search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி கட்சி"

    • குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
    • ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அந்த மாநிலத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    தனது கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் குஜராத் மக்களுக்கு தனது வேண்டுகோளையும் முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்கள் சகோதரன், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இலவச மின்சாரம் தருகிறேன்; பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறேன். உங்களை அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    தற்போதைய சூழ்நிலையில், குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 90 முதல் 95 தொகுதிகள் வரை கைப்பற்றுவோம். மேலும் இந்த வேகம் தொடர்ந்தால் 140 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

    கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 

    • ஆளுநரின் முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
    • ஜனநாயகம் முடிந்துவிட்டதாக அரவிந்ந் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    சண்டிகர்:

    ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், பாஜக தனது ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நாளை ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்.

    நாளை சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, ஆளுநர் மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? எனவே, இப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆபரேசன் தாமரை தோல்வியடையத் தொடங்கி, ஆதரவு கிடைக்காததால், சட்டசபை கூட்டத்தொடருக்கான ​​அனுமதியை திரும்பப் பெறுமாறு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது' என்றார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமானுல்லா கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தகவல்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான், டெல்லி வக்ப் வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். வக்ப் வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்தது தொடர்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமானுல்லா கானுக்கு லஞ்ச ஒழிப்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளது.
    • பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவரும், மாநில செய்தி தொடா்பாளருமான எஸ்.சுந்தரபாண்டியன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளுக்கு வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளதால் ஏழை, எளியோா் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.இது குறித்து பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்வதுடன், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து தங்களது அறிக்கைகளை மாற்றி வருகின்றனர்.
    • இந்த விவகாரம் குறித்து தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். தங்களிடம் பா.ஜனதா ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சி எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, "மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து தங்களது அறிக்கைகளை மாற்றி வருகின்றனர். பாஜக ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டை கூறி இருப்பதால் இந்த விவகாரம் குறித்து தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது.
    • டெல்லி அரசு ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது.

    இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாளை டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் கூட இருக்கிறது. இதில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க பாஜக ரூ.800 கோடி ஒதுக்கியிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

    'ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. ரூ.800 கோடி யாருடைய பணம்? அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை நாடு அறிய வேண்டும். எங்களது எந்த எம்எல்ஏவும் விலை போகவில்லை. அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. டெல்லியில் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தால் தேசிய கட்சியாக மாறும்.
    • குஜராத்தில் ஆட்சியமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி

    புதுடெல்லி:

    தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதேபோல் கோவாவிலும் கால்பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சட்டமன்ற தேர்தலில் 2 எம்எல்ஏக்களை பெற்றது. இந்நிலையில், கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனை பெருமை தரும் நிகழ்வாக பார்ப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் தேசிய கட்சியாக மாறும். இதற்காக அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஆம் ஆத்மியின் அடுத்த பெரிய இலக்கு குஜராத் மாநில தேர்தல். இதற்காக அங்கு மாவட்ட வாரியாக பிரசாரம் தொடங்கியிருக்கிறார் கெஜ்ரிவால். டெல்லி பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அறிவித்ததுபோன்று குஜராத்திலும் ஆட்சியமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல் அதிரடி திட்டங்களை கெஜ்ரிவால் தொடர்ந்து அறிவித்து வருவதால் இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

    இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×