search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரிய மாதா கோவில்"

    • திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே புனித உத்திரிய மாதா ஆலய வெள்ளி விழா நடைபெற்றது
    • மாதா கோவில் திருவிழா, தேர்பவனி

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம், செந்துறை பங்கு நல்லபிச்சன்பட்டி புனித உத்திரியமாதா ஆலய 25-வது ஆண்டு திருவிழா, ஆலய வெள்ளிவிழா மற்றும் மன்ற 25-வது ஆண்டுவிழா நடந்தது


    விழாவையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக நடந்த திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத்திருப்பலியை திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையிலும், செந்துறை பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ, மரிய பிரான்ஸிஸ் பிரிட்டோ ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு நிறைவேற்றினர். பின்னர், புனிதர்களின் 5 தேர் பவனி நடைபெற்றது.

    மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உத்திரிய மாதா, அந்தோணியார், தேர் மற்றும் மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார், சந்தியாகப்பர் திருச்சொரூபங்கள் தாங்கிய தேர்கள் பவனி வந்தன. இந்த விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் மற்றும் நல்லபிச்சன்பட்டி விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். செந்துறை பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×