என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
- விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.
இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.
புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.
இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.
பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.
இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
- இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கட ஹர சதுர்த்தி.
- வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று).
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-6 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை இரவு 6.14 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 3.13 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கடஹர சதுர்த்தி. வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-சாந்தம்
கடகம்-களிப்பு
சிம்மம்-பெருமை
கன்னி-வெற்றி
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- கீர்த்தி
மகரம்-வரவு
கும்பம்-வாழ்வு
மீனம்-சிறப்பு
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-5 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 8.39 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: சதயம் காலை 6.23 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள்
விடியற்காலை 4.32 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமாள் கோவிலில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-சாதனை
கடகம்-உதவி
சிம்மம்-செலவு
கன்னி-ஈகை
துலாம்- நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- உயர்வு
மகரம்-உதவி
கும்பம்-விவேகம்
மீனம்-மாற்றம்
- 24-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.
- 26-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி
20-ந்தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.
* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டா ளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்,
21-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* கீழ்திருப்பதி எழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
23-ந் தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (சனி)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரம், இரவு பல் லக்கில் பவனி.
* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (திங்கள்)
* கிருஷ்ண ஜெயந்தி.
* திருநெல்வேலி சந்தான நவநீத கிருஷ்ணசுவாமி கோபால கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பரங்குன்றம், பழனி தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-4 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை இரவு 11 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.50 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று காயத்ரி ஜெபம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சனம். ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சுபம்
கடகம்-வரவு
சிம்மம்-வெற்றி
கன்னி-செலவு
துலாம்- தனம்
விருச்சிகம்-சுகம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-சோர்வு
கும்பம்-கண்ணியம்
மீனம்-பண்பு
- இன்று பவுர்ணமி. ஆவணி அவிட்டம்.
- சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமி பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-3 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பவுர்ணமி நள்ளிரவு 1.09 வரை பிறகு பிரதமை..
நட்சத்திரம்: திருவோணம் காலை 9.08 மணி வரை. பிறகு அவிட்டம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பவுர்ணமி. ஆவணி அவிட்டம். ரிக் யசூர் உபாகர்மா. சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமி பூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-பரிசு
கடகம்-புகழ்
சிம்மம்-கடமை
கன்னி-போட்டி
துலாம்- யோகம்
விருச்சிகம்-நலம்
தனுசு- தாமதம்
மகரம்-சுபம்
கும்பம்-தனம்
மீனம்-நலம்
- இன்று திருவோண விரதம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி பின்னிரவு 3.06 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: உத்திராடம் காலை 10 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று திருவோண விரதம். நடராஜர் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியால் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-வரவு
கடகம்-நட்பு
சிம்மம்-நற்சொல்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- தைரியம்
மகரம்-முயற்சி
கும்பம்-பொறுப்பு
மீனம்-கடமை
- இன்று சனி பிரதோஷம்.
- திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-1 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி மறுநாள் விடியற்காலை 4.46 மணி வரை. பிறகு சதுர்தசி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.35 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சனி பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஸ்ரீவரதராஜ மூலவர், உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீனிவாசனப் பெருமாள் கோவில்களில் காைல சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருப்பவித்திர உற்சவம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-வரவு
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- தாமதம்
மகரம்-வரவு
கும்பம்-சுபம்
மீனம்-கவனம்
- மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும்.
- விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.
ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், 'பெற்றோரை சுற்றி வந்தால், உலகத்தைச் சுற்றியதற்கு சமம்' என்று கூறி, பழத்தைப் பெற்றுக்கொண்டார், விநாயகர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், கனியை கையில் ஏந்தியிருக்கும் விநாயகரை நாம் தரிசிக்க முடியும்.
இந்த விநாயகரை வழிபட்டால், மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற நினைப்பவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வாழ்வை வளமாக்கும் அரச மரம்
எத்தனை மரங்கள் இருந்தாலும், 'மரங்களின் அரசன்' என்று போற்றப்படுவது அரசமரம் தான். இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்வதாக சொல்கிறார்கள். இந்த மரத்தை 'தேவலோகத்து மரம்' என்றும் வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும்.
அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரச மரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால், ஆயுள் வளரும்; ஆரோக்கியம் சீராகும்.
அரச இலைகளின் சல சலப்பு ஆலய மணி போல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப்பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.
- வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.
- இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.
திருமணத் தடை உள்ளவர்கள், தங்களின் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கேற்ற சிறப்பு தலங்களைத் தேர்ந்தெடுத்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.
'வாழ்க்கைத் துணை அமையவில்லையே', 'வயதாகிக் கொண்டே போகின்றதே', 'வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே' என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில் திருமணஞ்சேரி திருத்தல வழிபாடு, உங்களுக்கு தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
சுக்ர சேஷத்திரமான திருவரங்கம், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள் வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்புரியும் திருப்புல்லாணி, வள்ளி மணவாளன் அருளும் சிறுவாபுரி, தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டால் இல்லறம் நல்லறமாக முடியும்.
குரு பலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே. குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். 'வானவருக்கு அரசனான வளம் தரும் குருவே' என்ற குரு கவசத்தை குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும்.
- சிவன் கோவில் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது.
- 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சின்ன கிராமத்தில் எழுந்தருளியுள்ளது, ஞான பார்வதி உடனாய சிவலோகநாதர் ஆலயம். பதவி யோகம் தரும் இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடுநாடு எனப்படும் இந்த பகுதியை, வீரேந்திர சோழன் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு கீழே நிறைய சிற்றரசர்கள் அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.
ஒரு காலகட்டத்தில் வீரேந்திர சோழனின் அரசுக்கு கீழே இருந்த சிற்றரசுகள் அனைத்தும் போதிய வருவாய் இல்லாததால், அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. அப்பொழுது வீரேந்திரசோழன் அனைத்து சிற்றரசர்களையும் அழைத்து, 'உடனடியாக வரி கட்ட வேண்டும். இல்லை என்றால் உங்கள் தேசத்தை எங்கள் வசம் ஆக்கிக் கொள்வோம்' என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிற்றரசர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் வயதான சிவபக்தர் ஒருவர், இந்த பகுதிக்கு வந்தார். அவர் எப்போதும் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார்.
அவர் சிற்றரசர்கள் சிலரை சந்தித்து, உடனடியாக இந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீரும்' என்றார்.
இதையடுத்து அந்த பகுதியில் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிவாலயத்தை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்யும் வேலையைத் தொடங்கினர்.
அப்பொழுது ஒரு அசரீரி, மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோவில் அமைக்கும்படி சொல்லியது. அதன்படியே அந்த இடத்தில் கோவில் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் நெருங்கியது. அந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக சிற்றரசர்கள் அனைவரும் சென்று, வீரேந்திர சோழனை அழைத்தனர்.
ஆனால் வீரேந்திர சோழனோ, "எனக்கு தர வேண்டிய வரியை செலுத்தாமல், அனைவரும் சேர்ந்து ஒரு கோவிலைக் கட்டிவிட்டு, அதன் கும்பாபிஷேக விழாவிற்கு என்னையே அழைக்கவும் வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்" என்று கோபம் கொண்டார்.
அதற்கு சிற்றரசர்கள், "மன்னா.. இந்த இடத்தில் ஒரு கோவிலை அமைத்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று ஒரு முதியவர் கூறினார். சிவனின் விருப்பம் அது என்று அவர் கூறியதால்தான், நாங்கள் சிவாலயத்தைக் கட்டினோம்" என்றனர்.
உடனே வீரேந்திர சோழன், "அந்த முதியவரை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். ஆனால் அரண்மனை காவலர்கள் அந்த தேசம் முழுவதும் தேடிப்பார்த்து அந்த முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றரசர்கள் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று வீரேந்திர சோழன் கருதினார்.
அப்போது அங்கே ஒலித்த அசரீரி, 'சிவனடியார் வேடத்தில் வந்து, எனக்கான ஆலயத்தை அமைக்கும்படி சிற்றரசர்களிடம் சொன்னது நான்தான்' என்று கூறியது.
அப்போதுதான் வீரேந்திர சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் முதியவராக வந்தது சிவபெருமான்தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தன் தவறுக்கு வருந்திய வீரேந்திர சோழ மன்னன், இறைவனே இங்கு வந்து ஆலயம் அமைக்கச் சொல்லி இருப்பதை நினைத்து மகிழ்ந்தான். மேலும் அவன் சிற்றரசர்களைப் பார்த்து, "நீங்கள் ஆளும் பகுதி, இனி உங்களுடையது. அங்கே நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம். வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை" என்று கூறினார்.
மேலும் அனைத்து சிற்றரசர்களுக்கு, வீரேந்திர சோழனே முடி சூட்டி வைத்ததுடன், கோவில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்று மனம் மகிழ்ந்தார்.
ஆலய அமைப்பு
சிவன் கோவில் தெருவின் மையத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது. அந்த கோபுரத்தைக் கடந்து சென்றால், பிரதோஷ நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. அவற்றின் எதிரில் வலது பக்கம் சூரியன், இடது பக்கம் சந்திரன் உள்ளனர். இடது புறம் மேற்கு நோக்கியபடி ஞான பார்வதி அம்மன் அருளும் தனிச் சன்னிதி காணப்படுகிறது.
இந்த அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் நீலோத்பவ மலரையும் தாங்கியிருக்கிறார். மற்ற இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரை காட்டுகின்றன. அம்மனுக்கு நேர் எதிரில் நந்தியும், பலிபீடமும் இருக்கிறது.
அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் கிழக்கு திசை நோக்கியபடி பிரம்மபீடத்தின் மீது பாண லிங்கமாக சிவலோகநாதர் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தின் வலது பக்கத்தில் முதலில் நாம் தரிசிப்பது நால்வர் சன்னிதி.
அடுத்தபடியாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார்கள். இடது பக்கம் வள்ளி-தெய்வானையுடன் சிங்காரவேலர் அருளும் சன்னிதியும், கஜலட்சுமி, நிருத்த கணபதி உள்ள சன்னிதியும் உள்ளன.
அடுத்ததாக ஆலயத்தின் தல விருட்சங்களான வன்னி, சரக்கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. ஆம்.. இந்த ஆலயத்தில் மூன்று தல விருட்சங்கள் இருக்கின்றன. இந்த மரங்களின் அருகில் நாகர், சரபேஸ்வரர், நரசிம்மர் அருள்கின்றனர்.
கோஷ்டத்தில் அதை சுற்றியுள்ள சுவர்களில் 63 நாயன்மார் களின் வரலாறுகள், பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மூன்று நந்திகள் மூன்று பலிபீடங்கள் உள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.
வாரம் தோறும் ஞாயிறு அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான ராகு காலத்தில், இத்தல இறைவனுக்கு தேன், கரும்புச்சாறு, மஞ்சள் பொடி ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், பதவி உயர்வு, பறிபோன வேலை திரும்பக் கிடைப்பது போன்ற விஷயங்கள் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு புதிய வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில், விழுப்புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேல்பட்டாம்பாக்கம். இந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகிலேயே சிவலோகநாதர் கோவில் இருக்கிறது.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- வரலட்சுமி விரதம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-30 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 6.43 மணி வரை பிறகு துவாதசி நாளை விடியற்காலை 5.25 வரை
நட்சத்திரம்: மூலம் காலை 10.45 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த/சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வரலட்சுமி விரதம். சர்வ ஏகாதசி. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா. கோவை கந்தே கவுண்டர் சாவடி ஸ்ரீ மாகாளியம்மன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரிகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-செலவு
மிதுனம்-புகழ்
கடகம்-உழைப்பு
சிம்மம்-கடமை
கன்னி-கட்டுப்பாடு
துலாம்- பரிசு
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- ஓய்வு
மகரம்-உறுதி
கும்பம்-திடம்
மீனம்-பயணம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்