search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • 23-ந் தேதி பவுர்ணமி.
    • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் உலா.

    21-ந்தேதி (செவ்வாய்)

    * பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

    * மதுரை கூடலழலகர் யானை வாகனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி கோ ரத உற்சவம்.

    * காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (புதன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்,

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்

    * திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (வியாழன்)

    * பவுர்ணமி.

    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

    * உத்தமர்கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வெள்ளி)

    * மதுரை கூடலழகர் ரத உற்சவம்.

    * பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சப் தாவர்ணம்,

    * காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் தெப்பம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (சனி)

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் உலா.

    * காஞ்சிபுரம் வரதராசர் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

    * அகோபிலமடம் திருமத் 35-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத் திர வைபவம்.

    * சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம்.

    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் உலா.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (திங்கள்)

    * காஞ்சிபுரம் வரதராசர் உபய நாச்சியார்களுடன் ரத உலா..

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    • பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்.
    • மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-8 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி இரவு 6.08 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: சித்திரை காலை 6.23 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருக்கண்ணபுரம் ஸ்ரீ கவுரிராஜப் பெருமாள் காலை வாமன அவதாரம். பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். மாயூரம் ஸ்ரீ மாயூரநாதர்,திருவாடானை ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர், நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர், திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தணிநாதர், திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர், உத்தமர் கோவில் ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் கோவில்களில் தேரோட்டம். மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் பவனி. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-வரவு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-நன்மை

    கன்னி-சுகம்

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-நலம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-உழைப்பு

    கும்பம்-உதவி

    மீனம்-பணிவு

    • காளையார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-7 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி மாலை 4.40 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : சித்திரை (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் பவனி. காளையார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள் வைரச் சப்பரத்தில் பவனி. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-யோகம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-மேன்மை

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-கடமை

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- நிம்மதி

    மகரம்-பக்தி

    கும்பம்-நன்மை

    மீனம்-வெற்றி

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
    • காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-6 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 2.53 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : அஸ்தம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    நாளை சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் சகோபுரசகித வெள்ளி விருஷப சேவை. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-பரிவு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சிந்தனை

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- சாதனை

    மகரம்-உண்மை

    கும்பம்-வரவு

    மீனம்-பயணம்

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
    • உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-5 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மதியம் 12.53 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீகவுரிராஜப் பெருமாள் காலை பரவாசுதேவ சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி காமதேனு வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-நலம்

    கடகம்-உறுதி

    சிம்மம்-திடம்

    கன்னி-சுகம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- உயர்வு

    மகரம்-அமைதி

    கும்பம்-அன்பு

    மீனம்-பாசம்

    • திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
    • பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 4 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி காலை 10.55 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம் : பூரம் இரவு 11.03 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம். காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநரசிம்மாழ்வார் ஒன்பது கருட சேவை. பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    நாளைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-கடமை

    கடகம்-ஆரோக்கியம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-நட்பு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- கவனம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-பண்பு

    மீனம்-பணிவு

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.
    • உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-3 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி காலை 9.06 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மகம் இரவு 8.33 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சுபம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-நட்பு

    துலாம்- விருப்பம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- விவேகம்

    மகரம்-கவனம்

    கும்பம்-கடமை

    மீனம்-பக்தி

    • மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
    • தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்

    "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).

    ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்தாலும், நாம் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு இடம் உண்டு. ஒருநாள் அனைவரும் அங்கு ஒன்றுகூடி வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவ்விடம் பரலோகம், மோட்சம், சொர்க்கம் என பல பெயர்களில் பலராலும் அறியப்படுகிறது.

    பரிசுத்த வேதாகமம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று கூறுகிறது. அதாவது பரலோக ராஜ்ஜியம் அருகில் இருக்கிறது அல்லது நமக்கு நெருங்கிய தூரத்தில் உள்ளது. இது குறுகிய காலத்தைக் காட்டுகிறது. எனவே சீக்கிரம் தாமதிக்காமல் மனந்திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கிறது.

    'நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்' (மத்தேயு 9:13) என்று இயேசு கூறுகிறார்.

    இந்த உலகில் துன்மார்க்கமாக வாழ்கிறவர்களை யாரும் விரும்புவது இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக, நற்குணங் களோடு, சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடு, உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே விரும்புவர். ஆனால் இயேசு மட்டுமே பாவிகளை தேடி இந்த உலகிற்கு வந்தார். ஏனென்றால் அவர் பாவிகளையும் நேசிக்கிறார்.

    சிலர் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவைக்காக காத்திருந்து அது நிறைவேறாது போகும்போது அந்த விரக்தியினால் ஏற்படும் கவலை, பயம் போன்ற உணர்வுகளோடு வாழ்கின்றனர். சிலர் அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றனர். சிலர் மதுவுக்கும், மாதுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

    ஆரம்பத்தில் சிறியதாக தோன்றிய பாவங்கள், பின்னர் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் முடியாதபடி அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. `பாவத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர நினைக்கிறேன், என்னால் முடியவில்லை' என்று பலர் கூறுவதை கேட்கலாம். இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

    பாவிகள் தங்களுடைய பாவத்திலேயே வாழ்வது அவருக்கு விருப்பம் அல்ல. அவர்கள் மனம் திரும்பி வாழ வேண்டும். மனிதன் தன் சுய முயற்சியால் பாவத்தில் இருந்து விடுபட முடியாது. ஆனால் இயேசுவிடம், 'இயேசுவே நான் பாவம் செய்யாமல் வாழ விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யும்' என்று அவரை அழைத்தால் அவர் நிச்சயமாக உதவி செய்வார்.

    'மனம் திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. (எசேக்கியேல் 18:32).

    'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13) என வேதம் கூறுகிறது. ஆனால் யாரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும்?

    'நீர் சர்வ வல்லவரிடத்தில் மனம் திரும்பினால் திரும்ப கட்டப்படுவீர்' (யோபு 22:23) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

    நாம் யாரிடம் நம்முடைய பாவங்களை சொல்லுகிறோம்? யாரிடம் மனந்திரும்புகிறோம்?

    நம்மில் சிலர் பாவத்திற்கு பரிகாரம் என்று புண்ணிய தலங்களுக்கு செல்வதும், தன்னை வருத்திக்கொள்வதும் உண்டு. பாவ பழக்கங்களால் இடிக்கப்பட்டு பழையதாகி போனது போன்ற நிலைமையில்உள்ள ஒருவருடைய வாழ்க்கையை திரும்ப கட்டப்பட வேண்டும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்ப வேண்டும்.

    அப்பொழுது அவனுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கும். தான் இழந்து போன தொழில், நிலம், செல்வம், சரீர சுகம் போன்ற உலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாது, அவனது ஆத்துமா மரணத்துக்கு நீங்கலாக்கி கர்த்தருடைய இரக்கத்தால் பாதுகாக்கப்படும்.

    நம்முடைய மனம் குற்றமில்லாது இருக்க வேண்டும். 'மனுஷனுடைய இதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்ட தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதுகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:21-22) என்று இயேசு கூறினார்.

    இப்படியான பாவங்கள் நம் இதயத்துக்குள் இருந்து புறப்பட்டு நம்மை தீட்டுபடுத்தாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும் (பிலிப்பியர் 2:5).

    நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும். பரலோக வாழ்க்கையைக் குறித்த உணர்வு வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.

    எனவே நாம் சர்வ வல்லவராகிய நம்முடைய கர்த்தரிடத்தில் மனந்திரும்பி சகல ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.

    • இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்.
    • ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம். உலக மக்களிடையே அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மார்க்கம் ஆகும்.

    உலக மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அநீதியுடன் நடப்பவர்களுக்கு மறுமை உலகில் காத்திருக்கும் தண்டனைகள் குறித்தும் திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக எச்சரித்துள்ளன.

    ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடம் நீதியாக நடக்க வேண்டும், அநீதியாக நடக்கக் கூடாது, பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றன.

    இதையே திருக்குர்ஆன் (5:2) 'இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்' எனக்கூறுகிறது.

    உனக்கு அநீதி இளைத்தவனுக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டவர் நபிகள் பெருமான். அவரது நபி மொழி இதோ:

    'உனது சகோதரன், அவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், அநீதி இளைத்தவனாக இருந்தாலும் சரியே அவனுக்கு நீ உதவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! பாதிக்கப்பட்டவனுக்கு உதவிபுரிவது சரி! ஆனால், அநீதி இளைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது?' என்று கேட்டனர். 'ஆம்! அநீதி புரிந்தவனை அதில் இருந்து தடுப்பதும் அவனுக்கு செய்யப்படும் உதவியாகும்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    பாதிக்கப்பட்டவனுக்கு நீதியை பெற்றுத் தருவது எப்படி உதவியோ, அதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தியவனை அந்த பாவத்தில் இருந்து நல் வழிப்படுத்துவதும் உதவியே என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக அநீதி இளைப்பவனுக்கு மேலும் அவன் அநீதிக்கு துணை புரிவது, உதவி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என இஸ்லாம் கூறுகிறது.

    'அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் அநியாயத்திற்கு எவன் துணை புரிகின்றானோ அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நபிமொழி)

    இந்த உலக வாழ்க்கையிலே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வியாபாரங்களில் அதிக அளவு ஏமாற்றுத்தனமும், அநீதியும் இழைக்கப்படுகிறது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரித்து கண்டிக்கிறது:

    "ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

    இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் இறைவனை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;

    இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;

    ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் இருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

    அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;

    ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282).

    மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் மூலம் வியாபாரத்திலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் நாம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். இதை நமது வாழ்வில் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீதியுடன் நடந்து இறையருள் பெறுவோம், வாருங்கள்.

    • நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
    • இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.

    அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.

    வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.

    அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)

    அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.

    ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.

    திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.

    உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.

    தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.

    அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.

    இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.

    பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.

    உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.

    ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.

    இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.

    ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.

    பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.

    இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.

    "மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

    நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.

    இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.

    அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    • சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும்.
    • ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருகிறார்.

    சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். 'சவுந்தரம்' என்றாலும் அழகு என்றே பொருள்படும். அப்படி சுந்தரனாக, பெருமாள் வீற்றிருக்கும் ஓர் அற்புத தலம்தான், பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில். ஆதியில் இந்த திருத்தலம் சுந்தர வனம் என்றும், சமீவனம் (வன்னி மரக்காடு) என்றும் போற்றப்பட்டுள்ளது.

    பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருள் புரிகின்றார் சவுந்தரராஜப் பெருமாள்.

    ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானிடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன், நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.

    அவர் இந்திரனுக்கு '360 வெண் பூசணிக்காய்களை தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும்' என்று ஆலோசனை கூறினார்.

    அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை. பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மிகவும் மனம் வருந்தினான் இந்திரன். நாராயணரை வேண்டி நின்றான்.

    மனமிறங்கிய மலையப்ப சுவாமி, ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்? உடனடியாக இந்திரன் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான். திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு, பன்னீர் மரத்தடியில் சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜ பெருமாளாக, சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார்.

    ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு, ஏழு கலசங்களுடனான ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு கம்பீரமாக காணப்படுகிறது, ஆலயம். கணபதி ராஜகோபுரத்தின் கீழே வடக்கு முகமாக காட்சி தருகிறார். வெளிப் புறத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு, மிகவும் ரம்மியமாக உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. நேராக பலிபீடமும், துளசி மாடமும் உள்ளன. பின் கருடாழ்வார் கரம்குவித்தபடி நிற்கிறார்.

    இதைடுத்து சிற்ப வேலைகளுடன் முக மண்டபம் உள்ளது. அடுத்ததாக இரண்டாம் வாசலும், அதன் மேலே சிறிய மூன்று நிலை கோபுரமும் காணப்படுகிறது. அதன் உள்ளே நான்கு கால் மண்டபம், இடது புறம் கொலு மண்டபம் உள்ளன. வலப்புறம் விஷ்வக்ஷேனர் சன்னிதி உள்ளது. பக்கத்தில் யோகநரசிம்மர், கிருஷ்ணர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன. தொடர்ந்து ஆழ்வார்களிள் தரிசனம் தருகின்றனர்.

    மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி - பூதேவியர்களுடன் சவுந்தரராஜப் பெருமாள் அழகே வடிவாய் அருட்காட்சி தருகிறார்.

    மும்மூர்த்தி தலமாகத் திகழும் இப்பதியில் வடக்கு முகமாக பிரம்மாவும், தென்முகமாக ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு பின்புறம் சூரியனும், சந்திரனும் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தேஜோமயராய், அதிரூப சுந்தரனாய்த் திகழும் இப்பெருமாளை முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் ரிஷிகளும் மலர் தூவி வணங்கி நிற்பதாக ஐதீகம். தினமும் சூரிய ஒளியானது பெருமாள் மீது படர்வது ஓர் தனிச்சிறப்பாகும்.

    பெருமாள் சன்னிதிக்கு வலது புறம் சவுந்தரவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இடதுபுறம் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. வெளிப்புறம் தென்முகமாக சிறிய வடிவில், அழகர்கோவிலில் காட்சி தருவது போல் பதினெட்டாம்படி கருப்பர் வீற்றிருக்கிறார். இவரிடம் எவ்வித வேண்டுதல் வைத்தாலும் விரைவில் நடந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இந்த ஆலயம் சோழர்களின் கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது. மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரம் அன்று, இத்தல பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடக்கிறது. நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய வருடாந்திர விசேடங்கள் மட்டுமே இங்கு அனுசரிக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6 மணிமுதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாபநாசத்திற்கு அருகே 2 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் என்ற இவ்வாலயம் உள்ளது.

    • அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
    • காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-2 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி காலை 7.40 மணி வரை

    பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.12 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் பவனி. காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-உதவி

    கடகம்-பாசம்

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-பாராட்டு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- சுகம்

    மகரம்-நலம்

    கும்பம்-பயணம்

    மீனம்-கீர்த்தி

    ×