டான பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை ஆவாரம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை இவரது மகன் அசோகன் (வயது 53) இவருக்கு திருமணமாகி ஆதிலட்சுமி என்கிற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்தில் அவ்வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலை துண்டாகி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி வடக்குதெருவை சேர்நத ஜக்கன்(73).

    வயது மூப்பு காரணமாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜக்கன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்.
    • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்

    இந்த நிலையில் ராமசாமி மது குடித்து விட்டு களை கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி ஜெகதீஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இற ந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×