என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
- மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.
ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
"இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.
மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.
அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.
திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.
இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.
"எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".
பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:
"நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).
மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).
பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.
"இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).
'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)
'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.
- சுடலைமாடன் அலங்கார பிரியராக விளங்குகிறார்.
- முக்கோண பீடமாக அமர்ந்துள்ளதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் சூளைவாய்க்கால் கிராமத்தில் அருள்பாலித்து வரும் வேம்படி சுடலைமாடன், கோவை மாவட்டம் சரவணம்பட்டி ஜனதா நகரில் சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சிவனணைந்த பெருமாள், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.
மாப்பிள்ளை அலங்காரம்
சுடலைமாடன் 3 தலைமுறைக்கு முன்பே இங்கு வீற்றிருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஊர் மக்களால் கோவில் கட்டி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக சுடலைமாடன் கோவில்கள், குடியிருப்பு பகுதியில் இல்லாமல் தனித்து அமைந்து இருக்கும். மேலும் சுவாமி ஆக்ரோஷம் மிகுந்தவராக இருப்பார். ஆனால் கோவை வேம்படி சுடலை மாடன் சுவாமி குடியிருப்புகள் வருவதற்கு முன்பே அமர்ந்து இருந்தாலும், மக்களுக்கு காவல் தெய்வமாகவும், சாந்த சொரூபமாகவும் கருணை மிகுந்தவராகவும் திகழ்கிறார். இந்த கோவிலுக்கு சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கிறார்கள்.
சிவன்-பார்வதி மைந்தனான சுடலைமாடன் கிழக்கில் மாப்பிள்ளை அலங்காரத்திலும், பேச்சி அம்மனின் அரவணைப்பில் மேற்கில் முண்டனாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாப்பிள்ளை அலங்காரத்தில் கயிலாயத்தில் இருப்பது போன்று பீடம் அமைக்கப்பட்டு உள்ளதால் சுடலைமாடனுக்கு பொங்கல் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆண்டிற்கு 2 நாட்கள் மட்டுமே அசைவம் படைக்கப்படுகிறது.
அலங்கார பிரியர்
சுடலைமாடன் அலங்கார பிரியராக விளங்குகிறார். இவருக்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே பூஜை செய்யப்படும். மற்ற நாட்களில் சுவாமிக்கு தீபாராதனையோ, அலங்காரமோ கிடையாது.
முக்கோண வடிவிலான பீடமாக சுவாமி அமர்ந்துள்ளதால் தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்டவை பன்னீரால் கலந்து சுவாமியின் திருமேனியில் பூசப்படும். பின்னர் வாசனை பூக்களான மல்லிகை, ரோஜா, மரிக்கொழுந்து, செண்டு, அரளி, செவ்வரளி உள்ளிட்ட பூக்கள் மாலையாகவும், தோரணமாக கட்டப்பட்டு பீடத்தில் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிக்கு புனித தீர்த்தங்கள், பன்னீர் மற்றும் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி மற்றும் இரவு 12.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அசைவ பிரியரான சத்திராதி முண்டனுக்கு ஆடு, கோழி, பன்றி இறைச்சி சமைக்கப்பட்டும், அவித்த முட்டைகள், சுருட்டு, மது வகைகள் படையலிடப்படும்.
இந்த பூஜையில் கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து செல்கிறார்கள். இதேபோல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும்.
திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும்
51 பந்தி தெய்வங்களின் முதன்மையாக கருதப்படும் சுடலைமாடனை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் மற்றும் கோர்ட்டு வழக்குகள் தீருவதுடன், திருமணம், குழந்தைபேறு கிட்டும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
மேலும் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுடலைமாடனுக்கு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக வேட்டி, துண்டு, பூ மாலை, தேங்காய், பழம் வாங்கி வந்து பூஜை செய்து வழிபடுகிறார்கள். மேலும், சுடலைமாடன் அருளால் திருமணமானவர்கள் தங்களது துணையுடன் வந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.
இதேபோல் குழந்தைப்பேறு கிடைத்த தம்பதிகள் பேச்சியம்மனுக்கு சேலை, வளையல், பூ மற்றும் குழந்தை பொம்மையை வாங்கி வைத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த கோவிலில் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி (ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை) திருவிழா நடைபெறுகிறது.
திரு விழாவின்போது சுடலைமாடனுக்கு மகுடம் சூட்டி, கணியான்கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடைபெறும். இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டுகளிப்பார்கள்.
சாம்பல் ஒன்றே போதும்...
கோவை வேம்படி சுடலைமாடனுக்கு ஆடி, தை மாதங்களில் 3-வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்வார்கள். பொதுவாக எல்லா கோவில்களிலும் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு தீர்த்தம் தெளிப்பார்கள். அதன் பின்னர் ஆடு, கோழிகள் சிலிர்த்ததும் அதனை பலியிடுவார்கள்.
கோவை வேம்படி சுடலைமாடன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழிகளுக்கு தீர்த்தம் போடுவதற்கு பதில் சுடலைமாடனின் சாம்பல் (திருநீறு) போடப்படும். இதில் அனைத்து ஆடு, கோழிகள் சுவாமி அருளால் சிலிர்க்கும். இது போன்ற அதிசயம் இங்கு மட்டுமே நடைபெறுவதாக கோவை பக்தர்கள் தெரிவித்தனர்.
- இன்று பிரதோஷம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-5 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி காலை 6.58 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: விசாகம் மாலை 5.20 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சொக்கநாதர், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி. கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரசூசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-உண்மை
கடகம்-சுகம்
சிம்மம்-பரிவு
கன்னி-பாசம்
துலாம்- அன்பு
விருச்சிகம்-அலைச்சல்
தனுசு- ஆதரவு
மகரம்-வரவு
கும்பம்-விவேகம்
மீனம்-முயற்சி
- 21-ந்தேதி பவுர்ணமி.
- 19-ந்தேதி கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
18-ந்தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா. இரவு புஷ்ப சப்பரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* பவுர்ணமி.
* காரைக்கால் அம்மை யார் மாங்கனி திருவிழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தி லும். தாயார் பூப்பல்லக் கிலும் பவனி.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
- நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள்.
- நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.
ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான்.
எப்பொழுதுமே பணம், பதவி, அதிகாரம் ஆகியவை சேரும் இடத்தில், பிரச்சினைகளும் வந்துசேரும். பெரும் தவத்தின் பயனாக, தான் பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தினான், முரன். அவன் மூன்று உலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களை துன்புறுத்தினான்.
காட்டில் உள்ள ஒரு பலம் வாய்ந்த சிங்கத்தைக் கண்டு எளிய விலங்குகள் நடுங்குவது போல், பிரம்மா கொடுத்த வரத்தின் காரணமாக, முரனைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் நடுங்கினர். முரனுக்கு அழிவு பெண்ணால் மட்டும் தான். மற்ற வழியில் அவனுக்கு அழிவு ஏற்படாது என்பது அவன் பெற்றிருந்த வரம்.
இந்த நிலையில் தேவர்களும், முனிவர்களும் பிரம்மலோகம் சென்றனர். பிரம்மன் வசிக்கும் அந்த உலகத்தை 'சத்திய லோகம்' என்றும் கூறுவார்கள். அங்கு பிரம்மா அமர்ந்திருந்தார்.
அவரிடம், "சுவாமி.. எங்கள் நிலையை பாருங்கள். முரனை அழிக்கும் வழி என்ன என்று கூறுங்கள்" என்றார். பிரம்மா, "அவனை படைத்தவன் நான். வரமும் நான்தான் கொடுத்தேன். அவனை அழிக்கக்கூடிய ஆற்றலைப் பற்றி நீங்கள் திருக்கயிலாயம் சென்று கேளுங்கள்" என்றார்.
தேவர்களும், முனிவர்களும் திருக்கயிலாயம் சென்றபோது, அங்கு சிவ பெருமான் யோகத்தில் இருந்தார். யோகத்தில் இருந்த சிவபெருமானை பார்த்து அவர்கள், "இறைவா.. முரன் எங்களை துன்புறுத்துகிறான். இதற்கு நீங்கள்தான் சரியான வழி காட்ட வேண்டும்" என்றனர்.
அதற்கு சிவபெரு மான், "நீங்கள் வைகுண்டம் செல்லுங்கள். உங்களுக்கு அங்கு நல்ல வழி காத்திருக்கிறது" என்றார். அதன்படி தேவர்களும், முனிவர்களும் வைகுண்டம் சென்று, "நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, எங்களுக்கு வழிகாட்டு" என்று திருமாலை வணங்கி துதித்தனர்.
அவர் தனது கதாயுதத்துடன் முரனை எதிர்த்து யுத்தம் செய்தார். முரன் ஆயிரம் ஆண்டுகள் கடும் யுத்தம் செய்தான். இனி முரன் அழியக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கருதி, அங்கிருந்த ஒரு குகையில் சென்று பகவான் யோக சயனத்தில் இருந்தார்.
அந்த யோக சயனத்தின் பொழுது ஒரு பெரிய ஒளி அவர் உடலில் இருந்து தோன்றியது. அதே நேரத்தில் முரனும் அந்த குகையின் உட்புறம் வந்தான். அந்த ஒளி, ஒரு பெண்ணாக மாறி முரனை எரித்தது. இதே நேரத்தில் தேவர்களும், முனிவர்களும் குகையின் அருகே வந்து மகாவிஷ்ணுவை துதி செய்தனர். அந்த பெண்ணே 'ஏகாதசி'. அவள் தோன்றிய தினமே 'ஏகாதசி திதி' என்றும் சொல்கிறார்கள்.
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்!
தேவர்கள் மேற்கண்ட துதியை சொல்லி, திருமாலை வழிபட்டனர். அப்போது அவர், "முரன் அழிந்த இந்த ஏகாதசி அன்று, யார் என்னை வழி படுகிறார்களோ, அவர் களுக்கு சகல செல்வத்தையும் அருள்வேன்" என்றார். ஏகாதசி அன்று நாம், பகவான் நாமத்தைச் சொல்ல வேண்டும்.
ஏகாதசி அன்று விரதம் இருந்து மறுநாள் காலை துவாதசி அன்று உண்பதை 'பாரணை' என்பார்கள். அன்று உணவில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்து உண்பார்கள். துவாதசி அன்று பகலில் உறங்கக்கூடாது.
ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர், தேன், வேக வைத்த கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். மேலும் இவற்றை கோவிந்தன் நாமத்தை சொல்லி உண்பதால் விரத பங்கம் ஏற்படாது.
வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளை சேர்த்து, ஆண்டு ஒன்றுக்கு 24 அல்லது 25 ஏகாதசி வரும். இவற்றில் மிக விசேஷமானது வைகுண்ட ஏகாதசி ஆகும். ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்பார்கள். இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.
ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு, 'நாம் விரதம் எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கிறோமே' என்ற ஏக்கம் உண்டாயிற்று. மற்றவர்கள் ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் பொழுது, தான் மட்டும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது.
வேத வியாசரிடம் சென்று "மகரிஷியே.. என் சகோதரர்களும், என் தாயாரும், என் மனைவியும் ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் இருக்கும் விரதத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுதும் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளதால், என்னால் விரதம் இருக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.
அதற்கு வேதவியாசர் "பீமா.. உன் மனதில் பகவான் இருக்கிறார். உனது எண்ணம் தெரியும். பொதுவாக 24 ஏகாதசி என்று சொன்னாலும் மொத்தத்தில் 25 ஏகாதசிகள் வரும். இப்பொழுது நான் உனக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று, நீ ஜலம் (நீர்) கூட அருந்தாமல் உபவாசம் இரு. அப்படி இருந்தால், உனக்கு இந்த வருடம் முழுவதும் ஏகாதசி உபவாசம் இருந்த பலன் கிடைக்கும்" என்றார். அதனால் ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்றும், 'பீம ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.
இந்த ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளைப் பெற்றதாக கூறுவார்கள். அதனால் ஏகாதசி விரதம் வருடம் முழுவதும் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு நாள் ஏகாதசி விரதம் இருந்தால் போதும். வருடம் முழுவதும் இருந்த பலன் கிடைக்கும். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-4 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 5.56 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சுவாதி பிற்பகல் 3.47 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-கவனம்
கடகம்-கடமை
சிம்மம்-கண்ணியம்
கன்னி-கட்டுப்பாடு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- விவேகம்
மகரம்-வரவு
கும்பம்-முயற்சி
மீனம்-நன்மை
- சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது.
- சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வெகுவேகமான நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலை எனும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். அது மாயவலைதான். ஆனால் இரும்பு திரை போல கண்ணை மறைத்து மனக்கவலையை ஏற்படுத்துகிறது.
சரி இதுக்கு என்ன தீர்வு. துன்பம் நீங்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர் நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார் என்பதுதான் அந்த சிறப்பு.
ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர்நாடு கோவில்
இந்த இடம் எங்கிருக்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கோனூர் நாடு. இங்குதான் கவலைகளை தீர்க்கும் அகத்தீஸ்வர் உள்ளார். கோவிலில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு.
சித்தர்கள் வழிபட்ட கோவில்களில் தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்.
இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன் காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்பட செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனச்சுமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
18 கிராம மக்கள் மட்டுமே இக்கோயிலில் வழிபட்டு வந்த நிலையில் தற்போது இக்கோயிலின் பெருமை அறிந்து முக்கியமாக மனக்கவலைகள் தீர்ப்பதை உணர்ந்து வெளி ஊர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் இக்கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியம்பெருமான், ஈசன், அம்பாளை வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி ஈசன், அம்பாள், நந்தியம்பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமைய பெற்றுள்ளது இக்கோயிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.
சிவபெருமானின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் அகத்தீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன், பெரியநாயகி அம்பாள் சன்னதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
- இன்று சர்வ ஏகாதசி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-3 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி (முழுவதும்)
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 1.48 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் வெள்ளி விருஷப சேவை. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-களிப்பு
சிம்மம்-கருணை
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-சாதனை
தனுசு- நிம்மதி
மகரம்-நற்செயல்
கும்பம்-பரிவு
மீனம்-சாந்தம்
- ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
- சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆனி 2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி நாளை விடியற்காலை 4.28 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.29 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம், சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-சுகம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்- ஆதரவு
சிம்மம்-களிப்பு
கன்னி-தனம்
துலாம்- வரவு
விருச்சிகம்-சிரமம்
தனுசு- உழைப்பு
மகரம்-லாபம்
கும்பம்-வெற்றி
மீனம்-இன்பம்
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-32 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நள்ளிரவு 12.46 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: பூரம் காலை 6.23 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-பாராட்டு
கடகம்-பெருமை
சிம்மம்-இன்பம்
கன்னி-பரிவு
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- ஆதரவு
மகரம்-உழைப்பு
கும்பம்-உண்மை
மீனம்-கடமை
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-31 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 10.44 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் கோவில்களில் விழா தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஊஞ்சல் உற்சவ விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஆசை
சிம்மம்-நற்சொல்
கன்னி-பொறுப்பு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பெருமை
மகரம்-ஆதரவு
கும்பம்-பரிசு
மீனம்-பணிவு
- இன்று சஷ்டி விரதம்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 30 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 8.56 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: மகம் பின்னிரவு 3.51 மணி வரை. பிறகு பூரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சுப முகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி. திருக்கோளக்குடி கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர் முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-சிரமம்
மிதுனம்-நன்மை
கடகம்- சுகம்
சிம்மம்-கவனம்
கன்னி-கடமை
துலாம்- செலவு
விருச்சிகம்-களிப்பு
தனுசு- உறுதி
மகரம்-ஆதரவு
கும்பம்-லாபம்
மீனம்-தெளிவு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்