search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் ஹாசன்"

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் 'இந்தியன்'. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.

    இப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.இதில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

    இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனிடையே இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "இந்தியன் 2". அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "பாரா" வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    முன்னதாக இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷ் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "இந்தியன் 2". அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷன் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    • அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

    சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் கமல் கட்சிவெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கியவர் கமல்ஹாசன். தி.மு.க.,

    அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கமல்ஹாசன் கூறி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெற்றது.

    இதைத் தொடர்ந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் சில கட்சிகளோடு கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் கள மிறங்கியது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அங்கு அதிக வாக்குகளை வாங்கிய அவர் பா.ஜ.க. வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தேர்தலிலும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் அமைந்திருந்தது.

    இது தொடர்பாக அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கமல்ஹாசன் ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இப்படி தேர்தல் களத்தில் மிகவும் ஆவேசமாக காணப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி அரசியல் பக்கம் அவர் செல்லமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கமல்ஹாசனோ நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றார். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு கூட்டணியில் இடம் கிடைத்தது.


    ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்க வில்லை. ஒரு மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் வரும் நாட்களில் மேல் சபை எம்.பி.யாக டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சில இடங்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. கூட்டணியிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ளது. இப்படி கூட்டணி அரசியலால் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள் நீதி மய்யம் கட்சி திசை மாறி பயணிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே இந்த இரண்டு கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் மேற்கொள்ள வேண்டியகட்டாயத்தில் உள்ளன.

    ஏனென்றால் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகிற நாட்களில் இந்த கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த திட்டமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பி.யாக அவர் பதவி வகிக்கும் பட்சத்தில் நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

    இதனால் தி.மு.க. சார்பில் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. மாற்றத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன் கட்சியை வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கூட்டணி அரசியலுக்குள் முடங்கிப் போய் இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாற்றத்தை நோக்கி பயணித்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் சென்றதன் மூலம் இனி அவரது பழைய பயணம் தடைபடும் என்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி சொல்வதையே கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் எத்தனை இடங்களை கேட்டு பெறுவார் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி உள்ளது.

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
    • இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். கண்டிப்பாக விருது பெறும்"

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது. இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.

    படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.




    இந்நிலையில் இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

    அதன் பின் நடிகர் கமல் படம் பற்றி கூறியதாவது ;-

    ''தி கோட் லைப்' படம் பார்த்து மனம்குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெகுசிறப்பாக அமைந்து உள்ளது. இதில் நடித்த நடிகர்கள் மிகுந்த 'சிரமம்' எடுத்து நடித்து உள்ளனர்.




    இப்படத்தில் நடித்துள்ள நடிகர்,நடிகைகளுக்கு எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். இந்த படம் கண்டிப்பாக விருது பெறும்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கோவை:

    அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.

    அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவர்களின் வரவேற்பை கமல்ஹாசன் ஏற்றுகொண்டார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேற்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் நீலகிரி போன்ற பகுதிகளில் இருந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி நிர்வாகிகளுடன் மேற்கு மண்டலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மக்களை சந்திக்க வேண்டும்.

    மக்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன. எதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியாக சென்று மண்டல நிர்வாகிகள் மக்களிடம் கலந்துரையாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது, என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்கனவே கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்பதை கட்சியினர் ஆய்வு செய்தனர். அதன்படி தென்சென்னை, கோவை அல்லது மதுரை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று என கட்சி நிர்வாகிகள் கருதினர். அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் தீவிர பணியாற்றி கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்ததும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் கருமத்தம்பட்டி பார்க் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

    விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று. அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    • நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள்.
    • மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும்.

    சென்னை:

    புதிய பாராளுமன்றத்தில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு முதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். நமது பாராளுமன்ற இருக்கை புதிய வீட்டிற்கு மாறியுள்ளது. இந்த புதிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. இதனை நமது தேசத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரான இந்திய பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்ட கால அநீதியை சரி செய்வதற்கு வழிவகுக்கும் என மகிழ்ச்சி அடைகிறேன். இதனை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும்.

    இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும். மேல்சபை மற்றும் மாநில சட்ட கவுன்சில்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு உறுதியான நடவடிக்கையின் உதவியும் இல்லாமல் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாளை நான் எதிர் நோக்குகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
    • ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    நடிகர் கமல் திரையுலகில் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஜெயிக்க முடிந்தது. அதேபோல் அரசியலிலும் சாதித்து விடலாம் என்று போட்ட கணக்கு கிட்டத்தட்ட தப்பு கணக்காகவே மாறி போனது. இப்போது சினிமாவையும் விட முடியாமல் அரசியலையும் கைவிட முடியாமல் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

    சினிமாவை எப்படி ஓ.டி.டி. தளத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அதே போல் அரசியலையும் ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஜெயித்து பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ இப்போது அவர் எங்கிருந்தாலும் ஆன்லைன் வழியாக அரசியலையும் நடத்தி வருகிறார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னால் நேரடியாக முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடியாததால் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அருணாச்சலம் என்ற நிர்வாகியை நியமித்து உள்ளார். இப்போது கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார். அதேநேரம் நடந்தது என்ன? அடுத்த திட்டம் என்ன? என்று எல்லா விசயங்களையும் கமலுக்கு அப்டேட் செய்து விடுகிறாராம்.

    களத்தில் இறங்கி நடந்தும் ஓடியும் கூட அரசியலில் சாதிக்க முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில் ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது.
    • தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    கோவை:

    கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக மக்களோடு மய்யம் என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. மக்கள் தெரிவிக்கும் குறைகளை கேட்டு, உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது. அதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம்.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இதில் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது.

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் இணைந்து நிற்கலாமா என்பது குறித்து மக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல்ஹாசன் கருதுகிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப்போகும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டு 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 42,384 வாக்குகள் பெற்றிருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜன் போட்டியிட்டு 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் சுமார் 1½ லட்சம் வாக்குகள் பெற்றிருந்தது.

    வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல் ஹாசன் கருதுகிறார்.

    கோவை தொகுதி மக்களை கவரும் வகையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பஸ் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்தார்.

    கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய்களை நகர்த்தி வருவதால் அவர் போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது. கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் பா.ஜனதா வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

    கடந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ஆகிவிட்டார். கமல்ஹாசனை எதிர்த்து நிறுத்தும் வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் நினைக்கிறது.

    மேலும் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    வானதி சீனிவாசன் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இருந்தாலும் அவரையே மீண்டும் களம் இறக்க கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது.

    ×