என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியை"
- திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி அதிகமுறை பயணமாகி வந்தார்.
- 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருப்பூர்:
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக முறை பயணம் செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து இரவு புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் செல்லும் மார்த்தாண்டம் அரசு பஸ்சில், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி (வயது 26) அதிகமுறை பயணம் செய்து வந்தார்.
சமீபத்தில் நடந்த பரிசு போட்டி குலுக்கலில் இவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உள்ளிட்ட கிளை மேலாளர்கள் வழங்கினர்.
பயணி கஸ்தூரி கூறுகையில், பாதுகாப்பான பயணம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது. அரசு பஸ்களை நம்பி, இரவில் பயணிக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
- நாம் அதிக மரங்களை நட வேண்டும்.
நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார்.
பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.
- பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
- பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.
- ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 17 ஆண்டுகளாக சந்தான லட்சுமி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நீண்ட நாட்களாக மாணவ, மாணவிகளுடன் நல்ல முறையில் பழகி எளிமையான முறையில் கல்வி கற்பித்து வருவதால் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவும், மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என தடுத்து கதறி அழுதனர். பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.
பள்ளி குழந்தைகள் ஆசிரியையை சூழ்ந்துகொண்டு தேம்பி தேம்பி அழுதனர். மிஸ் நீங்க போகாதீங்க மிஸ் ப்ளீஸ்.. ப்ளீஸ்.... என்று சில குழந்தைகள் மழலை குரலில் அழுது கொண்டே கூறினர்.
அதனை பார்த்து ஆசிரியருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டே பள்ளி குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
அதனை பார்த்த மற்ற ஆசிரியர்களுக்கும் கண் கலங்கியது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர். தங்கள் பிள்ளைகள் தேம்பி தேம்பி அழுவதை கண்டு அவர்களுக்கும் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.
எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு வர மாட்டோம் என அடம்பிடித்து வந்தனர். இந்த ஆசிரியை வந்த பிறகு ஆர்வமுடன் காலையிலேயே எழுந்து பள்ளிக்கு புறப்பட்டு வந்து விடுவார்கள்.
கடந்த 17 வருடமாக எங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது திடீரென ஆசிரியை மாற்றப்பட்டுள்ளார்.
மற்றொரு பகுதியில் உள்ள குழந்தைகள் நலனுக்காக அவர் மாற்றப்படுவதாக கூறியுள்ளனர்.
அப்படியானால் எங்கள் குழந்தைகளின் நிலைமை என்னவாகும். அதை நினைத்து பார்க்க வேண்டும். ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்ததது முதல் வீட்டில் சரியாக சாப்பிடாமல் குழந்தைகள் அடிக்கடி அழுகின்றனர்.
அவர்களை தேற்ற முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது.
அந்த ஒரு வருடமாவது இங்கேயே பணியாற்ற வாய்ப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்துள்ளார்.
- மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை அந்தரங்கமாக வீடியோ எடுத்து 10 வகுப்பு மாணவர்கள் நால்வர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மதுரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியொன்றில் வேலை பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை செய்துவந்த்துள்ளார்.
பள்ளி முடிந்ததும் வீட்டில் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்துள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியை பாத்ரூமில் குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளான். அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மாணவன் சக மாணவர்கள் மூன்று பேருக்கு ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பிவைத்துள்ளான். அந்த மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார்.
ஆனால் மிஷன் சக்தி எனப்படும் தற்கொலைக்கெதிராக கவுன்சிலிங் வழங்கும் அமைப்பு அவருக்கு உதவியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வீடியோ எடுத்த 10 வகுப்பு மாணவனும் அவனக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
- வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் கைது மோசடியால் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்சில் சேர்ந்த அரசு கெஸ்ட் ஆசிரியர் ரேஷ்மா பாண்டே [35 வயது] கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்தி உயிரிழந்தார்.
ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி இணைய மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது செய்யபோவதாக அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரஸ்னா தாக்கூர் தெரிவித்தார்.
மோசடிக்காரர்கள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் விஷத்தை உட்கொண்ட பிறகு, அவரது உறவினர்கள் அவரை ரேவாவில் உள்ள சஞ்சய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் மைத்துனர் வினோத் பாண்டே கூறுகையில், சைபர் மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 22,000 மற்றும் ரூ. 5,500 தொகையை ஆசிரியை பரிமாற்றம் செய்ததாகக் கூறினார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக தெரிவித்தார்.
சைபர் மோசடி, டிஜிட்டல் கைது மற்றும் பிற வகையான இணைய மோசடிகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியை தற்கொலை சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது
- பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது.
- பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை.
"பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆசிரியை தீபாலி அந்த வீடியோவில், "இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. என்னை இந்தியாவில் எதாவது ஒரு ஊரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக சேர்த்திருக்கலாம்.
கொல்கத்தாவை பலருக்கும் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நான் அங்கு செல்லவும் தயாராக இருந்தேன். மேற்குவங்கத்தில் எங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவாயில்லை. எனது நண்பர் டார்ஜிலிங்கில் பணியமர்த்தப்பட்டார், உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மற்றொரு நண்பர் வடகிழக்கில் உள்ள சில்சாரில் பணியமர்த்தப்பட்டார். இன்னொரு நண்பர் பெங்களூரில் இருக்கிறார். ஆனால் ஒரு மோசமான மாநிலத்தில் (பீகாரில்) என்னை பணியமர்த்தியதற்கு என் மேல் அவர்களுக்கு என்ன விரோதம்?
என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும். என்னை கோவாவிலோ ஒடிசாவிலோ அல்லது தென்னிந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் பணியமர்த்திருக்கலாம். ஏன் யாரும் செல்ல விரும்பாத லடாக்கில் கூட பணியமர்த்திருக்கலாம். நான் அங்கு கூட செல்ல தயாராகவே இருந்தேன்.
நான் கேலி செய்யவில்லை, பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது. நான் இங்கே இருப்பதால், அதை தினமும் பார்க்கிறேன். பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. பீகார் இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என்று பேசியுள்ளார்.
ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ வைரலாக, பீகார் எம்பி சாம்பவி சவுத்ரி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணையருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது.
- வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத போது வேதாரண்யம் மீன், உப்புக்கு இந்த ரயிலே பிரதானம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ரயில் தடம் ரூ. 288 கோடி செலவில் 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றும் வேலை தொடங்கியது.
இப்போது வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.
நேற்று 22.10.22 திருத்து றைப்பூ ண்டியிலிருந்து மதியம் 1 மணிக்குசோதனை ஓட்டம் தொடங்கி அகஸ்திய ம்பள்ளி வரை மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதனை வரவேற்கும் நிகழ்ச்சியாக அண்டா்காட்டை சோ்ந்த பல்வேறு விருதுகளை பெற்ற நல்லாசிரியர் மு.வசந்தா பள்ளி மாணவ, மாணவி்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ரயில் சேவையை வரவேற்கும் வகையிலங கவிதை பாடி வரவேற்றார்.
ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, தடக் தடக் ரயிலே ஓடி வா, தங்க ரதமே ஓடி வா, கூக்கூ ரயிலே ஓடி வா, கூட்ஸ் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ஆதிரெங்கனை வழிபட்டு வா, மேலமருதூரில் மிதந்து வா, கரியாப்பட்டினத்தை கடந்து வா, குரவப்புலத்தில் நின்று வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, நெய்விளக்கின் ஒளி கொண்டு வா, தோப்புத்துறையை தொட்டு வா, திருமறைக்காட்டு மான் போல் வா, அகத்தியா் பாதம் தொட்டிட வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா என கவிதை பாடியுள்ளார்.
- நகை பறிப்பில் ஈடுபட்டது கேரள கொள்ளையர்கள்?
- 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
நாகர்கோவில்:
நித்திரவிளை முக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்த வர் ஆஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரமிளா (வயது 30).
இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வரு கிறார். நேற்று மாலை கிராத்தூர் பெருமாவிளை பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரமிளா மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கிராத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பிரமிளா கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை பறித்தனர்.
இதில் பிரமிளா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.பின்னர் அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து நித்திரவிளை போலீசில் பிரமிளா புகார் செய்தார். புகாரின் பேரில் நித்திர விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பிரமிளாவிடம் கொள் ளையர்கள் குறித்து அடை யாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சி களை ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்திருந்த நபர்கள் பிரமிளாவிடம் நகை பறிப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை. கொள்ளையர்கள் கேரளா நோக்கி தப்பி சென்றுள்ளனர். எனவே அந்த கொள்ளை கும்பல் கேரளாவை சேர்ந்தவர் களாக இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும் ஆசிரியை தனது பழக்கத்தை மாற்றவில்லை
- பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில் மதுபாட்டிலைக் கொண்டு வந்து, மது அருந்தியபடி பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும், அதனை கங்கா லக்ஷ்மம்மா கண்டுகொள்ளவில்லையாம். தொடர்ந்து மது குடித்துவிட்டு பாடம் எடுத்து வந்ததால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தனர். அப்போது, மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
- பரமக்குடி அருகே ஆசிரியை கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.
- தனது தோழியின் திருமணத்திற்க்கு செல்வதாக கூறி சென்ற பொன்மாரி பின்னர் வீடு திரும்பவில்லை.
ராமநாதபுரம்
பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் கவிதா(வயது 59). இவர் நயினார்கோவில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது.
2-வது மகள் பொன்மாரி செல்வி எம். ஏ.,பி.எட் படித்து விட்டு எமனேஸ்வரம் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.
இந்த நிைலயில் கடந்த 5-ந் தேதி தனது தோழியின் திருமணத்திற்க்கு செல்வதாக கூறி சென்ற பொன்மாரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கவிதா எமனேஸ்வரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எதிர் வீட்டில் வசித்து வந்த அருள் ராஜா மகன் ராஜா (வயது25) என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்துடன் கட்டாயபடுத்தி மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
- ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட காதர் பேட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் விசாலாட்சி. இவர் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார். இந்தநிலையில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தன் சொந்த முயற்சியில் தொடங்கி உள்ளார்.
இந்த திட்டமானது மழலையர்களின் பிறந்தநாளன்று சிறிய தொகுப்பில் பென்சில், அளவுகோல்,ரப்பர் ,சார்ப்னர் போன்ற கல்வி உபகரணங்கள் கொண்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியை விசாலாட்சி முயற்சி எடுத்துள்ளார். அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.