என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணி"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை ஆய்வு செய்த மேயர் மகேஷ் இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 41- வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில்ரூ. 25 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மண்டல தலைவர் அகஸ்டி னா கோகிலாவாணி, மாநக ராட்சி கவுன்சிலர் அனிலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அதிமுக தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.

    தாம்பரம்:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை 14 மீட்டருக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராஜ கீழ்ப்பாக்கம், மாடம் பாக்கம், கிழக்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. ரோடு இணைக்கப்படும். மாடம்பாக்கம் சாலையை அகலப்படுத்தினால் வாகன ஓட்டிகள் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தி நெரிசல் இல்லாமல் தென் சென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும் என்றார்.

    • மரங்கள் வெட்டி அகற்றம்
    • 1 கி.மீட்டருக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு வழியாக திருவண்ணா மலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.

    அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணா மலையில் இருந்து தண்ட ராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைசார்பில் தரைப்பாலம் மேம்பாலங்க ளாகவும், புதிய தார் சாலை பணிகள் ரூ.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பழனிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர், கொத்தூர் பகுதி களில் தரைப்பாலமாக இருந்த பாலங்கள் அனைத் தும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வரு கிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல், மல்லகுண்டா பகுதியில் விரிவாக்கம் செய்து 7 கி.மீ. சாலை அமைக்கும் பணியை அவர் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 16 அடி இடைநிலை சாலையாக மாற்றி அமைக் கும் பணிகளையும் அதனு டைய தரத்தையும் ஆய்வு செய்தார்.

    ஆம்பூர் பகுதியில் கைலாச கிரி, மிட்டாளம் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகளையும் விரை வில் டிக்க உத்தரவிட்டார். முடி மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    • உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
    • நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்

    நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

    சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.

    மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார். 

    • ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.

    குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
    • 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக .,செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    இதன்படி பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியில், வேலம்பாளையம் முதல் வலையபாளையம் வரை சாலை விரிவாக்க பணி, கரைப்புதூர் ஆதிதிராவிடர் காலனி முதல் அறிவொளி நகர் வரை சாலை பலப்படுத்துதல், மாணிக்காபுரம் முதல் அம்மாபாளையம் பிரிவு வரை சாலை விரிவாக்கம் செய்தல், செட்டிபாளையம் ரோடு மின் நகர் பகுதியில் சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் புதூர் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து பொள்ளாச்சி ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணி, நாசுவம்பாளையம் முதல் பணிக்கம்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, காமநாயக்கன்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்தல் பணி, உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதே போல பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டகவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பி. ஏ.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், நந்தினி சண்முகசுந்தரம், புனிதா சரவணன்,ரோஜாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு பிரசாந்த், ஆர்.ஆர்.ரவி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக .,நிர்வாகிகள் சாமிநாதன், குமார் ,அன்பரசன், துரைமுருகன், ஆட்டோ குமார், ராஜேஸ்வரன், பாலகுமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், துரைசாமி, சின்னப்பன், ரமேஷ், கோவிந்தராஜ், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, கனகராஜ், சிவாச்சலம், மலைப்பாளையம் சண்முகம், கோபி என்ற கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.70 லட்சத்தில் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.

    5-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் மூன்று வீதிகளில் தார் சாலை மற்றும் 6-வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    இந்த நிகழ்சியில் துணைத்தலைவர் வினோத் (எ) தீர்த்தகிரி, சிவன், மாறன் உள்பட ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல், –திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • விராலிகாட்டுவிளை, –வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழு தடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, தார் சாலைகள் அமைக்கும் பணி, புதிய சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல்,–திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியும், விராலிகாட்டுவிளை, – வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி யினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவல ர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொன்மனை-ஈஞ்சங்கோடு செல்லும் சாலையில் சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் தனேஷ் சேகர், உதவி இயக்குனர் விஜயா, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ரெமோன், அரசு வழக்கறிஞர் ஜான்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
    • இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்

    திருவண்ணாமலை:

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செப்டம்பர் மாதத்திற்குள் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளால் பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தேரோடும் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை பணிக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் சாலை பணிக்காக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதை மீறி சில வாகனங்கள் சென்று வருவதால் அதனை தடை செய்ய அறிவுறுத்தினார்.

    பெரிய தெரு முதல் காந்தி சிலை வரை நடைபெறும் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×