search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

    இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.

    ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
    • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 19 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி காலை 7.45 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரோகிணி நாளை விடியற்காலை 4.52 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சிதம்பரம் ஆவுடையார் கோவிலில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்- நன்மை

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-வாழ்வு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- வெற்றி

    மகரம்-லாபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-பரிவு

    • கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும்.
    • சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் பிரவேசித்துக்கொண்டு இருப்பார்.

    இதில் நான்காவதாக இருக்கும் கடகத்திற்கு வருகிறார். அது சந்திரனின் இடம். இது அம்பாளுக்கு உரிய இடம். அம்பாள் தவம் இருந்து சிவனை அடைந்த இடமாகவும், சிவன் போய் சேரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவியான சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    ஆனால் நம் முன்னோர்கள் கணவன் மனைவி சேரக்கூடாது என்று கூறிவைத்துள்ளார்கள். இதில் பகுத்தறிவான விஷயம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் நம் முன்னோர்கள் இதனை கூறி வைத்துள்ளனர்.

    ஆடி மாதத்திற்கு உள்ள சிறப்புகள்:

    ஆடி மாதத்தில் தான் தட்சாயணம் காலம் ஆரம்பிக்கிறது.

    குழந்தை பாக்கியம், திருமணத்தடை, தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வெற்றிழை வைத்து பிரசன்னம் பார்ப்போம். வெற்றிலை வைத்து பார்க்கும் போது இதில் 5-வதாக வைத்த வெற்றிழை கிழிந்து இருந்தால் அது குழந்தை பாக்கியம் பிரச்சினை. இதற்கு சிறந்த தீர்வு குலதெய்வ வழிபாடு தான்.

    ஆடிமாதம், பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில்  11 பேரிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும்.

    என் வம்சம் தழைக்க என் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோவிலில் குறைந்தது 6 மணிநேரமாவது உட்கார்ந்து விட்டு வர வேண்டும்.

    மேலும் பித்ருக்கள் சாபம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தடைபடும். அப்போது பித்ருக்களுக்கு உகந்தது ஆடி அமாவாசை. யாரெல்லாம் முன்னோர்களுக்கு கொல்லி வைத்தார்களோ அவர்கள் எல்லாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் அளிக்கும் போது பித்ருக்கள் சாபம் நீங்கி வம்சம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குலதெய்வமே தெரியாதவர்கள் என்னசெய்வது?

    முதலில் விநாயகர் வழிபாடு செய்யலாம். வெற்றிலை பிரசன்னத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

    தர்ப்பணம் பெண்கள் கொடுக்கலாமா?

    எள், தண்ணீர் இரைக்கும் செயலை சுமங்கலிகள் செய்யக்கூடாது. பெண்கள் சுமங்கலியாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மருமகன்கள் இதனை செய்யலாம். யாருமே தர்ப்பணம் கொடுக்க இல்லை என்றாலும், தர்ப்பணம் கொடுப்பதற்கு ஒரு பிராமணன் இருப்பார். அவரிடம் சென்று தர்ப்பணம் கொடுக்க சொல்லலாம்.

    திருமணத்தடை நீங்க ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கலாம்?

    சிவனும், அம்பாளும் சேர்ந்த ஒரு அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம் இந்த மாதத்தில் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணத்தடை இருந்தால். முத்துமாரி அம்மன், காமாட்சி அம்மன் அல்லது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மல்லிகைப்பூ போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

    யாருடைய வீட்டிலாவது பெண்கள் கல்யாணத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை கன்னி தெய்வம் என்று சொல்வார்கள். இவர்களை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அந்த முறைப்படி கும்பிட்டு வந்தால் திருமண வாழ்க்கை கூடிவரும்.

    ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று முருகனுக்கும், அம்மனுக்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு அந்த மாலையை திருமணத்தடை உள்ளவர்கள் மாலையை போட்டு வழிபட்டு விட்டு அந்த மாலையை வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்யாணம் கைகூடியவுடன் இரண்டு மாலையாக முருகனுக்கு செலுத்திவிட வேண்டும்.

    ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்தப்படுவதில்லை?

    ஆடி மாதத்தில் லக்கணமும், கோச்சார பலனும் நன்றாக இருப்பதில்லை என்பதினால் திருமண காரியங்களை செய்வதில்லை. சர ராசி, சிர ராசி, உபய ராசி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு உபய ராசியில் சந்திரன் இருக்கும் காலக்கட்டத்தில் புதுமனை புகுவிழா செய்யக்கூடாது. அதுபோல ஆடி மாதத்தில் தெய்வத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்கள்?

    பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இருக்கும். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் இதனை நைவேத்தியம் செய்யலாம். மனமுருகி வழிபட்டாலும் தெய்வ அனுக்கிரகம் இருக்கும்.


    • 5-ந்தேதி அமாவாசை.
    • நாளை பிரதோஷம்

    2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்

    * பிரதோஷம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு,

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (வியாழன்)

    * சிதம்பரம் சிவபெருமான் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (சனி)

    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * திருவில்லிபுத்தூர் திருவி பெரியாழ்வார் விழா தொடக்கம்

    * திருநள்ளார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.

    * ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி.

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி சிம்ம வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந்தேதி (திங்கள்)

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி அனுமன் வாகனத்தில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
    • அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.

    அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.

    வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.

    அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.

    இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.

    சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.

    பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

    சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

    அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.

    இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.

    இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

    இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
    • பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும்.

    சத்தியவதன் என்ற அரசனின் வழியில் வந்தவன், சத்ரஜித். இவன் சூரிய பகவான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். சூரிய பகவானை தினமும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு சூரிய பகவானும் அருள்புரிந்து வந்தார்.

    ஒரு சமயம் சத்ரஜித்துக்கு, சூரிய பகவான் காட்சி கொடுத்தார். மிகுந்த ஒளியுடன் காணப்பட்டதால் சூரிய பகவானின் முழு உருவத்தையும் சத்ரஜித்தால் பார்க்க முடியவில்லை.

    அவன் சூரிய பகவானைப் பார்த்து, "இறைவா.. நீங்கள் மிகுந்த ஒளியுடன் இருக்கிறீர்கள். ஆகாயத்தில் பார்க்கும் பொழுது, உங்களின் முழு உருவத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் உங்களை தரிசனம் செய்ய முடியாத வருத்தம் எனக்கு ஏற்படுகிறது. உங்களின் திருவடி முதல் சிரசு வரை நான் தரிசிக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினான்.

    அதற்கு சூரிய பகவான், "என் கழுத்தில் உள்ள சியாமந்தக மணி அதிக ஒளியை வெளிப்படுத்துவதால்தான், உன்னால் என்னை பார்க்க முடியவில்லை" என்று கூறி, தன் கழுத்தில் இருந்த சியாமந்தக மணியை கழற்றி வைத்தார்.

    அதன்பிறகு சூரிய பகவானை முழுமையாக தரிசனம் செய்யும் பாக்கியம், சத்ரஜித்துக்கு கிடைத்தது. சூரியனின் கழுத்தில் கிடந்த சியாமந்தக மணி தனக்கு கிடைக்க வேண்டும் என்று சத்ரஜித் விரும்பினான். அவனது விருப்பத்தை அறிந்து கொண்ட சூரிய பகவானும், சியாமந்தக மணியை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைந்தார்.

    இந்த சியாமந்தக மணி, ஒரு நாளைக்கு 8 பாரம் (ஒரு கழுதையால் சுமக்கக் கூடிய அளவு) பொன்னை அளிக்கக்கூடியது. இந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு, சூரிய பகவானே நடந்து வருவது போல் துவாரகையை நோக்கி நடந்து சென்றான் சத்ரஜித். துவாரகை மக்கள் "சூரிய பகவானே வருகிறார்" என்பதாக பேசிக் கொண்டனர்.

    இதை அறிந்த கிருஷ்ண பகவான், 'இந்த ரத்தினம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டியது, சத்ரஜித் கழுத்தில் இருப்பது தகாது. இது இருக்க வேண்டியது உக்கிரசேன அரசனின் அரண்மனை பொக்கிஷத்தில்தான்' என்று எண்ணினார்.

    இந்த எண்ணத்தை தெரிந்து கொண்ட சத்ரஜித், கிருஷ்ணரால் தனக்கு ஏதாவது துன்பம் வரலாம் என்று நினைத்து, சியாமந்தக மணியை தன்னுடைய தம்பி பிரசேனனிடம் கொடுத்து வைத்தான்.

    சியாமந்தக மணிக்கு ஒரு குணம் உண்டு. தகுதி இல்லாதவர், சுத்தமற்றவர் கையில் அது சென்றால், அது அந்த நபருக்கு கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

    பிரசேனன், சியாமந்தக மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக காட்டில் வேட்டையாடச் சென்றான். ஒளி வீசும் அந்த மணியைக் கண்ட ஒரு சிங்கம், பிரசேனனையும், அவனது குதிரையையும் கொன்று விட்டு, சியாமந்தக மணியை ஏதோ ஒரு மாமிசம் என்று எண்ணிக் கொண்டு வாயில் கவ்விச் சென்றது.

    அந்த நேரத்தில் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அங்கு வந்தார். அவர் சிங்கத்தின் வாயில் இருந்த சியாமந்தக மணியை கண்டதும், சிங்கத்தைக் கொன்று விட்டு, அதை எடுத்துச் சென்று தன் மகன் சுகுமாரன் விளையாடுவதற்காக அவன் தூங்கும் தொட்டிலில் கட்டி வைத்தார்.

    இதற்கு இடையில் காட்டிற்குச் சென்ற பிரசேனன், பல நாட்களாக திரும்பி வராததால், சியாமந்தக மணிக்காக கிருஷ்ணன்தான், பிரசேனனைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்த வீண் பழி, கிருஷ்ணனின் காதிற்கும் சென்றது.

    அவர் 'இதை இப்படியே விடக்கூடாது. தன் மீது விழுந்த பழியை நீக்க வேண்டும்' என்று நினைத்து, தன் யாதவ சேனைகளுடன் காட்டிற்குச் சென்று பிரசேனனை தேடினார். அப்பொழுது பிரசேனனின் குதிரையின் காலடி தடம் இருப்பதைக் கண்டார்.

    அதை பின்பற்றிச் சென்றபோது, பிரசேனனும், அவன் குதிரையும் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு சிங்கத்தின் காலடித் தடம் இருப்பதைப் பார்த்தனர்.

    அந்த தடத்தை பின்பற்றி செல்கையில், ஓரிடத்தில் சிங்கம் இறந்து கிடந்தது. அதற்கு அருகில் கரடியின் காலடித் தடம் தென்பட்டது. அதை பின்பற்றிச் செல்கையில், அது ஒரு குகையின் வாசலில் போய் முடிந்தது.

    குகைக்குள் சென்று பார்க்க அனைவரும் தயங்கினர். உடனே கிருஷ்ண பகவான் தனியாக அந்த குகைக்குள் சென்றார். அப்பொழுது ஒரு பெண், ஜாம்பவானின் மகனை கையில் வைத்துக்கொண்டு, சியாமந்தக மணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை பார்த்தவுடன் பயந்து அலற, அந்த சப்தம் கேட்டு ஜாம்பவான் அங்கு ஓடி வந்தார்.

    கிருஷ்ண பகவானுக்கும், ஜாம்பவானுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. அவர்கள் இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்தனர். ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொண்டு மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் ஜாம்பவான் தன் மேல் விழும் அடி அத்தனையும் ராமபிரானின் அரவணைப்பு போல் தோன்றுவதை உணர்ந்தார்.

    வந்துள்ளது நாராயணனின் அவதாரம் என்பதை அறிந்து கொண்ட அவர், கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தார். கிருஷ்ணனும் ஜாம்பவானிடம் மகிழ்ச்சியாக பேசினார். ஜாம்பவான், சியாமந்தக மணியை கிருஷ்ண பகவானிடம் கொடுத்துவிட்டு, தன் வளர்ப்பு மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த கதையை படிப்பவர்களுக்கு, வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

    • இன்று சர்வ ஏகாதசி.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 9.24 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பரணி காலை 6.33 மணி வரை பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.51 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-போட்டி

    கன்னி-நிறைவு

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-புகழ்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பரிசு

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-17 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 11.26 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அசுவினி காலை 7.45 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் ஸ்ரீ வரகுணமங்கை ஸ்ரீ பரமநாதன், வரகுணவல்லி சென்று தரிசித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-நிறைவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிரமம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உற்சாகம்

    மகரம்-ஓய்வு

    கும்பம்-முயற்சி

    மீனம்-புகழ்

    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-16 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.35 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.10 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரம் சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-சுபம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- அமைதி

    மகரம்-பரிசு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-இனிமை

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 15 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.46 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பாலபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருச்சேறை ஸ்ரீசாரநாதர், திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலகங்கார திருமஞ்சன சேவை. கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனிவாசனப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-பயணம்

    கடகம்- பரிவு

    சிம்மம்-பந்தம்

    கன்னி-பாசம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- ஓய்வு

    மகரம்-முயற்சி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-இன்பம்

    • உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
    • காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

    இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

    திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    • ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.
    • மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவைக் குறிக்கிறது.

    * ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு, வேத போதனைகளின் ஓட்டத்தை கடத்துவதை கங்கை குறிக்கிறது.

    * இறைவன் காலமற்றவன் என்பதை பிறை சந்திரன் அடையாளப்படுத்துகிறது.

    * மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவை குறிக்கிறது. அக்கண் திறந்தால் தீமை பொசுங்கிப்போகும்.

    * சிவபெருமான் வைக்கும் வாழ்க்கை தேர்வில் வெற்றிபெற்றால், அவர் உடலை ஆபரணமாக அலங்கரிக்கலாம் என்பதை பாம்பு பறைசாற்றுகிறது.

    * ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.

    * திரிசூலத்தின் மூன்று கூர்மையான பகுதிகளும், அறிவு, ஆசை, செயல்படுதல் ஆகியவற்றை குறிக்கின்றன.

    * உடுக்கையும், அதில் இருந்து புறப்படும் ஒலியும், வேதங்களையும் அவற்றின் சொற்களையும் குறிப்பிடுகின்றன.

    * ஈசன் உடுத்தியிருக்கும் புலித்தோல் ஆடையானது, அச்சமின்மையை எடுத்துரைக்கிறது.

    ×