search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 244157"

    • நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.
    • இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கோளரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, சேலம் உள்ளிட்ட மேலும் 6 இடங்களில் புதிய நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தஞ்சை மாநகரமும் ஒன்று. இதில் சேலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு கோளரங்கம் திறக்கப்ப ட்டு விட்டன. திருநெல்வே லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் தருவாயில் உள்ளது.

    தஞ்சை ,திருச்சி, தூத்து க்குடி ஆகிய இடங்களில் பணிகள் நடந்து வருகிறது.

    தஞ்சையில் அருளா னந்தா நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ள இடத்தில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நவீன கோளரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 71 லட்சம் செலவில் இது அமைக்கப்படுகிறது.

    இதில் முதல் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் ,ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. 2-வது பகுதியில் காட்சி கூடம், உள்ளரங்க அறிவியல் சாதனை மையம், கேண்டின் ஆகியவைகளை கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில் இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. அறிவியல் சார்ந்த காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறுகின்றன. 3-வதாக உள்ள பகுதியில் வெளியரங்க அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. இதில் தற்போது 30 அடி உயரம் மற்றும் 20 அடி உயரத்தில் இரண்டு ராக்கெட்டுகள் நிறுவப்பட உள்ளன. மேலும் அரிய வகை விலங்குகள் மற்றும் அதன் தன்மைகள் ,உணவு வகைகள் அதன் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம் பெறும் வகையில் தகவல் பலகைகளும் இடம் பெறுகின்றன.

    இதில் யானை, டைனோசர் ,ஆமை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்குகள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு வசதிகளும் செய்யப்படுகின்றன. சிறுவர்- சிறுமிகளுக்கான விளையாட்டு சாதன ங்களும் உள்ளது.

    மேலும் பல இடங்களில் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் தஞ்சையில் அமைவதால் அது தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

    • அந்த குடும்பத்தில் உள்ள சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான்.
    • இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டியதால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராஜப்பா பூங்கா அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர்.

    இந்த பூங்காவில் ஒப்பந்த ஊழியராக தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்த கந்தசாமி (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தஞ்சை மாவட்ட ஊர்க் காவல்படையிலும் பணிபுரிகிறார். இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை ரோடு மின்வாரிய காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பூங்காவுக்கு வந்திருந்தனர்.

    அப்போது அந்த குடும்பத்தில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி அந்த சிறுவனை தாக்கி உள்ளார். இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டினார்.

    இதனால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ‌ இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.

    • அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.
    • பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.

    சேலம்:

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து மேட்டூருக்கு ஏராளமானோர் வந்தனர்.

    அங்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை பூங்காைவ நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 197 பேரும், பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.  

    • பூமி பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா்,உறுப்பினா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் எஸ்எம்.ரஹீம், முருகையா, பேபிரெசவுபாத்திமா, இசக்கித்துரைபாண்டியன், சுப்பிரமணியன், ஜெக நாதன், முத்துப்பாண்டி, இசக்கியம்மாள், சுடர் ஒளி, வேம்புராஜ், பொன்னு லிங்கம் (சுதன்), ராம்குமார், செண்பகராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகர செயலாளா் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சக்திவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் செந்தில் ஆறுமுகம், ராஜா கோபாலன், திலகர், ஞானராஜ், தி.மு.க. நகர துணைச்செயலாளா் குட்டி ராஜா, அவைத்தலைவா் மணிகண்டன், நகர இலக்கிய அணி மாடசாமி, வார்டு செயலாளா் கோபால்யாதவ், இசக்கி முத்து, வனத்துறை விக்னேஷ், சூர்யா, ஹரிஹர லெட்சுமணன், ஒப்பந்தகாரர் ஸ்ரீசபரி சாஸ்தா இன்ப்ரா பிரைவேட் லிமிடேட் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம்.
    • 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.

    கோவை,

    கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள் பிரிக்கப்படும் போது, அதில் 10 சதவீதம் பரப்பளவிலான இடத்தை பொது ஓதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) ஒதுக்க வேண்டும்.

    இந்த பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம். சில இடங்களில் சமூக நலக்கூடம், ரேஷன் கடை போன்ற கட்டிடங்களும் கட்டப்படுகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.

    இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில், சாலைகள் விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளின் போது சாலையோர மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் மாநகரில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து பசுமை சூழல் பாதிக்கப்படுகிறது. பசுமைச்சூழலை மேம்படுத்துவதில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

    மாநகரில் பல ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பாலும் முறை யாக பராமரிக்காததாலும் வீணாகி வருகின்றன. சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை பொது ஒதுக்கீட்டு இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளை மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியதாவது:-

    மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், பசுமை பகுதிகளை அதிகரிக்கும் பொருட்டு, மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரை 0422-2390261 என்ற எண்ணிலும், mlyvavaki.corpcbe@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

    சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை யும் மறு நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • பூங்காவுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
    • சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவற்றை கேட்டு அறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு மணிமண்டப பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் அனைத்து வித மான விளையாட்டுபொரு ட்களும் உள்ளன. இதனால் மணிமண்டபம் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் பூங்கா வுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களால் இந்த வாகன நிறுத்தம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவ ற்றை கேட்டு அறிந்தார்.

    இந்த பார்க்கிங்கில் இருச க்கர வாகனம் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார்மணிக ண்டன், ஊரக வாழ்வா தார இயக்க திட்ட இயக்கு னர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள்சிவா, சரவணன் சீனிவாசன், சுவாமிநாதன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை தங்கசாலையில் பிரமாண்ட நடைபயிற்சி பாதை, மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பூங்கா திறக்கப்பட உள்ளது.

    வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளுடன் கூடிய பிரமாண்ட நடை பயிற்சி பாதை,மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்காக 1 கி.மீட்டர் நீளத்துக்கு நடை பயிற்சி பாதைகள்,சிறுவர்களுக்காக உடற்பயிற்சி கூடம், அடர்வனம் (மியாவாக்கி) பூங்கா, தியானமண்டபம் நுழைவு பிளாசா, மூலிகை காடுகள், பெண்கள் உடற்பயிற்சி மையம், கூழாங்கல் நடை பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பசுமை பூங்கா 1550 ச.மீ., யோகா கூடம் 1250 ச.மீ, திறந்த ஜிம்-800 ச.மீ, பார்க்கிங் 400 ச.மீட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    இந்த பூங்காவில் வேம்பு, புங்கை, மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம், செண்பகம், மகிழம், உள்பட 1000- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

    3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மேலும், சிறுவர் விளையாட்டுதிடல், தியானமண்டபம், திறந்தவெளி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கான உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகில் பொதுமக்கள் வசதிக்காக பிரமாண்ட நடைபயிற்சி பாதைகளுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. பூங்காவில் எல்இடி விளக்குகள், நவீன இருக்கைகள் அமைய உள்ளது. ஆண்கள், பெண்கள். குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதி,குடிநீர் வசதி செய்யப்படுகிறது.

    சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு திடல் ஏற்படுத்தப்படுகிறது. கூழாங்கல் 8 வடிவ நடை பயிற்சி பாதை மற்றும் தடுப்பு கம்பிகளுடன் கூடிய சுற்று சுவர்கள் அமைக்கப்படுகிறது.

    இந்த பூங்கா பணிகள் மிக வேகமாக தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த பூங்காவில் அடர்வன காடுகள் அமைக்கப்படுவதால் அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தி கிடைக்கும்.இந்த பகுதியில் இதன்மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×