என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- இன்று கருட பஞ்சமி.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 24 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி நள்ளிரவு 1.44 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அஸ்தம் பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று கருட பஞ்சமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் தீர்த்தவாரி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் விருஷப சேவை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன், திருவாடனை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கோவில்களில் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் தேரோட்டம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-போட்டி
கடகம்- பொறுமை
சிம்மம்-வளர்ச்சி
கன்னி-உவகை
துலாம்- உண்மை
விருச்சிகம்-செலவு
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-முயற்சி
மீனம்-நற்செயல்
- ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி.
- நாக வழிபாடு செய்வது அவசியம்.
ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்த குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.
ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்த பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர்.
இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. அதில் தெற்கே நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.
நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு-கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம்.
அரச மரத்தடி, வேப்பமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாக பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
- இன்று நாக சதுர்த்தி.
- நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தபசுக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-23 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 11.47 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 11.35 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று நாக சதுர்த்தி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தபசுக் காட்சி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-விருத்தி
மிதுனம்-ஜெயம்
கடகம்-லாபம்
சிம்மம்-உயர்வு
கன்னி-முயற்சி
துலாம்- யோகம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- பரிவு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-நன்மை
மீனம்-நட்பு
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-22 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 9.51 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரம் இரவு 9.03 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று திருவாடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பவனி வரும் காட்சி. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவிலில் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-நிறைவு
கடகம்-தெளிவு
சிம்மம்-உண்மை
கன்னி-பதவி
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆசை
தனுசு- ஆர்வம்
மகரம்-பொறுமை
கும்பம்-ஓய்வு
மீனம்-இன்பம்
- அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
- பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
பெரியபாளையம்:
பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.
இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.
வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாகபஞ்சமி ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது.
- ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும்.
வட இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவிலும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக இருக்கிறது, 'நாக பஞ்சமி' விரதம். இது ஒவ்வொரு ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் ஒப்பற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வு வந்ததற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.
ஒரு சமயம் பரீட்சித் மகாராஜா வனத்திற்கு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது தன்னுடைய படைகளை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு தாகம் அதிகம் எடுத்ததால், தண்ணீரைத் தேடினார்.
ஓரிடத்தில் மகாசந்தர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறியாத பரீட்சித் மன்னன், அவரிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டான். ஆனால் அந்த முனிவர் அசைவற்ற நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.
இதனால் கோபம் கொண்ட மன்னன், அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை அவரது கழுத்தில் போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.
மகாசந்த முனிவரின் மகன், சிறந்த சிவ யோகி ஆவார். அவர் தன் தந்தைக்கு நடந்த அநீதியை யோக சித்தியின் மூலம் அறிந்தார். பின்னர், "என் தந்தை யோகத்தில் இருக்கும் பொழுது, அவரது கழுத்தில் பாம்பை போட்டு அவமதித்தவன் யாராக இருந்தாலும், 'தட்சகன்' என்ற நாகம் கடித்து ஏழு நாட்களுக்குள் இறந்து விடுவான்" என்று சாபமிட்டார்.
பரீட்சித் மகாராஜா, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். சர்ப்பத்தின் கடியில் இருந்து தப்பிக்க நாகசம் என்ற பட்டினத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதில் பாதுகாப்பாக இருந்தார். மணி, மந்திர, ஔஷதங்களில் சிறந்தவர்கள் அனைவரும் தன்னை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
7-வது நாள் பரீட்சித் மகாராஜாவை கடிப்பதற்காக, நாகங்களின் தலைவனான தட்சகன், வயதான வேதியர் உருவம் எடுத்து வந்து கொண்டிருந்தான். இதற்கிடையில் மகாராஜாவை நாகத்தின் விஷத்தில் இருந்து காப்பாற்றுபவர்களுக்கு லட்சம் பொன் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கேட்ட கஸ்யபன் என்ற மந்திரவாதியும் அங்கே வந்து கொண்டிருந்தான். வழியில் தட்சகனும், கஸ்யபனும் சந்தித்துக் கொண்டனர்.
மந்திரவாதியை சந்தித்த தட்சகன், தான் யார் என்பதை அவனிடம் கூறி தன்னுடைய வலிமையைக் காட்டினான். எதிரே இருந்த பசுமையான ஆலமரத்தை தட்சகன் கடிக்க, அடுத்த நொடியே அந்த ஆலமரம் எரிந்து சாம்பலானது.
அதைப் பார்த்த மந்திரவாதி, மந்திர ஒலியால் தீர்த்தமாக மாறியிருந்த நீரை, எரிந்துபோன ஆலயமரத்தின் மீது தெளித்தான். மறுநொடியே அந்த ஆலயம் பழையபடியே பசுமையாக உருமாறியது.
மந்திரவாதியின் வலிமையை உணர்ந்த தட்சகன், "கர்மவினையால் பரீட்சித் மகாராஜா இறக்க வேண்டும். அவன் தருவதாக சொன்ன லட்சம் பொன்னை நான் உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள்" என்று கூறி, லட்சம் பொன்னை கொடுத்து, மந்திரவாதியை திருப்பி அனுப்பினான்.
பின்னர் தட்சகன், மகாராஜா தங்கியிருந்த கோட்டையை அடைந்து, அங்கிருந்த காவலர்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அவர்கள், 'யாரும் அரசனை சந்திக்க முடியாது' என்று கூறி மறுத்துவிட்டனர்.
உடனே தட்சகன், காமரூப சக்தி உள்ள ஒரு நாகத்தை, ஒரு வேதியராக மாற்றினான். பின்னர் தான் ஒரு புழுவாக மாறி பழம் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான். அந்த வேதியர், காவலர்களிடம், "நாங்கள் மன்னனுக்காக தரும் மந்திரித்த பிரசாதத்தை அவரிடம் கொடுங்கள்" என்று கூறி பழக்கூடையை வழங்கினார்.
அதை எடுத்துச் சென்று மகாராஜாவிடம், காவலர்கள் கொடுத்தனர். அதில் இருந்த கனியை எடுத்து மன்னன் சாப்பிட்டான். அப்போது அதனுள் புழுவாக இருந்த தட்சகன், பரீட்சித் மகாராஜாவை கடித்ததும், அவர் இறந்தார்.
பரீட்சித் மகாராஜா இறந்ததும், அவருடைய மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அவர் காசி தேசத்து அரசனான சுவர்ண வர்ணாகரன் மகள் வபுஷ்டை என்பவளை திருமணம் செய்து கொண்டான்.
ஒரு முறை ஜனமேஜயன் அரசவைக்கு, உத்துங்கர் என்ற முனிவர் வந்தார். அவர், "அரசே.. உனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. உன் தகப்பனாரைக் கொன்ற தட்சகனை பற்றி உனக்குத் தெரியாதா?" எனக்கூறினார். பின்னர், "நீ ஒரு மிகப்பெரிய சர்ப்ப யாகம் செய்து தட்சகனை அழிக்க வேண்டும்" என்றார்.
அதைக் கேட்ட ஜனமேஜயன், "என்னால் சர்ப்பங்களின் தலைவனான தட்சகனை அழிக்க முடியுமா?" என கேட்க, அந்த முனிவரோ, "மன்னா.. உனக்கு தெரியாது. ஏற்கனவே நாகங்களுக்கு சாபம் உண்டு. எனவே நீ தைரியமாக அந்த யாகத்தை செய்" என்றார். அந்த சாபத்தைப் பற்றியும் மன்னனிடம் கூறினார்.
காசியப முனிவரின் மனைவிகளில் இருவர், கத்ரு மற்றும் வினதை. ஒரு சமயம் இவர்கள் இருவரும் வானில் உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையைக் கண்டனர். அந்த குதிரை கருப்பு நிறம் என்றாள், கத்ரு. வினதையோ அது வெள்ளை நிறம் என்று கூறினாள். இது அவர்களுக்குள் போட்டியாக மாறியது.
அப்போது கத்ரு, தன் பிள்ளைகளை அழைத்து, "ஓ சர்ப்பங்களே.. நீங்கள் விரைந்து சென்று, உச்சிஸ்ரவரஸ் குதிரையில் போய் ஒட்டிக் கொள்ளுங்கள். அப்போது அது கருப்பாக தெரியும்" என்றாள். அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் பல நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட கத்ரு, தனக்கு உதவி செய்ய மறுத்த பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் அனைவரும் பின்னாளில் ஒரு மன்னன் செய்யும் யாக குண்டத்தில் விழுந்து அழிவீர்கள்" என்று சாபமிட்டாள்.
உத்துங்கர் முனிவரிடம் இருந்து நாகங்களின் சாபத்தை அறிந்த ஜனமேஜயன், யாகம் செய்ய முன்வந்தான். யாகம் தொடங்கிவிட்டது. அப்போது தட்சகன் ஓடிச் சென்று இந்திரனை சரணடைந்து, அவனுடைய ஆசனத்தைச் சுற்றிக் கொண்டான்.
ஜனமேஜயன் யாகம் செய்யச் செய்ய, அந்த குண்டத்தில் வானில் இருந்து பல பாம்புகள் வந்து விழுந்தன. யாகத்தின் சக்தி, தட்சகனையும் குண்டத்தை நோக்கி இழுத்தது. இதனால் இந்திரனின் ஆசனமும், இந்திரனும் தட்சகனுடன் சேர்ந்து பூமிக்கு வந்தனர்.
அப்பொழுது இந்திரன், ஜரக்காரு முனிவரின் புதல்வரான ஆஸ்திகர் என்ற முனிவரை நினைத்து தியானம் செய்தார். உடனே ஆஸ்திக முனிவர் யாகசாலைக்கு வந்து, "தர்மாத்மாவான நீ இதை செய்ய வேண்டாம். இந்த யாகத்தை நிறுத்து" என்று ஜனமேஜயனை கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, உத்துங்க முனிவரும், ஜனமேஜய மகாராஜாவும் யாகத்தை நிறுத்தினர். இந்த நிகழ்வு நடந்தது நாக பஞ்சமி அன்றுதான். எனவே ஆண்டுதோறும் அந்த நாளில் நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நேபாளத்தில் நாக பஞ்சமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகங்களை பூஜிப்பதால், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும். அதோடு விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் நீங்கும்.
- நாளை ஆடிப்பூரம்.
- 9-ந்தேதி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
6-ந்தேதி (செவ்வாய்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கில் உலா.
* மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (புதன்)
* ஆடிப்பூரம்
* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கட்டு ஊஞ்சல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் வீதி உலா.
* சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் .
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சல் காட்சி.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளி அம்மன் தலங்களில் திருக்கல்யாணம்.
* இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
* சமநோக்கு நாள்.
10-ந்தேதி (சனி)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல்.
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
11-ந்தேதி (ஞாயிறு)
* சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேரமான் பெருமாள் கயிலாயம் செல்லுதல்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி மஞ்சள் நீராட்டு விழா.
* சமநோக்கு நாள்.
12-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சியம்மன் தங்க குதிரையில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-21 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை இரவு 8.04 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: மகம் இரவு 6.41 மணி வரை பிறகு பூரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப்பல்லக்கிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயுதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன், நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-நன்மை
சிம்மம்-சுகம்
கன்னி-பொறுப்பு
துலாம்- நலம்
விருச்சிகம்-கீர்த்தி
தனுசு- பெருமை
மகரம்-உழைப்பு
கும்பம்-உதவி
மீனம்-அன்பு
- மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-20 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை இரவு 6.36 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 4.36 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-நிறைவு
கடகம்-பரிவு
சிம்மம்-பணிவு
கன்னி-ஓய்வு
துலாம்- நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- சிந்தனை
மகரம்-செலவு
கும்பம்-அமைதி
மீனம்-வரவு
- பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
- அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்:
ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.
4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
- இன்று ஆடி அமாவாசை.
- சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-19 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மாலை 5.32 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 2.55 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. வத்ராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பரிவு
சிம்மம்-பரிசு
கன்னி-ஓய்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-நன்மை
தனுசு- செலவு
மகரம்-அமைதி
கும்பம்-வரவு
மீனம்-சாதனை
- இன்று ஆடிப்பெருக்கு.
- திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-18 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று போதாயன அமாவாசை. ஆடிப்பதினெட்டு. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஐந்து கருட சேவை. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், இரவு பாலகுதிரை வாகனத்திலும் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-உண்மை
கடகம்-சுகம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-உழைப்பு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- அமைதி
மகரம்-ஆதரவு
கும்பம்-விவேகம்
மீனம்-அன்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்