search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் ஆய்வு"

    • 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
    • அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா, உத்தரவின் பேரில் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள், மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    மேலும் குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டல்கள்நேரடியான வெயில் படாமல் விற்பனை செய்யவும், வண்டிகளில் சப்ளை செய்வோர் உரிய பாதுகாப்பான கூடாரமிட்ட அல்லது தார்பாய்கள் போர்த்தப்பட்ட வண்டிகளில் வெயில் படாமல் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவுள்ள 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் திறந்த நிலையில் அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் மாம்பழ வியாபாரிகள், விற்பனையாளர்கள் காய்கள் சீக்கிரம் விற்பதற்காக காய்களை பழுக்க வைக்க செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையும் உபயோகப்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டது.

    தவறுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி நடவடிக்கை மேற்கொள்ளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை செய்தார்.

    • தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
    • பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பதிவேடுகளை பார்வையிட்டு சோதனை நடத்தினார்
    • நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்து வமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று செல்லும் புறநோயாளி களிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவி உடல் நலம் விசாரித்து காலதாமதமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளித்து விரைவில் பள்ளி அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.

    மேலும் இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் கார்த்திகேயன், சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்து கொண்டு திடீரென நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஈரோடு வந்தார்.

    அப்போது அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    • நீதிமன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
    • ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார். சர்வே பணிகளை தாமதம் இன்றி செய்து தரவும், நீதிமன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் அங்குள்ள திருப்பூர் மாவட்டத்திற்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    கோவை,

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின்பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கோவை பூ மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பூ, பழம் மற்றும் காய்கறி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். வணிகர்கள் முத்திரையிடாமல் பயன்படுத்தி வைத்துள்ள எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.

    பயன்படுத்த முடியாத எடையளவுகளை மாற்றி புதிய எடையளவுகளை பயன்படுத்த வேண்டும். மேலும் எடையளவுகளை உரிய காலத்தில் மறு முத்திரையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.
    • அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.

    மேலும் நீர் நிலைகள், குடிநீர் வசதி, அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், மக்கும் குப்பை-மக்கா குப்பை, கழிவறை வசதிகள், உறிஞ்சி குழிகள், ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள், குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியின்போது, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி திட்ட அலுவலர்கள் முரளி, அனுராதா, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன், ஊராட்சிமன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலக செயற்பொறியாளர்கள் பிரபாவதி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    • பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    • பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தை சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டது. தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த பஸ் நிலையத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலையம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரிவர செய்யப்படுகிறதா பஸ் பயணிகளுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திடீரென கழிவறைக்குள் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ கழிவறையை தினமும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேணிக்காக்க வேண்டும்.

    பஸ் நிலையத்தை ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற நடவடிக்கை மேற்எகொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் தனிகவனம் பஸ் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அங்கு வந்த பயணிகளிடம் பஸ் நிலையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா கூடுதல் அடிப்படை வசதிகள் எதுவும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது

    கடலூர்:

    மீன்சந்தையில் விற்கப்படும் மீன்கள் நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒருசில வியாபாரிகள் ரசாயன கலவைகள் பூசி மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.

    இந்த ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன், கடலோர அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் அடங்கிய குழு கடலூர் துறைமுகத்தில் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? மீன்கள் தரமாக, சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை.

    மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
    • சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.

    திருப்பூர் 

    திருப்பூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால் அடிக்கடி குற்ற சம்பவம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ,உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மேலும் 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.

    • கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், பர்கூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவிகளிடம், உணவு, குடிநீர், மின்சார வசதிகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

    பின்னர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்த அவர், எந்தெந்த மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் படிக்கிறீர்கள் எனவும், அவர்களது கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    • சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 23-வது வார்டுட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் அவர் கேட்டறிந்தும், மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளையும் சத்யா கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    ×