search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"

    • இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

    சென்னை:

    6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

    போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

    ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
    • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.

    பஹ்ரைன்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 

    இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
    • பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பக்ரைன்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதுவரை 15 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இந்தியா அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

    2016-ம் ஆண்டில் இருந்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என மாறி மாறி ஆசிய கோப்பை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்தது.

    இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

    இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்தக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்யும்ம். பாகிஸ்தானில் போட்டி நடக்குமா? அல்லது பொதுவான இடத்துக்கு மாற்றப்படுமா? என்று தெரிய வரும்.

    சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்திய கத்தார் ஆசிய கோப்பை போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.

    இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.

    அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
    • இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

    இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அனைவரையும் கவரும் வகையில் ஒரு செயலைச் செய்தார். மைதானத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகீர்ந்து கொண்டார். கம்பீர் இலங்கைக் கொடியை கையில் எடுத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்த சம்பவத்தின் வீடியோவை கம்பீர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் அணி... உண்மையிலேயே தகுதியானது!!#வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா." என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இலங்கை வெற்றி பெற்றதும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நடனமாடினர்.
    • இலங்கை கொடிகளை பிடித்து மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

    ஆசிய கோப்பையை இலங்கை வென்றதால் கொழும்பு நகர வீதிகளில் மக்கள் வெற்றியை கொண்டாடினார்கள். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களின் வலியை போக்கும் வகையில் கிரிக்கெட்டில் இந்த வெற்றி கிடைத்தது.

    ஆசிய கோப்பை இறுதி போட்டியை கண்டுகளிக்கும் வகையில் கொழும்பு நகரின் பல இடங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் திரளாக அமர்ந்து போட்டியை ரசித்தனர்.

    இலங்கை வெற்றி பெற்றதும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நடனமாடினர். இலங்கை கொடிகளை பிடித்து மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். 

    • முதலில் விளையாடிய பாகிஸ்தான் 121 ரன்களுக்கு சுருண்டது.
    • இலங்கை தரப்பில் நிசாங்கா 55 ரன்கள் குவித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டீஸ், குணதிலகா டக் அவுட்டானார்கள். நிசாங்கா 55 ரன்கள் குவித்தார்.

    பானுகா ராஜபக்சே 24 ரன் எடுத்து அவுட்டானார். தாசுன் ஷனகா 21 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்திற்கு இந்த இரு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது.

    • பாகிஸ்தான் அணியில் அதிபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 30 ரன் எடுத்தார்.
    • இலங்கை தரப்பில் அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

    முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடுகிறது.

    • சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
    • இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும்.

    முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன. இந்த இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.

    இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு முன்னேறிவிட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

    • தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
    • இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், ஆங்காங் முதல் சுற்றில் வெளியேறின.

    'சூப்பர் 4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோற்றது.

    நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. 2 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் 11-ந்தேதி நடை பெறும் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

    இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இதே நிலை தான். இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    'சூப்பர் 4' ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய மூன்று 20 ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    • மோதலில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ஷார்ஜாவில் நடந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கினர்.

    இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் மைதானத்துக்கு வெளியே சாலையில் மோதிக் கொண்டனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ×