search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 பேர் கைது"

    • அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு சேவல்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த லிங்கசாமி மகன் ஜெகதீசன் (வயது 31),

    மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் சசிகுமார் (28), கோபிசெட்டிபாளை யம் வெள்ளப்பாளையம் சண்முகம் மகன் அபிஷேக் (23),

    அந்தியூர் இளங்கோமணி மகன் கார்த்தி, அவிநாசி குமாரசாமி மகன் சேதுபதி (21), மொடச்சூர் வேதநாயகம் மகன் சிவக்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.

    யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

    பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
    • பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் மிடிகிரிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் (20), ஓசூர் ரெயில் நிலைய சாலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஆலப்பட்டி அருகே பாசிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (48), லைன்கொல்லை சீனிவாசன் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற கெலமங்கலம் சுல்தான்பேட்டை ரகு (65), களர்பதி அச்சுதன் (37), கதவணை பெருமாள் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கே.ஆர்.பி. அணை போலீசார் மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், காந்தி நகரைச் சேர்ந்த அப்துல் (வயது19), சாந்தி நகரைச் சேர்ந்த அமாரன் (20), கிருஷ்ணா காலனியைச் சேர்ந்த ஜிப்மர் (19), புதிய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சித்திக் (19) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று மத்திகிரி போலீசார் டைட்டன் டவுன்ஷிப் மற்றும் ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் பொதுமக்களுக்கும், போக்குவரத்து இடையூறு செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், பவன்பிரகாஷ்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மத்திகிரி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,

    அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கொடி வேரி அணை பகுதி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரன் (43), சேதராமன் (30), சுரேந்திரன்(29), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் ராஜ் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அளுக்குளி தேவேந்திர நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த மதகன்குமார்(27) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் காசிபாளையம் இந்திரா நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த பரணி (25) என்பவர் மது அருந்தி பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படு த்தும் வகையில் செய ல்பட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தனர். 

    காரைக்கால் நகர் பகுதியில், பணம் வைத்து சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுபடுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது.

    புதுச்சேரி:

    சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுப்படுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியைச்சேர்ந்த விக்னேஸ் (வயது23), சிவபாலன்(24),ராஜேஷ்(22), ராமன்(20), ஐயப்பன்(24) ரஞ்சித்(24) 6 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1000 மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது.   இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    • மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மாவட்டம் முழுவதும் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி போச்சம் பள்ளி முல்லை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேல்முருகன் (வயது 44) என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல மத்திகிரி பகுதியில் குலாம் முகமது (70) என்பவரையும், சூளகிரி பகுதியில் முருகேசன் (60), பைசல் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நாகராஜ் (55), மஞ்சுநாத் (35) மற்றொரு நாகராஜ் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கடன் தர மறுத்ததால் ஆத்திரம்
    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), இவர் தனது மைத்துனர் சுரேஷ், உறவினர் வடிவேலு ஆகியோர் இணைந்து அசனமாபேட்டை கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    கடத்தி தாக்குதல்

    கடந்த 24-ந் தேதி இரவு பணிகளை முடித்துக் கொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு தென்னம்பட்டு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சர மாரியாக தாக்கி காருக்குள் இழுத்து போட்டு கடத்திச் சென்றனர்.

    காரில் இருந்த நபர்கள் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரன் க்கு போன் செய்து உங்கள் அண்ணனை கடத்தி உள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் எப்போது எங்கே தர வேண்டும் என மீண்டும் போன் செய்கிறோம் என கூறிவிட்டு போன சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.பிரம்மதேசம் புதூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிய ளவில் கடத்தப்பட்டதாக கூறப்ப ட்ட ராமச்சந்திரனை அந்த கும்பல் இறக்கிவிட்டுள்ளனர்.

    ராமச்சந்திரன் இடமிருந்து 50,000 பணத்தையும்3 சவரன் தங்கச் செயினையும் கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    கடன் தரமறுப்பு

    இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31)என்பவர் பைனான்ஸில் கடனாக பணம் கேட்டதற்கு ராமச்சந்திரன் பணம் தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.

    இதில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பிரபாகரன் தனது நண்பர்களான மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (37) சிறு கரும்பூர் ராஜேந்திரன் பிரசாத் (27), காஞ்சிபுரம் தாலுக்கா தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தமிழரசன் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ராமச்சந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.

    பொய்கைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காரை கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    தனிப்படை போலீசார் பிரபாகரன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், தமிழரசன், உடந்தையாக இருந்த கார் டிரைவர்மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆள் கடத்தல் வழக்கை துரித நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    • பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ௬ பேர் கைது செய்யப்பட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரால் தினமும் யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ருட்டி மேல்கவரப்பட்டில் கள்ள சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்தகோரி பெண்கள் உள்பட ஏராள மானோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். 

    சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என சாராய வியாபாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று பொது மக்களிடம் கூறினார். இந்த புகார் மீதும் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×