என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 பேர் கைது"

    • ஈங்கூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே உள்ள எல்லமேட்டில் சிமெண்ட் கற்கல் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்ப தாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலாளராக பணி புரியும் பெருந்துறை அருகே உள்ள கொம்பக்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (40), எல்லை மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), கோவை வ. உ .சி, நகரைச் சேர்ந்த ராஜா (36), கோவை அஞ்சும் நகரைச் சேர்ந்த செல்வம் (54), கொம்ம கோவில் பகுதிைய சேர்ந்த முருகன் (48), கொம்ம கோவில் பகுதியை சேர்ந்த ரவி (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 சேவல் கள் மற்றும் ரூ.8,700-ஜ போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர சோதனை மேற்கொள்ள தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டதை அடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாடலாம்பட்டி, அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மல்லிகுட்டை அருகே காமலாபுரம் கிராமத்தில் மயானத்தின் அருகே உள்ள மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (வயது 35), கோபி (40), அருண்குமார் (35), கந்தசாமி (32), சிவசங்கர் (27), ராமியம்பட்டியை சேர்ந்த மேகவண்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

    இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    • 118 மதுபாட்டில்கள்-ரூ.2340 பறிமுதல் செய்தனர்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோத்தகிரி,

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊட்டியை சேர்ந்த நாகராஜ்(வயது 27), ராம்சந்த் பகுதியில் அனையட்டியை சேர்ந்த சந்திரன் (52), கப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (49), ராப்ராய் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), குமரவேல் (70)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 113 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊட்டி போலீசார் தேவர் சோலை பஜார் பகுதியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டிகள் மற்றும் ரூ.1990-யை பறிமுதல் செய்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒேர நாளில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2340-யை பறிமுதல் செய்தனர்.

    • 941 லாட்டரிகள் - ரூ.48,070 பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோவை

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி கோவை புறநகர் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதயில் சோதனை நடத்தினர். வடக்கிப்பாளையம் போலீசார் தேவம்பட்டி வலசு பகுதியில் சோதனை செய்த போது அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 58) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 45 லாட்டரி மற்றும் ரூ.420-யை பறிமுதல் செய்தனர். டி.காளிப்பாளையம் பகுதியில் லாட்டரி விற்ற ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (68) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 லாட்டரி மற்றும் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.

    மதுக்கரை போலீசார் போடிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த மோகன் ராஜ் (39) என்பவரை கைது செய்து 10 லாட்டரி மற்றும் ரூ.1650-யை பறிமுதல் செய்னர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜரர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையின் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திண்டுகல்லை சேர்ந்த நேசமணி (62) என்பரை 418 லாட்டரியுடம் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.200-யை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோன்று சோதனை சாவடியில் 360 கேரளா லாட்டரியுடன் வந்த திண்டுகல்லை சேர்ந்த கிருஸ்டோபர் (52) மற்றும் 60 லாட்டரியுடன் வந்த உடுமலையை சேர்ந்த கணேஷ் (52) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஸ்டோபரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு ரூ.48,070 மற்றும் 941 லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ௬ பேர் கைது செய்யப்பட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரால் தினமும் யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ருட்டி மேல்கவரப்பட்டில் கள்ள சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்தகோரி பெண்கள் உள்பட ஏராள மானோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். 

    சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என சாராய வியாபாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று பொது மக்களிடம் கூறினார். இந்த புகார் மீதும் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கடன் தர மறுத்ததால் ஆத்திரம்
    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), இவர் தனது மைத்துனர் சுரேஷ், உறவினர் வடிவேலு ஆகியோர் இணைந்து அசனமாபேட்டை கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    கடத்தி தாக்குதல்

    கடந்த 24-ந் தேதி இரவு பணிகளை முடித்துக் கொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு தென்னம்பட்டு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சர மாரியாக தாக்கி காருக்குள் இழுத்து போட்டு கடத்திச் சென்றனர்.

    காரில் இருந்த நபர்கள் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரன் க்கு போன் செய்து உங்கள் அண்ணனை கடத்தி உள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் எப்போது எங்கே தர வேண்டும் என மீண்டும் போன் செய்கிறோம் என கூறிவிட்டு போன சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.பிரம்மதேசம் புதூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிய ளவில் கடத்தப்பட்டதாக கூறப்ப ட்ட ராமச்சந்திரனை அந்த கும்பல் இறக்கிவிட்டுள்ளனர்.

    ராமச்சந்திரன் இடமிருந்து 50,000 பணத்தையும்3 சவரன் தங்கச் செயினையும் கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    கடன் தரமறுப்பு

    இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31)என்பவர் பைனான்ஸில் கடனாக பணம் கேட்டதற்கு ராமச்சந்திரன் பணம் தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.

    இதில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பிரபாகரன் தனது நண்பர்களான மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (37) சிறு கரும்பூர் ராஜேந்திரன் பிரசாத் (27), காஞ்சிபுரம் தாலுக்கா தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தமிழரசன் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ராமச்சந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.

    பொய்கைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காரை கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    தனிப்படை போலீசார் பிரபாகரன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், தமிழரசன், உடந்தையாக இருந்த கார் டிரைவர்மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆள் கடத்தல் வழக்கை துரித நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மாவட்டம் முழுவதும் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி போச்சம் பள்ளி முல்லை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேல்முருகன் (வயது 44) என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல மத்திகிரி பகுதியில் குலாம் முகமது (70) என்பவரையும், சூளகிரி பகுதியில் முருகேசன் (60), பைசல் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நாகராஜ் (55), மஞ்சுநாத் (35) மற்றொரு நாகராஜ் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    • அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது.   இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    ×