என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பருத்தி ஏலம்"
- விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.
அம்மாபேட்டை:
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புரட்டாசி பட்ட பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திர சேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் பிடி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 490-க்கும் விற்பனையானது.
இதனை பெருந்துறை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.
மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.
- மேலாண்மை இயக்குநர் சுந்தரம் பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
- 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மா வட்டம் போச்சம்பள்ளி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.11 லட்சத்திற் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் பயிரிடபட்டு அறுவடை செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்து பயனடைந்தனர். இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொண்டு 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனால் நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.
முன்னதாக துணைபதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுந்தரம் கலந்து கொண்டு பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயபால் துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் விஜி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
- ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
- கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் முத்துக்–காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த ஏலத்திற்கு ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2,435 மூட்டைகள், டி.சி.எச் ரக பருத்தி 205 மூட்டைகள், கொட்டு பருத்தி 58 மூட்டைகள் என 2,698 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதில், ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7569-க்கும், அதிக பட்சமாக ரூ.8444-க்கும், டிசிஎச் ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7869-க்கும், அதிகபட்சமாக ரூ.8650-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5390-க்கும், அதிகப்பட்சமாக ரூ.6669-க்கும் ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். விலையும் குறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
- ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
- கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல்,மின்னக்கல், சிங்களாந்த புரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழு வதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்த ஏலத்தில் 4,618 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதன்படி, ஆர்.சி.எச். ரகப் பருத்தி 4,577 மூட்டைகளும், கொட்டு பருத்தி 111 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,676-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,699-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,335 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,000-க்கும் ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
- ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
- நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். நேற்று நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 3,572 மூட்டைகளும், கொட்டு பருத்தி 74 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,979-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,900-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,419 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,191-க்கும் ஏலம் விடப்பட்டது.
- ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
- விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவிநாசி :
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8, 666 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
- இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கலந்து கொண்டனர். நேற்று 2125 பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2107 மூட்டைகளும், கொட்டு பருத்தி 18 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6719-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8136-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3000 முதல் அதிகப்பட்சமாக ரூ.5295-க்கும் ஏலம் விடப்பட்டது.
- தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
- மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில், 950 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆர்.சி.எச் ரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், சுரபிரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், கொட்டு ரகம் ரூ.3,216 முதல் ரூ.5,895 வரையிலும் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. இதனை வியாபாரிகள் தரம் பார்த்து கொள்முதல் செய்து எடுத்து சென்றனர்.
- ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
- இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்து க்காளிப்பட்டி, மசக்கா ளிபட்டி, கவுண்டம்பா ளையம், சந்திர சேகரபுரம், அணைப்பா ளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மா பாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். இந்த ஏலத்தில் 682 பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 678 மூட்டைகளும், கொட்டு பருத்தி 4 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8159-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9469-க்கும், கொட்டு ரக பருத்தி
ஒரு குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.4900 முதல் அதிகப்பட்சமாக ரூ.5300-க்கும் ஏலம் விடப்பட்டது.
- விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது.
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,269-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550-க்கும், சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
- அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
- இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம், பச்சம்பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2-வது வாரமாக நடைபெற்று வந்த பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்ததில் நல்ல விலை போனது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.
இதனையடுத்து கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளரான சுந்தரம் உத்தரவின் பேரிலும், கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமையிலும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் மற்றும் இளநிலை உதவியாளர் விஜியன், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்