search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"

    • திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    மதுரை:

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

    மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.

    மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

    புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.

    முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.

    ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.

    சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிமுகவில் சகோதரர்கள் இடையே யுத்தம் சகஜமானது.
    • பிரிந்தவர்கள் மனம் திருந்தி பொதுச் செயலாளரிடம் பேசலாம்.

    அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவருமான செல்லூர் ராஜூ, மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    அதிமுகவில் சகோதரர்கள் இடையே யுத்தம் சகஜமானது. அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் மனம் திருந்த வேண்டும், மனம் மாற வேண்டும். மிகப்பெரும்பான்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இருந்தால் கட்சி வளர்ச்சி அடையும்.

    பிரச்சினைகளை பேசி தீர்க்க நிச்சயமாக முடியும். ஏட்டிக்கு போட்டி செய்வதால் எந்த பயனும் அடையபோவதில்லை. அதிமுகவில் இருந்து விலகியவர்கள் (ஓ பன்னீர்செல்வம்) பொதுச்செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி) பேசி மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். உங்களுக்காக அதிமுகவின் கதவு திறந்தே உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×