என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிடிவாரண்டு"
- பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
- அரியலூர் மாவட்ட நீதிபதி உத்தரவு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததை சார்ந்தவர் பரமசிவம் (வயது 71). இவர் 14.4.2015 அன்று மதியம் வீட்டில் இருந்தபோது இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சென்று வீட்டை காலி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு பரமசிவம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, தீர்ப்பு வரட்டும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பரமசிவத்தை தாக்கியுள்ளனர். சண்டையை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் உருட்டுகட்டை மற்றும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தி யுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரனை அதிகாரியான குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா செயல்பட்டார். ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டிலிருந்து மேல் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட கோர்ட்டிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரனை முடிவடைந்தது.
இதற்கிடையே விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் கலா தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை 6.3.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
- திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவு
- 6 மாதமாக ஆஜராகவில்லை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட தேவலாபுரம் புதுமனை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பார்த்திபன் என்பவர்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக காளிதாஸ் என்பவர்கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
கொலை நடந்தபோது உம ராபாத் போலீஸ் இன்ஸ்பெக் டர்களாககோகுல்ராஜ் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அவர் களில் கோகுல்ராஜ் தற்போது ஆரணி டவுன் இன்ஸ்பெக்ட ராகவும், பாலசுப்பிரமணி வேலூரில் காத்திருப்போர் பட்டியலிலும் உள்ளனர்.
கொலை வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக் கும் பலமுறை சம்மன் அனுப்பியும் கடந்த 6 மாதமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கம்போல ஆஜராகவில்லை.
இதனால் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி, இன்ஸ் பெக்டர்கள் 2 பேருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
- ராம்பூர் தொகுதியில் 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார்.
- ஜெயப்பிரதா பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.
ரேபரேலி
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.
ஜெயப்பிரதா தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
- இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுண்டப் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 84). விவசாயி. இவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது வந்தது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பழனிசாமி வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில் அவரது பேரன் உள்பட சிலர் சொத்துக்காக பழனி சாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது 17 வயது பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது.
இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக அப்போதைய கோபிசெட்டி பாளையம் போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் இருந்து வந்தார். சோமசுந்தரம் தற்போது ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சோம சுந்தரம் கோர்ட்டில் ஆஜரா கமல் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இது குறித்து வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் நடந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகமல் இருந்தார்.
இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.
- சாட்சியம் அளிக்க வராத டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டன.
- நீதிபதி அதிரடி உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வெள்ளையம்மாள் (வயது 67). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது பெருமத்தூர் வாய்க்கால் பாலம் அருகே இவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த வெள்ளையம்மாள் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வெள்ளையம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியமளிக்க கோர்ட்டுக்கு வருமாறு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் சம்மனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பணி மருத்துவரை கோர்ட்டுக்கு சாட்சியமளிக்க அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் நீதிபதி, தனியார் மருத்துவமனையின் பணி மருத்துவருக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், வரும் 28-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்